புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

ஆர்.கே. நகரில் கரை புரளும் கரன்சி மழை… ஆளும் கட்சிக்கு எதிராக டிடிவி அணியும், திமுகவும் மாறி மாறி குற்றச்சாட்டு..!

ஆர்.கே. நகரில் கரை புரளும் கரன்சி மழை… ஆளும் கட்சிக்கு எதிராக டிடிவி அணியும், திமுகவும் மாறி மாறி குற்றச்சாட்டு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர் கே நகரில் பணப்பட்டுவாடா புகாரை அடுத்து அங்கு ஓரிடத்தில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யவிருந்த பணக் கத்தையையும் பெயர் பட்டியல் அடங்கிய நோட்டையும் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் பறிமுதல் செய்தார். ஆர்கே நகரில் இன்று காலை முதல் பணப்பட்டுவாடா என்று தொகுதியே அல்லோகலப்படுகிறது. ஆங்காங்கே வீடுகளில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் பணம் பறிமுதல் செய்தவர்களை மக்கள் பிடித்து கொடுத்தனர் என்றும் கூறப்படுகிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி திமுக, தினகரன் அணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போர்க் களமாக காட்சி அளிக்கும் ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா குறித்த புகாரையும் போலீஸார் வாங்க மறுக்கின்றனர் என்று திமுக, தினகரன் அணியினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பணத்தையும் நோட்டு புத்தகத...
ஜெயலலிதா பிறந்த நாளன்று ஆர்.கே.நகரில் அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படும்: தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் EPS உறுதி

ஜெயலலிதா பிறந்த நாளன்று ஆர்.கே.நகரில் அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படும்: தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் EPS உறுதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று பிரச்சாரம் செய்தனர். புதுவண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்று அவர்கள் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினர். பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அடிப்படை தேவைகளை நிறைவேற்றியவர் என்றும், தி.மு.க. அதிகாரத்தில் இருந்தபோது இந்த தொகுதிக்கு மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை  என்றும் கூறினார். ‘இந்த தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றால் இந்த தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவோம். ஆளும் அ.தி.மு.க. ஜெயித்தால் தான் ஆர்.கே.நகர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.  ஆர...
“ராமன் நல்லவனா? ராவணன் நல்லவனா?.. வசனத்தால் பா.ஜ.க., சர்ச்சையில் சிக்கிய விஜய்சேதுபதி..!

“ராமன் நல்லவனா? ராவணன் நல்லவனா?.. வசனத்தால் பா.ஜ.க., சர்ச்சையில் சிக்கிய விஜய்சேதுபதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
திரைக்கு வரும் பல படங்கள் சர்ச்சை காட்சிகள் மற்றும் வசனங்களால் அரசியல் கட்சிகள், மத அமைப்புகளின் எதிர்ப்புகளுக்கு உள்ளாவது வழக்கமாகி விட்டது. விஜய்யின் மெர்சல் படத்தில் இடம்பெற்று இருந்த ஜி.எஸ்.டி வசனத்துக்கு பா.ஜனதா கட்சியினரும் மருத்துவ துறை குளறுபடிகள் சம்பந்தமான வசனத்துக்கு டாக்டர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்தியில் தயாரான பத்மாவதி படத்தில் வரலாற்றை திரித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியதால் வடமாநிலங்களில் படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராமன் நல்லவனா? ராவணன் நல்லவனா?’ என்ற வசனத்துக்கும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.சமீபத்தில் இணையதளங்களில் வெளியான படத்தின் டிரெய்லரில் இந்த சர்ச்சை வசனம் வருகிறது. “ராமன் நல்லவனா? ராவணன் நல்லவனா?.. ராவணன், சீதையை...
ஆட்சிக்கு தம்பி கட்சிக்கு அக்கா… காங்கிரஸ் புது பார்முலா..! ஓய்வு முடிவு  சோனியா காந்தி இடத்திற்கு வருகிறார் பிரியங்கா காந்தி…

