வியாழக்கிழமை, ஜூலை 16
Shadow

Author: Kodanki

டி.டி.வி தினகரன் வெற்றியை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு..!

டி.டி.வி தினகரன் வெற்றியை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டி.டி.வி தினகரன் வெற்றியை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு கடந்தாண்டு டிசம்பர் 21-ம் தேதி சென்னை ஆர்,கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில், சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றார். இந்நிலையில், வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் தினகரன் வெற்றி பெற்றதற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றிருக்க முடியாது. அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கிய பிறகு ஆர்.கே.நகரில் அதிக அளவில் குக்கர்கள் கிடைத்துள்ளன. 30 லட்சம் ரூபாய் அந்த தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே, அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தினகரன் சட்டபேரவைக்கு செல்ல தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள...
அண்ணாதுரையால் 4 கோடி நஷ்டம்… விஜய் ஆண்டனிக்கு ரெட் தடை… சிக்கலில் கிருத்திகாவின் காளி..!

அண்ணாதுரையால் 4 கோடி நஷ்டம்… விஜய் ஆண்டனிக்கு ரெட் தடை… சிக்கலில் கிருத்திகாவின் காளி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அண்ணாதுரையால் 4 கோடி நஷ்டம்... விஜய் ஆண்டனிக்கு ரெட் தடை... சிக்கலில் கிருத்திகாவின் காளி..! நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகதன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி. வெளி தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க எட்டு கோடி சம்பளம் கேட்கும் இவரிடம்தயாரிப்பு செலவுக்கு 6 கோடியையும் கொடுத்தால்முதல் பிரதி அடிப்படையில் படம் எடுத்து கொடுப்பார் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் அண்ணாதுரை.இப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை 6.50 கோடிக்கும், கேரள உரிமையை 32 லட்சத்திற்கும் அலெக்சாண்டர் என்பவர் வாங்கினார், விஐய் சேதுபதி நடிப்பில் தயாரான கருப்பன் படத்தை ஏற்கெனவே வாங்கி ரீலீஸ் செய்திருந்தார். அண்ணாதுரைபடம் வெளியான முதல் நாளே வசூலில் மூச்சு திணறியது.தமிழ்நாட்டில் 2.50 கோடி மட்டும் வசூல் செய்த அண்ணாதுரை 4 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவில் 10 லட்சம் வசூல் செய்து ...
முழுதும் வெளி நாட்டில் ஹாலிவுட் கலைஞர்களோடு மாதவனை இயக்கும் சற்குணம்..!

முழுதும் வெளி நாட்டில் ஹாலிவுட் கலைஞர்களோடு மாதவனை இயக்கும் சற்குணம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
முழுதும் வெளி நாட்டில் ஹாலிவுட் கலைஞர்களோடு மாதவனை இயக்கும் சற்குணம்..! சற்குணம் இயக்கத்தில் மாதவன் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு முழுக்க காடுகள் சார்ந்த பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. 'விக்ரம் வேதா' படத்தைத் தொடர்ந்து 'மகளிர் மட்டும்' படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்தார் மாதவன். தமிழில் பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தாலும், எதிலுமே ஒப்பந்தமாகாமல் இருந்தார். நீண்ட நாட்களாக சற்குணம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். தற்போது மாதவன் அப்படத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தமாகி இருக்கிறார். முழுக்க வெளிநாடுகளிலும், அடர்ந்த காடுகளுக்குள்ளும் இப்படத்தை உருவாக்கவுள்ளார்கள். கணேஷ் தயாரிக்கவுள்ள இப்படத்தை இயக்குவது மட்டுமன்றி, இணை தயாரிப்பாளராகவும் சற்குணம் பொறுப்பேற்கிறார். மாதவனை இயக்கவிருப்பது குறித்து சற்குணம் கூறியிருப்பதாவ...
அடுத்தடுத்து சர்ச்சைக்குள் சிக்கும் ரஜினி அரசியல் முதலில் தாமரை… இப்போது பாபா முத்திரை..! உரிமை கொண்டாடும் மும்பை நிறுவனம்

