ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 9
Shadow

NEWS

காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெறும் `சாமி-2′

காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெறும் `சாமி-2′

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரம் சினிமா படப்படிப்பு தளமாக இருந்து வருகிறது. பொதுவாக சினிமா படப்பிடிப்பு சென்னை, மதுரை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதியிலும், வெளிநாடுகளிலும் நடைபெறுவது வழக்கம். ஆனால் காரைக்குடி பகுதியில் ஒரு படத்தின் படப்பிடிப்பு நடத்தினால் அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்து விடும் என்ற நம்பிக்கை சினிமாத்துறையினருக்கு இருந்து வருகிறது. மேலும் இயக்குனர் ஹரி இயக்கும் தனது படத்தின் ஒரு காட்சியாவது காரைக்குடி பகுதியில் நடத்துவதை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். இதன்படி சினிமா டைரக்டர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த சாமி திரைப்படம் கடந்த 2003-ம் ஆண்டு திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து அந்த படத்தின் 2-வது பாகம் தற்போது நடைபெற்று வருகிறது. சாமி-2 திரைப்படத்தில் நடிகர் விக்ரம், வில்லன் நடிகராக பாபிசிம்ஹா, ஓ.ஏ.கே. சுந்தர், பாலாசிங், தியாக...
டிடிவி தினகரன் 29–ந்தேதி ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கிறார்

டிடிவி தினகரன் 29–ந்தேதி ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கிறார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த வியாழக் கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், சுயேச்சையாக டி.டி.வி.தினகரன், பாரதீய ஜனதா சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் ஆகியோர் உள்பட 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பல்வேறு வேட்பாளர்கள் களத்தில் இருந்த போதிலும் மதுசூதனன், மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இடையேதான் கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் டிடிவி தினகரன் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை விட அவர் 40 ஆயிரத்து 707 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார். 48 ஆயிரத்து 306 ஓட்டுகள் பெற்ற மதுசூதனனுக்கு 2-வது இடம் கிடைத்தது. ...
முதலில் குடும்பம்தான் உங்களோடு நிறைய பேச வேண்டியுள்ளது காத்திருங்கள் -2ம் நாள் சந்திப்பில் ரஜினிகாந்த்

முதலில் குடும்பம்தான் உங்களோடு நிறைய பேச வேண்டியுள்ளது காத்திருங்கள் -2ம் நாள் சந்திப்பில் ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில்  காஞ்சீபுரம், திருவள்ளூர், கிருஷ்ண கிரி, தர்மபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை நேற்று சந்தித்தார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அடையாள அட்டையுடன் வந்த ரசிகர்கள் மட்டுமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், இன்று 2-வது நாளாக  ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட ரசிகர்களை சந்தித்து ரஜினிகாந்த், அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். முன்னதாக, பேசிய ரஜினிகாந்த், ”இரண்டாவது நாளாக உங்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் குடும்பம்தான் முக்கியம். தாய். தந்தையர் வாழும் தெய்வங்கள். குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், நமது சொத்து அவர்கள் தான். ரசிகர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலி...
ஜன.28ல் லிப்ரா குறும்பட விழாவில் கலந்துகொள்ளும் கனடா மற்றும் ரஷ்ய குறும்படங்கள்..!

ஜன.28ல் லிப்ரா குறும்பட விழாவில் கலந்துகொள்ளும் கனடா மற்றும் ரஷ்ய குறும்படங்கள்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
லிப்ரா குறும்பட விழாவில் கலந்துகொள்ளும் கனடா மற்றும் ரஷ்ய குறும்படங்கள்..! லிப்ரா குறும்பட விழாவில் பங்கேற்க சர்வதேச திரைப்பட ஜூரிக்கள் வருகை..! குறும்பட விழாக்களின் முன்னோடியாக திகழப்போகும் லிப்ரா புரொடக்சன் குறும்பட விழா..! ஜன-28ல் லிப்ரா புரொடக்சன்ஸ் பிரமாண்ட குறும்பட திருவிழா..! சில விஷயங்கள் சொன்ன நேரத்தில் நடக்காமல் தள்ளிப்போவது என்பது கூட நல்லதற்குத்தான் என்றே நினைக்க தோன்றுகிறது. ஆம்.. தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் தயாரிப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டு சொல்ல கூடியவற்றில் ஒன்றான லிப்ரா புரடக்சன்ஸ் குறும்பட இயக்குனர்களுக்கு வெள்ளித்திரை வாசலை திறந்துவிடும் ஒரு முயற்சியாக கடந்த நவ-29ல் குறும்பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த குறும்பட போட்டியில் கலந்துகொள்ள போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்புமாறு அறிவிப்பு வெளியிட்டிருந்தது லிப்ரா புரடக்சன...
நடிகர் பிரபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சார்லிசாப்ளின் 2 படக்குழு…!

