வியாழக்கிழமை, ஜூலை 16
Shadow

Author: Kodanki

தமிழில் வெளியாகும் பிரமாண்டமான விண்வெளி படம் டிக்டிக்டிக் இசை வெளியீடு..!

தமிழில் வெளியாகும் பிரமாண்டமான விண்வெளி படம் டிக்டிக்டிக் இசை வெளியீடு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நேமிசந்த் ஜபக் சார்பில் வி ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிக் டிக் டிக்’ இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். இதில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  இதற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் டி இமானுக்கு இந்த படம் 100 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.   இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர்.    இவ்விழாவில் நடிகர்கள் ஜெயம் ரவி, அவரது மகன் ஆரவ் ரவி, ஜெயப்ரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், அர்ஜுனன், பாலாஜி வேணுகோபால், நடிகைகள் நிவேதா பெத்துராஜ், ரித்திகா சீனிவாஸ், இசையமைப்பாள...
அமாவாசை சத்யராஜ் போல் திரைத்துறைக்குள் சிலர் நுழைந்ததால் ‘பலூன்’ நஷ்டம் – இயக்குனர் சினிஷ்

அமாவாசை சத்யராஜ் போல் திரைத்துறைக்குள் சிலர் நுழைந்ததால் ‘பலூன்’ நஷ்டம் – இயக்குனர் சினிஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தொழில் நடைமுறை தெரியாத அமாவாசை சத்யராஜ் போல் திரைத்துறைக்குள் சிலர் நுழைந்ததால் 'பலூன்’ நஷ்டம் - இயக்குனர் சினிஷ் ஜெய், அஞ்சலி, ஜனனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பலூன்'. இப்படத்தை சினிஷ் இயக்கியிருந்தார். யுவன் இசையமைத்துள்ள இப்படம் டிசம்பர் 29-ம் தேதி வெளியானது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் இயக்குனர் சினிஷ் படம் வெற்றி ஆனல், நான் மகிழ்ச்சியில் இல்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். மேலும் இப்படம் குறித்து டுவிட்டரில் சில கருத்துகளை பதிவு செய்திருக்கிறார். அதில், ‘பலூன்’ வெற்றி... தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி... இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் சூழலில் நான் இல்லை. சிலரது தேவையற்ற தலையீடு எனது உழைப்பை வீணாக்கிவிட்டது. திரைத்துறையின் த...
தணிக்கை குழுவிடம் ‘யு’ பெற்ற உதயநிதியின் ‘நிமிர்’

தணிக்கை குழுவிடம் ‘யு’ பெற்ற உதயநிதியின் ‘நிமிர்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தணிக்கை குழுவிடம் ‘யு’ பெற்ற உதயநிதியின் ‘நிமிர்’ உதயநிதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நிமிர்’. இதில் இவருக்கு ஜோடியாக நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் மகேந்திரன், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ப்ரியதர்ஷன் இப்படத்தை இயக்கியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்கள். தற்போது அனைத்து பணிகளும் முடிந்து படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பி உள்ளனர். படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள், ‘யு’ வழங்கி சான்றிதழ் வழங்கியுள்ளனர். ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிமிர்' படத்தை சந்தோஷ் டி குருவில்லா தயாரித்துள்ளார். இப்படம் அவரது சிறப்பான சினிமா வாழ்க்கையில் மற்றுமொரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என கூறப்படுகிறத...
6-ஆம் தேதி மலேசியாவில் நடக்கும் நட்சத்திர கலைவிழாவில் ரஜினிகாந்த்தின் ‘2.O’டீசர்..!

6-ஆம் தேதி மலேசியாவில் நடக்கும் நட்சத்திர கலைவிழாவில் ரஜினிகாந்த்தின் ‘2.O’டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
6-ஆம் தேதி மலேசியாவில் நடக்கும் நட்சத்திர கலைவிழாவில் ரஜினிகாந்த்தின் ‘2.O’டீசர்..! ‘கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘2.O’. ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’வை சங்கர் இயக்கியுள்ளார். ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், 2 மேக்கிங் வீடியோக்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதன் ஷூட்டிங் நிறைவடைந்து ...
அ.தி.மு.க. சார்பில் ஊடகங்களில் பேச கட்டுப்பாடு – இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அறிவிப்பு

அ.தி.மு.க. சார்பில் ஊடகங்களில் பேச கட்டுப்பாடு – இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க.வின் கொள்கைகளையும், குறிக்கோள்களையும், கோட்பாடுகளையும், நிலைப்பாடுகளையும் நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து சமூகத் தொடர்பு ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். 1.சி.பொன்னையன் (முன்னாள் அமைச்சர்) 2. பா.வளர்மதி ( கழக இலக்கிய அணி செயலாளர், தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர்) 3. எஸ்.கோகுல இந்திரா (முன்னாள் அமைச்சர்) 4. டாக்டர் வைகைச்செல்வன் (முன்னாள் அமைச்சர்) 5. ஜே.சி.டி.பிரபாகர், (கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளர்) 6. டாக்டர் கோ.சமரசம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கிருஷ்ணகிரி மாவட்டம்) 7. ம.அழகுராஜ் (எ...
கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றேன் – ரஜினிகாந்த்

கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றேன் – ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாகவும் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். வருகிற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக கூறியுள்ளார். தான் செய்யப் போவது ஆன்மீக அரசியல் என்றும் அதில் உண்மை, நேர்மையை கடைபிடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையே, தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று மாலை சந்திக்க போவதாக ரஜினிகாந்த் கூறியிருந்தார். இந்நிலையில், போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து இன்றிரவு 7.45 மணியளவில் புறப்பட்ட ரஜினிகாந்த், கருணாநிதி எனது நீண்ட கால நண்பர் என நிருபர்களிடம் கூறினார். சரியாக, 7..55 மணியளவில் கருணாநிதி வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். அவருடன் சென்ற ரஜினிகாந்த் கருணாநிதியை சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். கருணாநிதியை சந்தித்தபின் வெளியே வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களிட...
ரஜினிகாந்த்  பாபா முத்திரையில் இருந்த தாமரை திடீரென மாயம்..!

ரஜினிகாந்த் பாபா முத்திரையில் இருந்த தாமரை திடீரென மாயம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினிகாந்த் கடந்த ஆண்டு கடைசி நாளில் தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக அரசியல் களத்தில் பல கருத்துக்கள் பேசப்பட்டு வருகிறது. அதிலும் தான் ஆன்மீக அரசியலில் ஈடுபடப்போவதாக ரஜினி அறிவித்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளில் ரஜினியின் ஆஸ்தான ஆன்மீக குருவான பாபா முத்திரையை ரஜினி காண்பித்தார். அதைத்தொடர்ந்து பாபா முத்திரைதான் ரஜினி கட்சியின் சின்னமாக இருக்கக்கூடும் என பேசப்பட்டது. ரஜினி ரசிகர்கள் சந்திப்பு நடந்த மேடையில் பாபா முத்திரை வைக்கப்பட்டிருந்தது. வெண்மையான தாமரை முன்பாகவும், அதன் பின்னால் பாபா முத்திரையும்  இருந்தது. இந்த முத்திரையை சுற்றி நாகம் இருப்பது போலவும், முத்திரையின் மேலே ஒரு பக்கம் நாகத்தின் தலை படமெடுக்கும் நிலையிலும், இன்னொரு முனை வால் பகுதியாகவும் காணப்பட்டது. நல்ல வேளை நாகம் எந்த அரசியல...
ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் தவறாகப்போய் முடியும் – டி.டி.வி தினகரன்

ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் தவறாகப்போய் முடியும் – டி.டி.வி தினகரன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆன்மீக அரசியல் தவறாகப்போய் முடியும் என்பது எனது கருத்து: டி.டி.வி தினகரன் நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி ஆன்மீக அரசியல் செய்யப்போவதாக கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அறிவித்தார். தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் சென்னை அடையாற்றில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்,அப்போது பேசிய அவர்... விசாரணை ஆணையத்தில் கேட்டுக்கொண்டதின் பேரில் வீடியோ ஆதாரத்தை கொடுத்து உள்ளோம்,ஏற்கனவே வெற்றிவேல் கொடுத்தின் தொடர்ச்சிதான் தற்போது கொடுத்துள்ளோம். நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிகம் என்று சில வார்த்தையை பேசி உள்ளார், ஆன்மிகம் என்ற வார்த்தையை அரசியலில் பயன்படுத்துவது தவறாக தான் முடியும். ரஜினி சிஸ்டம் சரியில்லை என்கிறார்,சிஸ்டம் எப்போதும...
அதிமுகவின் 3-ம் அத்தியாயத்தை சசிகலா தான் எழுதுவார் – தினகரன்

அதிமுகவின் 3-ம் அத்தியாயத்தை சசிகலா தான் எழுதுவார் – தினகரன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அ.தி.மு.க.வின் 3-வது அத்தியாயத்தை சசிகலா தான் எழுதுவார்: தினகரன் சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த 29-ந்தேதி சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார். தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மன்னார் குடி அருகே உள்ள தட்டாங்காவில் கிராமத்தில் உள்ள வீரமணவாள சுவாமி குலதெய்வ கோவிலுக்கு  மனைவி அனுராதா, மகள் ஜெயஹரிணி ஆகியோருடன்  தினகரன் வந்து தரிசனம் செய்தார். இதன்பின்னர்  மன்னார்குடி சென்று சசிகலாவின் தம்பி திவாகரனை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அதன்பின்னர் இருவரும் தனியாக அமர்ந்து ஆலோசனை நடத்தினார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்தனர். இதன்பின்னர் தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:- எடப...