ஆட்சிக்கு தம்பி கட்சிக்கு அக்கா… காங்கிரஸ் புது பார்முலா..! ஓய்வு முடிவு சோனியா காந்தி இடத்திற்கு வருகிறார் பிரியங்கா காந்தி…

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆட்சிக்கு தம்பி கட்சிக்கு அக்கா... காங்கிரஸ் புது பார்முலா..! ஓய்வு முடிவு சோனியா காந்தி இடத்திற்கு வருகிறார் பிரியங்கா காந்தி... தீவிர அரசியலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு பெற இருப்பதால், இனி அவரது இடத்திற்கு சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தியின் பதவிக்காலம் முடிவடைந்ததால், புதிய தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக தலைவர் பொறுப்பை ஏற்றதும் அரசியலில் இருந்து ஓய்வு பெற சோனியா காந்தி முடிவு செய்துள்ளார். காங்கிரஸ் வரலாற்றில் நீண்ட காலம் தலைவராக இருந்தவர் என்கிற பெருமையைப் பெற்ற சோனியா காந்தி கடந்த சில மாதங்களாக உடல்நிலை கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். சமீபத்தில் கூட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு தி...
காங்கிரஸ் தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் ராகுல்காந்தி..!

காங்கிரஸ் தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் ராகுல்காந்தி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி இன்று பொறுப்பேற்க இருப்பதையடுத்து டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் காலை முதலே குவிந்து வருகின்றனர். பட்டாசுகளுடன் காங்கிரஸ் கட்சி அலுவலக வாசலில் காத்திருக்கும் தொண்டர்கள், இனிப்பு தட்டுகளையும் வரிசையில் அடுக்கி வைத்துள்ளனர். ராகுல்காந்தி பொறுப்பேற்றவுடன் தொண்டர்களுக்கு வழங்குவற்காக இனிப்புகளுடன் தொண்டர்கள் காத்துக்கிடக்கின்றனர்....
ஆய்வின் போது பெண் குளிப்பதை எட்டிப்பார்த்தாரா கவர்னர்… பதறிய கவர்னர் மாளிகை மறுப்பு..!

ஆய்வின் போது பெண் குளிப்பதை எட்டிப்பார்த்தாரா கவர்னர்… பதறிய கவர்னர் மாளிகை மறுப்பு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கடலூரில் பெண் குளிப்பதை ஆளுநர் பார்த்ததாக வந்த செய்தி தவறு... கூடுதல் தலைமை செயலாளர் விளக்கம் கடலூரில் ஆய்வு செய்தபோது கீற்று மறைவில் பெண் குளிப்பதை ஆளுநர் பார்த்ததாக கூறும் செய்தி தவறு என்று கூடுதல் தலைமை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். கடலூர் மாவட்டம், வண்டிபாளையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஆய்வு நடத்தினார். அம்பேத்கர் நகரில் ஆய்வு செய்தபோது அங்குள்ள கீற்று மறைப்பை பார்வையிட்டார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த பெண் ஆளுநரை கண்டு அலறியதாகவும், இதை கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் ஆளுநரை சுற்றிவளைத்ததாகவும் செய்திகள் வந்தன. இதை ஆளுநர் தரப்பு மறுத்துள்ளது. இதுகுறித்து இணை தலைமை செயலாளர் கூறுகையில் கவுரி என்பவரது வீட்டில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கழிப்பறையை ஆளுநர் பார்வையிட இருந்தார். ஆனால் அதை ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் துறை பெண் அதிகாரியும், ஆட்சி...
பவர்ஃபுல் ஆர்மி கேர்ள், பாமர கேர்ள்: ஆண்ட்ரியாவின் அவதாரங்கள்..!