நடிகர் பிரபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சார்லிசாப்ளின் 2 படக்குழு…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சார்லி சாப்ளின் 2 படப்பிடிப்பில் இளைய திலகம் பிரபு தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.. விழாவில் பிரபுதேவா நிக்கி கல்ராணி தயாரிப்பாளர் டி சிவா இயக்குனர் ஷக்திசிதம்பரம் கும்கி அஸ்வின்அரவிந்த் ஆகாஷ் ஜீவன் நடிகை செந்தி பரஞ் ஜோதி கனல்கண்ணன் ஒளிப்பதிவாளர் செளந்தர்ராஜன் பாலா ஆகியோர் உடனிருந்தனர். நடிகர் பிரபுவுக்கு செட்டில் கேக் வெட்டி கொண்டாடும் பிறந்த நாள் கலகலப்பை அவரிடம் சொல்லாமல் திடீரென கேக் வெட்டும் நிகழ்ச்சியால் பிரபு இன்ப அதிர்ச்சி அடைந்தார்....
தமிழக அரசியலில் அடுத்து என்ன…? ஆருடம் சொல்கிறார் பிரபல இயக்குனர்..!

தமிழக அரசியலில் அடுத்து என்ன…? ஆருடம் சொல்கிறார் பிரபல இயக்குனர்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அரசியலில் அடுத்தது என்ன? .. ஒரு சாமான்யனின் உண்மையான உள்ள குமுறல்… கூவத்தூர்ல தங்கின கோஷ்டி பத்து பத்தா தினகரன் பக்கம் சாயும் .. எடப்பாடி கூடாரம் மெதுவா காலியாக ஆரம்பிக்கும் .. பன்னீர் கூட்டினாலும் கழிச்சாலும் அந்த பன்னிரண்டோட நிப்பார் .. எடப்பாடிக்கு அப்படி இப்படி சுமார் ஒரு எட்டு தேறிடும் .. அந்த 12ம் 8ம் சேருமா சேராதான்னு ஆண்டவனால கூட சொல்ல முடியாது .. 12 + 8 = 20 .. அப்ப 133 – 20= 113 (எடப்பாடிக்கும் பன்னீருக்கும் சேர்ந்ததை கழிச்சா) Disqualify பண்ணினது எவ்வளவுப்பா? Calculatorகள் கதை பேசும் .. ஆக, தினகரனும் மெஜாரிட்டிக்கு திண்டாடுவார் .. கவர்னர் எட்டிப்பார்ப்பார் .. BJP க்கு இருக்கற கெட்ட பேரு இன்னும் 100 மடங்கு கூடும் .. . ஸ்டாலின் நாக்குல முதன் மந்திரி ஜலம் ஊரும் .. கனிமொழி கலைஞர் பக்கத்துல நின்னு ஏதாவது நல்ல சேதி கலைஞர் மூலமா ஸ்டாலின் வாயால அவளுக்கு எதிர்பார்ப்பா .. ...
107 வயது மூதாட்டிக்கு ராகுல்காந்தியின் பரிசு..!

