உடுக்கை இழந்தவன்
கைபோல ஆங்கே இடுக்கண் களைவது நட்பாம்!
வேட்டிக் கழண்டாதான் மானம் போகனும்னு அவசியமில்லே…. ஒரு கலைஞனுக்கு அந்த வருஷத்தில படமே வரலேன்னாலும்,வந்த படம் சரியாப் போகலைன்னாலும், உரிய அங்கீகாரம் கிடைக்கலைன்னாலும் மானம் மட்டுமில்லே ஒட்டிகிட்டே மரியாதையும் கூடவே போயிடும்.
20 மாசமா மனசு கர்ப்பமாவே இருக்கு, என் இயக்கப் படம் வரலைங்கிற பாரத்தோட… இந்த அறிவிப்பு மானம் போகாம இடுக்கண் களைந்த நட்பாய் கண்களில் நீர் கோர்த்த பரவசத்தோட, சுவாசத்தை சுவாரஸ்யமா மாத்தியிருக்கு,நம்பிக்கை தசையை ஏத்தியிருக்கு, தித்திப்பை திசையெங்கும் கூட்டியிருக்கு. நன்றி சொல்ல நா வரண்டுப் போனதால , எழுதி சமாளிக்க ஏதுவான வார்த்தையை வானத்தில கண்கள் தேடிகிட்டிருக்கு.
விருது பெற்ற அனைவருக்கும் என் மனமொத்தத்தையும் ஒரு பூப்பந்தாக்கி வாழ்த்துக்கள். முந்தாநாள் பொறந்து வந்த குதிரைகளோடு பந்தயத்தில் ...
எழுத்தாளர் இரா. சரவணன் எழுதிய 'சங்காரம்' நூல் வெளியீடு & அறிமுக விழா
'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே', 'நந்தன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், எழுத்தாளருமான இரா. சரவணன் எழுதிய 'சங்காரம்' எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் எழுத்தாளரும், பத்திரிக்கையாளரும், பதிப்பாளருமான நக்கீரன் கோபால் , மக்களவை உறுப்பினரும், இலக்கியவாதியுமான திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், 'ஆனந்த விகடன்' ஆசிரியர் முருகன், 'ஜூனியர் விகடன்' ஆசிரியர் கலைச்செல்வன், கவிஞர் வெயில், நடிகர்கள் சசிகுமார், சூரி, திருமதி கலா சின்னதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஜூனியர் விகடன் எனும் வார இதழில் ஐம்பது வாரத்திற்கும் மேலாக எழுதப்பட்டு, வாசகர்களிடம் பேராதரவை பெற்ற தொடர்.. தற்போது' சங்காரம்' எனும் நூலாக தயாராகி இருக்கிறது. வன்...
ரிலீஸ் சிக்கல்...ஜனநாயக(னி)ன் நாளை(ய) தீர்ப்பு..!
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழ் விவகார வழக்கில் நாளை (ஜனவரி 9 ஆம் தேதி) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆஷா தீர்ப்பு வழங்க இருக்கிறார்.
நடிகர் விஜய்யின் 69 ஆவது மற்றும் கடைசிப் படமான ஜனநாயகன் திரைப்படம் நாளை வெளியாக இருந்தது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு அனிரூத் இசையமைத்து உள்ளார்.
இந்த நிலையில் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால், படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்க இருக்கிறது. தீர்ப்பை நீதிபதி பி.டி. ஆஷா வழங்க இருக்கிறார்.
நேற்றிரவு ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள ச...