வெள்ளிக்கிழமை, ஜூன் 26
Shadow

Author: Kodanki

சென்சாரில் ‘யு/ஏ’: பிப்.9-ம் தேதி வெளியாகிறது ‘கலகலப்பு 2’

சென்சாரில் ‘யு/ஏ’: பிப்.9-ம் தேதி வெளியாகிறது ‘கலகலப்பு 2’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
'கலகலப்பு 2' படத்துக்கு சென்சாரில்  யு/ஏ சான்றிதழ் கிடைத்ததை தொடர்ந்து, பிப்ரவரி 9-ம் தேதி படம்  வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. டிசம்பரில் 'சங்கமித்ரா' படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக, அக்டோபரில் 'கலகலப்பு 2' படப்பிடிப்பைத் தொடங்கினார் சுந்தர்.சி. அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு தயாரித்து வந்தார். பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டது படக்குழு. ஆனால், பல்வேறு படங்கள் வெளியானதால் பொறுமை காத்தது. இறுதிக்கட்டப் பணிகள் அனைத்துமே முடிவடைந்ததைத் தொடர்ந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். 'யு/ஏ' சான்றிதழ் கிடைக்கவே, பிப்ரவரி 9-ம் தேதி 'கலகலப்பு 2' வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. காரைக்குடி, காசி மற்றும் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் ஜீவா, ஜெய், கத்ரீன் தெரசா மற்றும...
தனிக்கட்சி தொடங்கித்தான் ஆக வேண்டும்: டி.டி.வி.தினகரன்

தனிக்கட்சி தொடங்கித்தான் ஆக வேண்டும்: டி.டி.வி.தினகரன்

HOME SLIDER, NEWS, politics
கோவையில் இருந்து வந்த டி.டி.வி.தினகரன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி:- பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறதே? பதில்:- 60 சதவீதம் பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவற்றினால் பணப்புழக்கமே இல்லாமல் தொழிலதிபர்கள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பஸ் கட்டண உயர்வினால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே அரசு பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். கேள்வி:- ஜெயலலிதா மரணம் தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதால் உங்களையும் திவாகரனையும் கைது செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளரே? பதில்:- கோமாளிகளுக்கு பதிலளித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. கேள்வி:- ஜெயலலிதா மரணத்தில் தொடர்ந்து உங்கள் குடும்பத்தில் மாறுபட்ட கருத்து...
நையாண்டி, நக்கல் விவகாரத்தில் சூர்யாவிடம் தனியார் டிவி மன்னிப்பு கேட்டது..!

நையாண்டி, நக்கல் விவகாரத்தில் சூர்யாவிடம் தனியார் டிவி மன்னிப்பு கேட்டது..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமித்ப் பச்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமிதாப்புடன் சூர்யா நடிக்க உள்ளதை கிண்டல் அடித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இரு தொகுப்பாளினிகள் பேசினர். சூர்யாவின் உயரத்தை கேலி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. இது சூர்யா ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த தொகுப்பாளினிகளை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி, நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. என்று சூர்யா கூறியிருக்கிறார். இந்நிலையில...
சூர்யாவிடம் கதை சொல்லனுமா… அப்ப குறும்படம் எடுங்க… பரிசும் உண்டு வாய்ப்பும் உண்டு..!

சூர்யாவிடம் கதை சொல்லனுமா… அப்ப குறும்படம் எடுங்க… பரிசும் உண்டு வாய்ப்பும் உண்டு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
கோலாகலமாகத் தொடங்கிய ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2    "குறும் படங்களை பெரிய திரையில் திரையிடப்படக்கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது" இயக்குநர் ராம்   மூவிபஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும் பட போட்டி குறித்த தொடக்கவிழா இன்று சென்னை ஜி ஆர் டி கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது.   இந்த விழாவில் முன்னணி இயக்குநர்களான ராம், கார்த்திக் நரேன், நித்திலன், அருண் பிரபு புருஷோத்தமன் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.   இந்த போட்டி குறித்து க்யூப் சினிமா டெக்னாலாஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி அரவிந்த் பேசுகையில்,‘ தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த குறும் பட போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியின் தொடக்கவிழாவிற்கு வருகைத்தந்த அனைத்து இளந் தலைமுறை இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறே...
தீபிகாவை உயிரோடு புதைப்போம் – ராஜ்புத் அமைப்பு பகிரங்க கொலை மிரட்டல்

தீபிகாவை உயிரோடு புதைப்போம் – ராஜ்புத் அமைப்பு பகிரங்க கொலை மிரட்டல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
பத்மாவத் திரைப்படம் வெளியானால், தீபிகா படுகோனே-வை உயிரோடு புதைப்போம் என்று ராஜ்புத் அமைப்பின் தலைவர் தாகூர் அபிஷேக் சோம் என்பவர் பகிரங்க கொலைமிரட்டல் விடுத்துள்ளார். சித்தூர் ராணி பத்மினியின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள படம் பத்மாவத். பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, சாஹித் கபூர், ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஹிந்துத்துவா அமைப்புக்களும், ராஜபுத்திர சாதியவாத அமைப்புக்களும் இப்படத்தை வெளியிடக் கூடாது என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நீதிமன்றம் மூலம் படத்திற்கு தடை வாங்கவும் அந்த அமைப்புக்கள் முயற்சி மேற்கொண்டன. அது பலிக்கவில்லை. இந்திய தணிக்கை வாரியம் அனுமதி அளித்து விட்ட நிலையில், நாடு முழுவதும் ‘பத்மாவத்’ படத்தை வெளியிடுவதற்கு எந்த...
பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக கமல்ஹாசன் முதல் போராட்ட அறிவிப்பு… அரசியல் போராட்ட ஆரம்பமே உண்ணாவிரத்த்தில் தொடங்குகிறது..!

பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக கமல்ஹாசன் முதல் போராட்ட அறிவிப்பு… அரசியல் போராட்ட ஆரம்பமே உண்ணாவிரத்த்தில் தொடங்குகிறது..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக கமல்ஹாசன் நற்பணி இயக்கம் உண்ணாவிரதப் போராட்டம் தொடரப்போவதாக அறிவித்துள்ளது. பட்டாசு தொழிலுக்கு ஆதரவு கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். களத்தில் சிஐடியு தீவிரமாக நிற்கிறது. நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.இதுமட்டுமின்றி ரூ.350 கோடிக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். வேலையில்லாமல் அன்றாட செலவைக் கூட சமாளிக்க முடியவில்லை என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இன்று அவர்களது போராட்டம் 25 ஆவது நாளை எட்டியுள்ளது. இருப்பினும் பட்டாசு உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில் கந்தக பூமியான சிவகாசியில் போராடும் பட்டாசு தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கமல்ஹாசன் நற்...
150 ஆண்டுக்குப்பின் நீல நிற சந்திர கிரகணம்;ஜனவரி 31-இல் பார்க்கலாம்…!

150 ஆண்டுக்குப்பின் நீல நிற சந்திர கிரகணம்;ஜனவரி 31-இல் பார்க்கலாம்…!

HOME SLIDER, NEWS, செய்திகள்
150 ஆண்டுகளுக்குப் பிறகு- அரிதான முழு சந்திர கிரகணம், ஜனவரி 31-ஆம் தேதி ஏற்படுகிறது. ‘நீல நிலா’ என்று அழைக்கப்படும் இந்த சந்திர கிரகணத்தை, வெறும் கண்களால் காணலாம். 2018-ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஒன்றிற்கு மேற்பட்ட முறைகள் சூப்பர் ப்ளூ ப்ளடு நிலவு (super blue blood) நிலவு வானில் தோன்றவிருப்பதாக நாசா தெரிவித்திருந்தது. இதனடிப்படையில் புத்தாண்டில் ஜனவரி முதல் தேதியில் ஒன்றும், ஜனவரி 31-ஆம் தேதி மற்றொன்றுமாக சூப்பர் ப்ளூ ப்ளடு நிலவு தோன்ற உள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி பவுர்ணமி என்பதால் வழக்கமான நிலாவை விட பெரிய அளவிலான சூப்பர் நிலா தெரிந்தது. ஜனவரி 31-ஆம் தேதியன்று பவுர்ணமி நாளில் சந்திர கிரகணம் என்பதால் நீல நிலா தோன்ற உள்ளது. இது போல ஒரு நீலநிற சந்திரகிரகணம் கடைசியாக மார்ச் 31, 1866-ஆம் ஆண்டு நிகழ்ந்தது. என்பது குறிப்பிடத்தக்கது.2018-ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் இது. ஜனவரி 31-ஆம் தேதி ந...
சூர்யா பற்றிய நக்கல் நையாண்டிக்கு நடவடிக்கை தேவை… டிவி சேனலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்

சூர்யா பற்றிய நக்கல் நையாண்டிக்கு நடவடிக்கை தேவை… டிவி சேனலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமித்ப் பச்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமிதாப்புடன் சூர்யா நடிக்க உள்ளதை கிண்டல் அடித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இரு தொகுப்பாளினிகள் பேசினர். சூர்யாவின் உயரத்தை கேலி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. இது சூர்யா ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த தொகுப்பாளினிகளை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி, நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. என்று சூர்யா கூறியிருக்கிறார். இந்நிலைய...
பத்மாவதி படம்: பாஜக ஆளும் மாநிலங்கள் விதித்த தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது ஏன்..?

பத்மாவதி படம்: பாஜக ஆளும் மாநிலங்கள் விதித்த தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது ஏன்..?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இம்மாதம் 25 ஆம் தேதி, பத்மாவதி திரைப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்கள் தணிக்கை துறை சான்றிதழ் பெற்ற இப்படத்திற்கு தடை விதித்தன. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அணுகினர் இப்படகுழுவினர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, இப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தது. நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரும் இந்த அமர்வில் இடம் பெற்றிருந்தனர். அந்த தீர்ப்பில்,"மாநிலங்கள் படத்திற்கு தடை விதிப்பது, கூட்டாட்சியை ஒழிப்பதற்கு ஒப்பானது. இது ஒரு முக்கியமான விஷயம். யாருக்காவது ஏதேனும் பிரச்னை என்றால், நிவாரணத்திற்காக அதற்கான உரிய தீர்ப்பாயத்தை அணுகலாம். மாநிலங்கள் ஒரு படத்தின் உள்ளடக...