107 வயது மூதாட்டிக்கு ராகுல்காந்தியின் பரிசு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
107 வயது மூதாட்டிக்கு ராகுலின் பிறந்த நாள் பரிசு தன்னை சந்திக்க விரும்பிய, பெங்களூருவை சேர்ந்த 107 வயது மூதாட்டி ஒருவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.பெங்களூருவை சேர்ந்த திபாலி சிகந்த் என்பவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது: இன்று எனது பாட்டிக்கு 107 வது பிறந்த நாள். காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்திக்க வேண்டும் என்பது அவரது ஆசை. இதற்கு என்ன காரணம் என நான் கேட்டேன். அதற்கு அவர், ராகுல் அழகாக உள்ளார் என பதிலளித்தார். எனக்கூறினார். மேலும், தனது பாட்டி கேக் வெட்டு பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.இதனை பார்த்த ராகுல், பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை: அன்பான திபாலி அவர்களே, எனது பிறந்த நாள் மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை உங்களது அழகான பாட்டியிடம் கூறுங்கள். என் சார்பாக, அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவியுங்...
ரஜினியின் உயர்வுக்கு காரணம் அவரது நிதானம் தான் – இயக்குநர் மகேந்திரன் பேச்சு

ரஜினியின் உயர்வுக்கு காரணம் அவரது நிதானம் தான் – இயக்குநர் மகேந்திரன் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் ஈடுபட இருக்கிறார். விரைவில் புதிய கட்சியை தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக ரஜினி அவர்களது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று (26-ந்தேதி) முதல்31-ந் தேதி வரை ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார். இதில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை இன்று சந்திக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்துடன் தயாரிப்பாளர் கலைஞானம், இயக்குநர் மகேந்திரனும் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் மகேந்திரன் பேசுகையில், யாரும் வருத்தப்படும்படி ரஜினி நடந்து கொள்ள மாட்டார். ரஜினியின் உயர்வுக்கு காரணம் அவரது நிதானம் தான். நிதானம் உள்ளவர்கள்தான் ஜெயித்து சாதனை படைக்கின்றனர். நல்ல தலைவனுக்குரிய அத்தனை அம்சங்களும் ரஜினியிடம...
கட்சியில் இருந்து எங்களை நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது: தங்க தமிழ்ச்செல்வன்

கட்சியில் இருந்து எங்களை நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது: தங்க தமிழ்ச்செல்வன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் சென்னை அடையாறில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- டி.டி.வி.தினகரன் ஒரு மாயமான். அவர் பின்னால் சென்றால் எந்த பலனும் இருக்காது. அவரைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறாரே... பதில்:- 1999-ம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக நின்றபோது நாங்கள் தெருத்தெருவாக சென்று வாக்கு கேட்டுவிட்டு வந்து இரவு 11 மணிக்கு டீ சாப்பிடுவோம். அப்போது ஓ.பன்னீர்செல்வம் கையை கட்டிக் கொண்டு, நெற்றியில் பட்டையை போட்டுவிட்டு பவ்வியமாக நிற்பார். உங்களை விடவும் வயதில் நான் சின்னவன், வேட்பாளரும் வயது குறைவானவர்தான் உட்காருங்கள் தவறாக நினைக்கமாட்டார் என்று சொன்னேன். சாருக்கு முன்னாடி எப்போது நான் உட்கார்ந்தேன்.. சத்தியமாக உட்கா...
உலகம் முழுவதும் போர் காற்று வீசிக் கொண்டிருக்கிறது: போப் ஆண்டவர் பிரான்சிஸ்

உலகம் முழுவதும் போர் காற்று வீசிக் கொண்டிருக்கிறது: போப் ஆண்டவர் பிரான்சிஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
வாடிகன் நகரில் உள்ள செயின்பீட்டர் சதுக்கத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். அதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:- உலகம் முழுவதும் இன்று போர் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மத்திய கிழக்கிலும், ஆப்ரிக்காவிலும் பதற்றம் நிலவி வருகிறது. அதில் பாதிக்கப்படும் சிறு குழந்தைகளின் முகத்தில் தெரியும் வேதனை மிகவும் பாதிக்கிறது. எனவே, போர் பதற்றத்தை தணிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே அமைதியை ஏற்படுத்த வேண்டும். அது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே சாத்தியமாகும். கொரிய தீபகற்பத்தில் நிலவும் முரண்பாடுகளை களைய வேண்டும். அப்போது தான் பரஸ்பரம் நம்பிக்கை மேம்படும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், சிரியா, ஏமனில் நடக்க...