வெள்ளிக்கிழமை, ஜூலை 24
Shadow

politics

26 வெட்டுக்களுடன் பெயரை மாற்றி சென்சாரில் தப்பிப் பிழைத்த பத்மாவதி..!

26 வெட்டுக்களுடன் பெயரை மாற்றி சென்சாரில் தப்பிப் பிழைத்த பத்மாவதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் படம் ‘பத்மாவதி’. ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதி வாழ்க்கை வரலாற்றைக் அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில், பத்மாவதியாக தீபிகா படுகோனும், ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். இப்படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பத்மாவதி திரைப்படம் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினர் இந்தப் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும்வரை பத்மாவதி படத்தை தி...
அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது ரஜினி பேச்சால் ரசிகர்கள் மீண்டும் குழப்பம்..!

அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது ரஜினி பேச்சால் ரசிகர்கள் மீண்டும் குழப்பம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது என்ற ரஜினியின் பேச்சால் அரசியல் அறிவிப்பை எதிர்பார்த்த ரசிகர்கள் மீண்டும் குழப்பம்..! சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்துவரும் ரஜினி அரசியல் அறிவிப்பை எப்போது வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க அவரோ, தன் நடிப்பில் உருவாகும் 2.0 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வுக்கு முன்பாக சிறிது நேரம் ரசிகர்களிடையே உரையாற்றுகிறார். அரசியல், பொதுவாழ்க்கை குறித்தே அவரது பேச்சு அமைந்திருந்த நிலையில் ஐந்தாம் நாளான இன்று அவரது பேச்சு தனது திரையுலக வாழ்க்கையை பற்றியே அமைந்திருந்தது. “என் நடிப்புத் திறமையை முதன் முதலில் கண்டுபிடித்தது என் நண்பன் ராஜ்பகதூர். 1973இல் முதல் முறையாக சென்னை வந்தேன். 1960களில் மதராஸ் குறித்து கர்நாடகாவில் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள். சென...
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் ஆய்வு!

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் ஆய்வு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவர் வசித்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிவந்தனர். இதையடுத்து, வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, வேதா இல்லத்தை முழுமையாக அரசுடையாக்கும் பணிகள் இன்று (டிசம்பர் 30 ) தொடங்கின. மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் வட்டாட்சியர், வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறையினர் இன்று காலை வேதா இல்லம் வந்தனர். சசகலாவின் அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதால் வருமான வரித் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் முன்னிலையில் வீட்டை அளவிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வின்போது சீல் வைக்கப்பட்டிர...
கழிவறையின் முக்கியத்துவம் குறித்து  த்ரிஷா விழிப்புணர்வு

கழிவறையின் முக்கியத்துவம் குறித்து த்ரிஷா விழிப்புணர்வு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
சினிமாவைத் தாண்டி சமூகச் சேவையில் அக்கறை செலுத்திவரும் த்ரிஷா, கழிவறையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறார். திரையுலகில் பல படங்களில் பிஸியாக த்ரிஷா நடித்துவந்தாலும் சமூகச் சேவைகளிலும் நாட்டம் காட்டி வருகிறார். விலங்குகள் நலன், குழந்தைகள் கல்வி போன்றவற்றுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் த்ரிஷாவுக்கு, அங்கீகாரம் தரும் வகையில் ‘யுனிசெஃபின் செலிப்ரிடி அட்வகேட்’ என்ற பதவி சமீபத்தில் அவருக்கு வழங்கப்பட்டது. இந்தப் பதவியில் இருந்தபடி அவர் குழந்தைகள் கல்வி, குழந்தைத் திருமண முறை, குழந்தைத் தொழிலாளர் முறை, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் போன்றவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார். குழந்தைகள், பெண்களுக்கான விழிப்புணர்வு மட்டுமல்லாது சமூக விழிப்புணர்விலும் ஈடுபட்டுவரும் த்ரிஷா, காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலி கிராமத்துக்கு வருகை புரிந்தார். அங்குக...
காலத்திற்கும் நினைவில் இருக்கும் அறம் கொடுத்த நயன்தாராவுக்கும் குழுவுக்கும் வாழ்த்துக்கள் – விக்னேஷ் சிவன்

காலத்திற்கும் நினைவில் இருக்கும் அறம் கொடுத்த நயன்தாராவுக்கும் குழுவுக்கும் வாழ்த்துக்கள் – விக்னேஷ் சிவன்

