ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 26
Shadow

politics

ஆர்.கே.நகர் தொகுதியை பேசாமல் ஏலம் விடுங்கள்..!  100 கோடியை தாண்டி பண வினியோகம் வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்..!

ஆர்.கே.நகர் தொகுதியை பேசாமல் ஏலம் விடுங்கள்..! 100 கோடியை தாண்டி பண வினியோகம் வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே.நகர் தொகுதியை பேசாமல் ஏலம் விடுங்கள்..! 100 கோடியை தாண்டி பண வினியோகம் வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்..! தமிழகத்தில் இனி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் பேசாமல் அரசியல் கட்சிகளுக்கு ஏலத்தில் விட்டு விடலாம். எந்த கட்சியோ அல்லது எந்த வேட்பாளரோ அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கிறார்களோ அந்த தொகையை கொண்டு அந்த தொகுதிக்கு தேவையான சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் உட்பட தொகுதியின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரலாம். இந்த முறையை தேர்தல் ஆணையம் கையாண்டால் பணம் பதுக்கல்... வெட்டு குத்து கலாட்டாக்கள்... கள்ள ஓட்டு புகார்... தேவையற்ற அலைச்சல்கள்... எதுவும் நடக்காது. அரசு பணமும் வீணாகாது. தமிழகத்தில் மட்டும் எப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அங்கே ஓட்டுக்கு பணமழை கொட்டுவது சமீபத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே பண மழை புகார் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில...
ஜெயிலில் சசிகலாவுக்கு சலுகைகள்: தகவல் உரிமை ஆணையத்தில் டி.ஐ.ஜி. ரூபா புகார்

ஜெயிலில் சசிகலாவுக்கு சலுகைகள்: தகவல் உரிமை ஆணையத்தில் டி.ஐ.ஜி. ரூபா புகார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பெங்களூர் ஜெயிலில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாவும், இதற்காக அவர், டி.ஜி.பி. சத்யநாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாவும் பரபரப்பு புகார் தெரிவித்தார். இது குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். இதில் சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மை என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் டி.ஜி.பி.யாக இருந்த சத்ய நாராயனராவ், தன் மீது குற்றச்சாட்டுகள் கூறிய டி.ஐ.ஜி. ரூபா மீது பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் ரூ.4 கோடி கேட்டு மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தார். நேற்று இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரூபா தரப்பில் வக்கீல் வாதத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நீதிபதி இவ்வழக்கை வருகிற பிப்ரவரி மாதம் 16-ந்தே...
வாங்கிய கடனை அடைக்காமல் தப்பிக்க சசிக்குமார் சுமத்தும் பொய் குற்றச்சாட்டு… இயல்பாக இல்லாமல் சினிமாத்தனமாக இருக்கும் தற்கொலைக் கடிதம் – ஜாமீன் மனுவில் அன்புச்செழியன் பகீர்

வாங்கிய கடனை அடைக்காமல் தப்பிக்க சசிக்குமார் சுமத்தும் பொய் குற்றச்சாட்டு… இயல்பாக இல்லாமல் சினிமாத்தனமாக இருக்கும் தற்கொலைக் கடிதம் – ஜாமீன் மனுவில் அன்புச்செழியன் பகீர்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அன்புச்செழியனை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தொடர்ந்து முயற்சித்தும் பலன் கிடைக்காததால், அன்புச்செழியன் வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணைக்கு மாற்றி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். நடிகரும் இயக்குனருமான சசிகுமாரின் உறவினரும், அவரது நிறுவனத்தின் இணைத்தயாரிப்பாளருமான அசோக்குமார் நவம்பர் 21-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நடிகர் சசிக்குமார் வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் அசோக்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக அன்புசெழியன் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். போலீஸாரின் கைதுக்கு அஞ்சி அன்புச்செழியன் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தேடி வருகின்றனர். அவர் பதுங்கி இருப்பதாக சந்தேகப்பட்ட தென் மாவட்டங்கள், பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு...
ஆதாரம் இருந்தால் S.A.சந்திரசேகர் மீது வழக்கு பதியலாம் ஐகோர்ட் உத்தரவு

ஆதாரம் இருந்தால் S.A.சந்திரசேகர் மீது வழக்கு பதியலாம் ஐகோர்ட் உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை லஞ்சம் கொடுப்பது என விமர்சித்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற விசிறி எனும் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது என விமர்சித்தார். இது இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இரு மதங்களுக்கிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய அவர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி இந்து முன்னணி நிர்வாகி வி.ஜி.நாராயணன் என்பவர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். அவரின் புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆணையர் வழக்க...
புத்தாண்டு விழா: சன்னி லியோன் பங்கேற்க கர்நாடக அரசு தடை

புத்தாண்டு விழா: சன்னி லியோன் பங்கேற்க கர்நாடக அரசு தடை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
புத்தாண்டை முன்னிட்டு கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் உள்ள நகவாரா பகுதியில் இருக்கும் ஒயிட் ஆர்ச்சிட் நட்சத்திர விடுதியில் வரும் 31-ம் தேதி பின்னிரவில் புத்தாண்டு விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை நடத்த கூடாது. ஆபாச நடிகை சன்னி லியோனை இங்கு அனுமதிக்க கூடாது என சில கன்னட அமைப்பினர் கடந்த ஒருவாரமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் சன்னி லியோனின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன. பெருகிவரும் எதிர்ப்பினால் இந்த நிகழ்ச்சிக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுனீல் குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பெங்களூரு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி, இதைப்போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். மக்கள...
ராகுல்காந்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து..!

