அரசின் தீர்மானங்களை கிடப்பில் போடும் ஆளுநர்களுக்கு… வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு ஆதாரம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரசின் தீர்மானங்களை கிடப்பில் போடும் ஆளுநர்களுக்கு... உச்சநீதிமன்றத் தீர்ப்பு
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் தீர்மானங்களை ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு ஆதாரம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேர் இன்று விடுதலை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில்,
1. பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நளினி, இரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன், முருகன், ஜெயக்குமார் ஆகிய ஆறுபேரையும் விடுதலை செய்துள்ளது உச்சநீதிமன்றம்.
2. நளினிக்கு விதிக்கப்பட்ட்ட தூக்குத்தண்டனையை, முதன்முதலில் 2000 ஆம் ஆண்டிலேயே ஆயுள் தண்டனைய...