அடுத்தடுத்து சர்ச்சைக்குள் சிக்கும் ரஜினி அரசியல் முதலில் தாமரை… இப்போது பாபா முத்திரை..! உரிமை கொண்டாடும் மும்பை நிறுவனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அடுத்தடுத்து சர்ச்சைக்குள் சிக்கும் ரஜினி அரசியல் முதலில் தாமரை... இப்போது பாபா முத்திரை..! உரிமை கொண்டாடும் மும்பை நிறுவனம் அரசியல் அறிவிப்பை தொடர்ந்து ரஜினிகாந்த்துக்கு பல இடங்களில் இருந்து ஆதரவும், சில இடங்களில் இருந்து எதிர்ப்பும் அரசியல் தலைவர்களிடத்தில் இருந்து எழுந்துள்ளது. ரசிகர்கள் மட்டத்திலும் ஒரு மித்த கருத்து எதுவும் இன்னமும் உருவாகவில்லை. அதிலும், அரசியல் அறிவிப்பு செய்த நாளில் இருந்தே ரஜினிகாந்த் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ரசிகர்கள் சந்திப்பின்போது எப்போதுமே ரஜினியின் மேடை அலங்காரத்தில் பாபா முத்திரை வெண் தாமரையின் பின் அலங்கரிக்கப்பட்டிருக்கும் வகையில் இருக்கும். ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு செய்வதற்கு முன்பு ரசிகர்களை சந்திக்கும்போதெல்லாம் என்ன பேசினாலும் அது சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. அவர் காட்டுகிற அல்லது பேசுகிற விஷயங்களும் பெரும்பாலும் அரசியல்வாதிகளா...
கருணாநிதி  என்னை அடையாளம் கண்டு பெயரைச்சொல்லி அழைத்தது உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பு  – வைகோ

கருணாநிதி என்னை அடையாளம் கண்டு பெயரைச்சொல்லி அழைத்தது உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பு – வைகோ

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கருணாநிதி என்னை அடையாளம் கண்டு பெயரைச்சொல்லி அழைத்தது உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பு - வைகோ கருணாநிதியை கோபலபுரத்தில் சென்று சந்தித்த வைகோ உணர்ச்சிகரமான சந்திப்பு என்று கூறினார். தன்னை அடையாளம் கண்டு பெயரைச்சொல்லி அழைத்தது உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பு என்றார். திமுக செயல் தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரவு 7 மணி அளவில் அவரது இல்லத்தில் சந்தித்தார். அவரோடு தனியாக ஆலோசனை நடத்திய வைகோ அவரது காரிலேயே அவருடன் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்றார். இரவு 8 மணி அளவில் கருணாநிதியை வைகோ சென்று பார்த்தார். அப்போது, யார் என்று தெரிகிறதா? என்று ஸ்டாலின் கருணாநிதியிடம் கேட்டவுடன், புன்னகை பூத்தவாறு வைகோ என கருணாநிதி உணர்த்தினார். சந்தித்துவிட்டு வெளியே வந்தபின் நிருபர்களிடம், “அரசியலில் என்னை வளர்த்து ஆளாக்கிய, இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காது என்னை இயக்கிய அண்ணன் கருணாநிதி அவர்களைப் ...
பிச்சை எடுக்கவா மலேசியா கலைவிழா… நடிகர் சங்க  டிரஸ்ட் பதவியை ராஜினாமா செய்து எஸ்.வி.சேகர் காட்டமான கடிதம்