ராகுல்காந்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
நடிகர் கமல்ஹாசன் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும் அறிவித்துள்ளார். இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி பதவி ஏற்றுள்ளார். இதற்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- ராகுல்காந்திக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் இருக்கை வரையறுக்க கூடியது அல்ல. ஆனால் உங்கள் தகுதியை நீங்கள் வரையறுக்க முடியும்....
பணப்பட்டுவாடா புகாரால் ஆர்.கே.நகரில் தேர்தல் ரத்தாகுமா? சிறப்பு அதிகாரி பத்ரா பேட்டி

பணப்பட்டுவாடா புகாரால் ஆர்.கே.நகரில் தேர்தல் ரத்தாகுமா? சிறப்பு அதிகாரி பத்ரா பேட்டி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே. நகரில் பணப் பட்டுவாடா புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாக தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா தெரிவித்துள்ளார். இன்று சென்னை வந்த பத்ரா, தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், பணப்பட்டுவாடா புகார்கள் குறித்து விசாரித்து வருகிறோம் என்றார். தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு, இப்போதே அதுகுறித்து முடிவெடுக்க முடியாது என்று பத்ரா தெரிவித்தார். பத்ரா, சென்னையில் நாளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், அரசியல் கட்சியினரின் கருத்துக்களை கேட்பதற்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது என்றார்...
ஆர்.கே. நகரில் கரை புரளும் கரன்சி மழை… ஆளும் கட்சிக்கு எதிராக டிடிவி அணியும், திமுகவும் மாறி மாறி குற்றச்சாட்டு..!

ஆர்.கே. நகரில் கரை புரளும் கரன்சி மழை… ஆளும் கட்சிக்கு எதிராக டிடிவி அணியும், திமுகவும் மாறி மாறி குற்றச்சாட்டு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர் கே நகரில் பணப்பட்டுவாடா புகாரை அடுத்து அங்கு ஓரிடத்தில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யவிருந்த பணக் கத்தையையும் பெயர் பட்டியல் அடங்கிய நோட்டையும் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் பறிமுதல் செய்தார். ஆர்கே நகரில் இன்று காலை முதல் பணப்பட்டுவாடா என்று தொகுதியே அல்லோகலப்படுகிறது. ஆங்காங்கே வீடுகளில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் பணம் பறிமுதல் செய்தவர்களை மக்கள் பிடித்து கொடுத்தனர் என்றும் கூறப்படுகிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி திமுக, தினகரன் அணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போர்க் களமாக காட்சி அளிக்கும் ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா குறித்த புகாரையும் போலீஸார் வாங்க மறுக்கின்றனர் என்று திமுக, தினகரன் அணியினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பணத்தையும் நோட்டு புத்தகத...
ஜெயலலிதா பிறந்த நாளன்று ஆர்.கே.நகரில் அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படும்: தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் EPS உறுதி

ஜெயலலிதா பிறந்த நாளன்று ஆர்.கே.நகரில் அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படும்: தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் EPS உறுதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று பிரச்சாரம் செய்தனர். புதுவண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்று அவர்கள் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினர். பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அடிப்படை தேவைகளை நிறைவேற்றியவர் என்றும், தி.மு.க. அதிகாரத்தில் இருந்தபோது இந்த தொகுதிக்கு மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை  என்றும் கூறினார். ‘இந்த தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றால் இந்த தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவோம். ஆளும் அ.தி.மு.க. ஜெயித்தால் தான் ஆர்.கே.நகர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.  ஆர...
ஆட்சிக்கு தம்பி கட்சிக்கு அக்கா… காங்கிரஸ் புது பார்முலா..! ஓய்வு முடிவு  சோனியா காந்தி இடத்திற்கு வருகிறார் பிரியங்கா காந்தி…

ஆட்சிக்கு தம்பி கட்சிக்கு அக்கா… காங்கிரஸ் புது பார்முலா..! ஓய்வு முடிவு சோனியா காந்தி இடத்திற்கு வருகிறார் பிரியங்கா காந்தி…

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆட்சிக்கு தம்பி கட்சிக்கு அக்கா... காங்கிரஸ் புது பார்முலா..! ஓய்வு முடிவு சோனியா காந்தி இடத்திற்கு வருகிறார் பிரியங்கா காந்தி... தீவிர அரசியலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு பெற இருப்பதால், இனி அவரது இடத்திற்கு சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தியின் பதவிக்காலம் முடிவடைந்ததால், புதிய தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக தலைவர் பொறுப்பை ஏற்றதும் அரசியலில் இருந்து ஓய்வு பெற சோனியா காந்தி முடிவு செய்துள்ளார். காங்கிரஸ் வரலாற்றில் நீண்ட காலம் தலைவராக இருந்தவர் என்கிற பெருமையைப் பெற்ற சோனியா காந்தி கடந்த சில மாதங்களாக உடல்நிலை கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். சமீபத்தில் கூட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு தி...