பவர்ஃபுல் ஆர்மி கேர்ள், பாமர கேர்ள்: ஆண்ட்ரியாவின் அவதாரங்கள்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பவர்ஃபுல் ஆர்மி கேர்ள், பாமர கேர்ள் என இரண்டு படங்களில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து அசத்தி வருகிறார் ஆண்ட்ரியா. நடிகை ஆண்ட்ரியா நடித்த சமீபத்திய படங்களான அவள், தரமணி படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து அவர் நடித்து வரும் இரண்டு படங்கள் அவரை மார்க்கெட்டின் உச்சத்திற்கு அழைத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ படத்தில் ஆர்மி கேர்ளாக நடிக்கும் ஆண்ட்ரியா, ம்ற்றொரு பக்கம் வெற்றிமாறன் இயக்கும் தனுஷின் வடசென்னை படத்தில் கிராமத்து பெண் சந்திராவாக நடித்துள்ளார். ஒருபுறம் பவர்ஃபுல் கேர்ள், மற்றொருபுறம் பாமர கேர்ள் என நடிப்பது வித்தியாசமான அனுபவம் கிடைத்துள்ளதாக இரண்டு புகைப்படங்களுடன் கூடிய ஒரு பதிவை அவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.  ...
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து நடனமாடியே போக்குவரத்தை சரிசெய்யும் காவலர்

கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து நடனமாடியே போக்குவரத்தை சரிசெய்யும் காவலர்

HOME SLIDER, NEWS, செய்திகள்
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடனமாடும் போக்குவரத்து காவலர் ராமிரோ ஹினோஜாஸ் கிறிஸ்துமஸ் சீசனை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்துள்ளார். நடனமாடியபடியே அவர் மணிலாவின் முக்கிய சாலை ஒன்றில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறார். போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் கடுமையான பணியை ஏன் நடனமாடியபடியே செய்யக்கூடாது என்று எண்ணிய அவர், பணியில் சேர்ந்த இரண்டாம் ஆண்டில் இருந்தே நடனமாடும் காவலராக புகழ் பெற்றுவிட்டார்.என்னதான் நடுரோட்டில் நடனமாடினாலும், தன் கைகள் வாகனங்கள் செல்ல வேண்டிய திசை நோக்கியே இருக்கும் என்கிறார் இந்த நடனமாடும் சாண்டா கிளாஸ்!  ...
அவரை நான் அப்பாவாக கருதவில்லை; தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறார்’: கவுசல்யா

அவரை நான் அப்பாவாக கருதவில்லை; தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறார்’: கவுசல்யா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட உடுமலை இளைஞர் சங்கரின் மனைவி கவுசல்யா, தனது தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் தன்னை விமர்சிப்பவர்களுக்கும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார் கவுசல்யா. அவருடன் 'எவிடன்ஸ'அமைப்பின் நிறுவனர் கதிரும் இருந்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், "உங்கள் தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு மகளாக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?" எனக் கேட்டார். ...
தமிழக வங்கியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு வந்த கள்ள நோட்டுக்கள்… ஷாக் ஆன RBI

தமிழக வங்கியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு வந்த கள்ள நோட்டுக்கள்… ஷாக் ஆன RBI

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ராமநாதபுரம் ஸ்டேட் வங்கியிலிருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய ரூபாய் நோட்டுகளில் 14,500 ரூபாய் மதிப்புடைய கள்ளநோட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி பொதுமேலாளர் கொடுத்த புகாரின் பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  வருகின்றனர்.   நாட்டில் அதிக அளவில் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் திடீரென புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு கரன்சிகளான 500, 1000 ரூபாய் நோட்டுக்கல் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார் .  மேலும் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை வங்கி மற்றும் அஞ்சலகங்கள் மூலமாக குறிப்பிட்ட நாட்களுக்குள் மாற்றி கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடும் சிரமங்களுக்கு மத்தியில் பொதுமக்கள் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றினர். இந்நிலையில் சென்னை ரிசர்வ் வங்க...