பிச்சை எடுக்கவா மலேசியா கலைவிழா… நடிகர் சங்க டிரஸ்ட் பதவியை ராஜினாமா செய்து எஸ்.வி.சேகர் காட்டமான கடிதம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் சங்க கட்டடத்தை கட்டுவதற்காக நிதி திரட்ட மலேசியாவில் விழா நடத்தியது நடிகர் சங்கம். இந்த விழா இப்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசருக்கு நடிகர் எஸ்.வி.சேகர் காட்டமான கடிதம் எழுதி இருக்கிறார்.   திரு. நாஸர் தலைவர் ​ மற்றும் நிர்வாகிகள் ​ தென்னிந்திய நடிகர் சங்கம். வணக்கம். நம் சங்க தேர்தல் முடிந்தபின் என்னை நடிகர் சங்க டிரஸ்டிக்களில் ஒருவனாக நியமித்து என்னுடைய அறிவுரை,ஆலோசனைகள்,வழி நடத்துதல் தேவை என கேட்டுக்கொண்டீர்கள். ஆனால் ஒரு வருடத்தில் பல மாற்றங்கள். கையெழுத்திடுவதற்கு மட்டும் டிரஸ்டி என்ற நிலை வந்த போது நான் பல மெயில்கள் அனுப்பியதற்கு எந்த பதிலும் அளிக்காமல் எனக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினீர்கள். என் பதில் கடிதத்தில் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. குறிப்பாக நம் நடிகர் சங்கம் 5 கிரவுண்டு அளவி...
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் ‘மஹாவீர் கர்ணா’ ..!

ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் ‘மஹாவீர் கர்ணா’ ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் 'மஹாவீர் கர்ணா' ..! விக்ரம் நடிப்பில் `ஸ்கெட்ச்' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 12-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அடுத்ததாக விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்' படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்' இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், விக்ரம் அடுத்ததாக ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு `மஹாவீர் கர்ணா' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை நியூயார்க்கை சேர்ந்த யுனிடெட் பிலிம் கிங்டம...
ஊழல் தண்டனையால் ஜெயிலில் தோட்டக்காரர் ஆன லாலு… தினமும் 93 ரூபாய் ஊதியம்

ஊழல் தண்டனையால் ஜெயிலில் தோட்டக்காரர் ஆன லாலு… தினமும் 93 ரூபாய் ஊதியம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஊழல் தண்டனையால் ஜெயிலில் தோட்டக்காரர் ஆன லாலு..! தினமும் 93 ரூபாய் ஊதியம் பீகார் முன்னாள் முதல்- மந்திரியும், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவனம் வாங்கியதில் ஊழல் செய்ததாக 6 வழக்குகளில் சிக்கினார். முதல் வழக்கில் 2013-ல் தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதில் லாலுபிரசாத் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை பெற்றதால் எம்.பி. பதவியை இழந்தார். அதோடு தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் பறி கொடுத்தார். சுமார் ஓராண்டு ஜெயிலில் இருந்த அவர் பிறகு ஜாமீன் பெற்று விடுதலையானார். இந்த நிலையில் கால்நடை தீவன ஊழலில் இரண்டாவது வழக்கிலும் லாலுவுக்கு ரூ.3.5 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து ராஞ்சி கோர்ட்டில் ‘அப்பீல்’ செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்த நிலையில...
சட்டசபை வளாகத்தில் ஸ்டாலினுடன் கை குலுக்கிய டிடிவி தினகரன்..!

சட்டசபை வளாகத்தில் ஸ்டாலினுடன் கை குலுக்கிய டிடிவி தினகரன்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சட்டசபை வளாகத்தில் ஸ்டாலினுடன் கை குலுக்கிய டிடிவி தினகரன்..! தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையாற்றினர். ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முறையாக சட்டசபைக்குள் சென்ற டி.டி.வி தினகரன் ஆளுநர் உரை முடியும் வரை உள்ளே இருந்தார். ஆளுநர் உரை முடிந்தபின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், நான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்று கூறினார். எதிர்க்கட்சி என்றாலும் தி.மு.க உடன் வெளிநடப்பு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். இதனையடுத்து, அவை வளாகத்தில் மு.க ஸ்டாலின் மற்றும் தினகரன் சந்தித்து கொண்டனர். முன்னதாக சட்டசபைக்கு வந்த தினகரனுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், கே.என்.நேரு ஆகியோர் கை கொடுத...