CINI NEWS, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
அறம் படம் ரிலீஸாகி 50 நாட்களாகியுள்ளது. கால காலத்திற்கும் நினைவில் இருக்கும் படத்தை கொடுத்த நயன்தாராவுக்கும் அறம் குழுவுக்கும் வாழ்த்துக்கள் -இயக்குனர் விக்னேஷ் சிவன் மக்கள் இதை காலகாலத்துக்கும் மறக்க மாட்டார்கள் என்று ட்வீட்டியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மாவட்ட கலெக்டர் மதிவதனியாக நடித்த படம் அறம். அறம் படத்திற்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்து ஹிட்டாக்கிவிட்டனர். அறம் படம் ரிலீஸாகி 50 நாட்களாகியுள்ளது ஒரு நல்ல படம் வென்றால் அது எப்பொழுதுமே மக்களின் வெற்றி. கால காலத்திற்கும் நினைவில் இருக்கும் படத்தை கொடுத்த நயன்தாராவுக்கும் அறம் குழுவுக்கும் வாழ்த்துக்கள் என ட்வீட்யுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்....
ஆட்சி கலையும் என டிடிவி தினகரன் கனவு – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

ஆட்சி கலையும் என டிடிவி தினகரன் கனவு – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆட்சி கவிழும் என டிடிவி தினகரன் கனவு காண்கிறார் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் ஆர்கே நகர் தொகுதி சட்டசபை உறுப்பினராக இன்று பதவியேற்றார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அ.தி.மு.க.வில் ரத்தமும் சதையுமாக உள்ள தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர் என்று அவர் கூறினார். சசிகலா தலைமையிலான அ.தி.மு.க.வே உண்மையான இயக்கம் என ஆர்.கே நகர் மக்கள் தீர்ப்பு வழங்கி விட்டனர் என்றும் தினகரன் தெரிவித்தார். துரோக வரலாற்றில் துரோகத்திற்கு இடமில்லை என்றும் கூறினார். மனதளவில் பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எங்கள் பக்கமே உள்ளனர் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். சிலர் வழிவிட்டால் கட்சியை தக்கவைக்கலாம் என்றும் அவர் கூறினார். கடந்த சில நாட்களாகவே டிடிவி தினகரன் இந்த ஆட்சி விரைவில் கவிழும் வீட்டுக்கு அனுப்பப்படும் என கூறி வருக...
அறிவாலயத்தில் 2018-ஜனவரி 7- ம் தேதி தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…!

அறிவாலயத்தில் 2018-ஜனவரி 7- ம் தேதி தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜனவரி 7ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அதிமுக அரசு பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் 2018-ஜனவரி 7- ம் தேதி தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்...
திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த ரஜினிகாந்த்

திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினி, தன் ரசிகர்களை 4 வது நாளாகச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துவருகிறார். இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை ரஜினி சந்தித்து வருகிறார். காலை சுமார் 8.30 மணிக்கு ராகவேந்திரா மண்டபம் வந்த ரஜினி, ரசிகர்கள் மத்தியில் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:- என் நண்பர்கள் அதிகம் வாழும் நகரம் கோவை என்று பேச்சைத் தொடங்கிய ரஜினி, அங்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். எனது குரு சச்சிதானந்தர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர். எனக்கு மந்திர உபதேசம் செய்தவர் சச்சிதானந்த சுவாமிகள். சுவாமி தயானந்த சரஸ்வதி எனது குரு. சச்சிதானந்த சுவாமிகள் சொல்லியே பாபா படம் எடுத்தேன். அதேபோல் தயானந்த சரஸ்வதி எனக்கு குரு. கோயம்புத்தூர் விமான நிலையம் போகும் போதெல்லாம் எனக்கு ஒரு ஞாபகம் வரும். ஆன்மிகத்திற்கும் ஓரளவுக்கு பப்ளிசிட்டி தேவை. கோவை வ...
ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது: முதல்வர் பழனிசாமி

ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது: முதல்வர் பழனிசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தினகரன், எம்.எல்.ஏ.வாக இன்று பதவியேற்றுக்கொண்டார். சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “குறிப்பிட்ட சிலர் மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சியை தக்க வைக்கலாம்” என்று கூறினார். “கட்சிக்கு களங்கம் விளைவித்தவர்களே, மற்றவர்களை களங்கம் விளைவித்ததாக நடவடிக்கை எடுக்கின்றனர். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் எங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும். இவர்களின் ஆட்சி இன்னும் 3 மாதத்திற்கு மட்டுமே தொடரும்” என்றும் கூறினார். இந்நிலையில், கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- அ.தி.மு.க ஆட்சி மீது திட்டமிட்டு வீண்பழியை சுமத்தி அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சி செய்கின்றனர். ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அ.தி.மு.க என...
எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார் டிடிவி தினகரன்..!

எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார் டிடிவி தினகரன்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ஆக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன் சென்னை கோட்டையில் சபாநாயகர அறையில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார். பதவி பிரமாணம் செய்து வைத்த சபாநாயகர் தனபாலுக்கு ரோஜா பூக்கூடை கொடுத்து தினகரன் மகிழ்ச்சி தெரிவித்தார்.