கள்ளக்குறிச்சி கணையார்: ஆக்கிரமிப்பு என்று கூறி வீடுகளை இடிக்கும் அரசு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கணையார் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 25 குடும்பங்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்கும் முயற்சியில் வருவாய்த்துறையும் போலீசுதுறையும் இறங்கியுள்ளது. வீடுகள் இடிக்கப்பட்டால் தாங்கள் நடுத்தெருவில் நிறுத்தப்படுவோம் என மக்கள் கதறி அழுதனர். வருவாய்துறை வீடுகளை இடிக்க முயன்றதால் அப்பகுதி பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்; இரண்டு பெண்கள் மயக்கமடைந்துள்ளனர். இதனால் இடிப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டாலும், வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி மக்களை அகதியாக்குவதற்கு வருவாய்துறை குறியாக உள்ளது.
இந்த இடிப்புப் பணியின் போது, “இவ்விடத்தை விட்டு விரட்டியடித்தால் எங்களுக்கு போவதற்கு நாதியில்லை. வ...