வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

திரைப்படங்கள்

ஆதியின் ‘கிளாப்’ ஷூட்டிங் சத்தமில்லாமல் வேகமெடுக்க தொடங்கிடுச்சி..!

ஆதியின் ‘கிளாப்’ ஷூட்டிங் சத்தமில்லாமல் வேகமெடுக்க தொடங்கிடுச்சி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஆதியின் 'கிளாப்' ஷூட்டிங் சத்தமில்லாமல் வேகமெடுக்க தொடங்கிடுச்சி..! அடுத்த எதிர்வரும் நாட்களுக்கு, ஆதி வியர்வையில் நனைவது, தசைகளை நெகிழச் செய்வது, மூட்டுகளை நீட்டுவதை நீங்கள் காண முடியும். ஆம், ஒரு கடுமையான தடகள வீரரான அவர், அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்கும் “கிளாப்” படத்தில், தன் கதாபாத்திரத்திற்கு தன் உயிரையும், ஆன்மாவையும் தந்து உழைக்கிறார். ‘தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்’ என்ற உத்வேகம் அளிக்கும் டேக்லைன் உடன் படம் வெளியாகிறது. பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிப்பில் ஜூன் 12ஆம் தேதி ஒரு எளிய சடங்கு விழாவுடன் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று (ஜூன் 20) முதல் முழு வீச்சில் தொடங்கப்பட்டிருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள நேர்த்தியான மற்றும் அழகான பகுதிகளில் படமாக்கப்படுகிறது. ஆதி ஒரு பரிபூரணமான தடகள வீரராக பிர...
அருண் விஜய் ஜோடியான நிக்கியின் தங்கை..!

அருண் விஜய் ஜோடியான நிக்கியின் தங்கை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அருண் விஜய் ஜோடியான நிக்கியின் தங்கை..! அருண்விஜய் நடிக்கும் புதிய படமான ‘பாக்ஸர்’ படத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. விவேக் இயக்கத்தில் மார்க்கஸ் ஒளிப்பதிவில் லியோன் இசையில் உருவாகும் இந்த படத்தை வி.மதியழகன் தயாரிக்கவுள்ளார் இந்த படத்தில் பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி நாயகியாக நடிக்கவுள்ளார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் என்றாலும் ஏற்கனவே இவர் தெலுங்கு, கன்னட, மலையாள திரையுலகில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. பூஜையை அடுத்து விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது....
இணையத்தை கலக்கும் தளபதி63 பட டைட்டில் “பிகில்”

இணையத்தை கலக்கும் தளபதி63 பட டைட்டில் “பிகில்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தளபதி63 பட டைட்டில் "பிகில்" அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்படாமல் தளபதி63 என்றே அழைத்தனர். படத்தின் ஷூட்டிங் பெரும் பகுதி முடிந்த நிலையில் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டமாக படத்தின் அப்டேட் இருக்கும் என்று கூறப்பட்டது. இதையடுத்து படத்தின் தயாரிப்பு தரப்பு 21ம் தேதி, 22ம் தேதி இரண்டு முக்கிய அப்டேட் இருக்கும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று மாலை படத்தின் தலைப்பு "பிகில்" என அறிவிக்கப்பட்டது. அதோடு விஜய் அப்பா மகன் என இரு வேஷத்தில் இருக்கும் போஸ்டரும் வெளியானது. தலைப்பு, போஸ்டர் இரண்டும் வெளியான சில நொடிகளில் இந்தியா முழுதும் இணையத்தில் வைரலானது. இந்த படம் தீபாவளி ரிலீஸ் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது....
கரகாட்டகாரன் 2 முடிவு தேன் கூட்டில் கை வைப்பதற்கு சமம் – ராமராஜன்

கரகாட்டகாரன் 2 முடிவு தேன் கூட்டில் கை வைப்பதற்கு சமம் – ராமராஜன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கரகாட்டக்காரன் 2 எடுக்க நினைப்பது தேன் கூட்டில் கை வைப்பதற்கு சமம் என ராமராஜன் கூறியுள்ளார். 90 கால கட்டத்தில் வெளியாகி மெகா ஹிட் ஆன படம் கரகாட்டக்காரன். ராமராஜன்-கனகா ஜோடி நடிப்பில் கங்கைஅமரன் இயக்கி தயாரித்த படம் இது. கவுண்டமணி, செந்தில், கோவைசரளா கூட்டணியின் காமெடி காலத்தால் அழிக்க முடியாதபடி இப்போதும் ரசிக்கும்படி உள்ளது. தமிழ் திரையுலகில் சமீப காலமாக ஹிட் ஆன படங்களை இரண்டாம் பாகம் எடுப்பது தொடர்கதையாகி வருகிறது. அதில் சில வெற்றி பெறுகிறது. பல படங்கள் படு தோல்வி அடைகிறது. அந்தவகையில் ஹிட் ஆன் கரகாட்டக்காரன் படத்தை இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இதில் நடித்த ராமராஜன் "கங்கை அமரன் கூட கேட்டார் ஆனால் இது சத்தியாமவதற்கான வாய்ப்பு பற்றி எனக்கு தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை கரகம் எடுத்து ஆடியாச்சு.. படமும் ஓடியாச்சு.. இனிமேல...
மாதவனுடன் கை கோர்த்த டைட்டானிக் நடிகர்..!

மாதவனுடன் கை கோர்த்த டைட்டானிக் நடிகர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மாதவனுடன் கை கோர்த்த டைடானிக் நடிகர்..! கேரளாவைச் சேர்ந்த நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் நம்பி நாராயண் ராக்கெட்ரி படத்தில் மாதவன் நடித்து வருகிறார். இஸ்ரோவில் அறிவியல் விஞ்ஞானியாக பணி புரிந்தவர் நம்பி நாராயணன். இவர், 1994-ல் இவர் வேறு நாட்டிற்கு தகவல் கொடுக்கும் உளவாளி என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மிக பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு 1996-ல் சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. பல ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடைசியாக 1998-ல் வந்த தீர்ப்பின் படி நம்பி நாராயணன் ஒரு குற்றமும் செய்யவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, நம்பியை விடுதலை செய்த நீதிமன்றம், அதில் வெற்றி பெற்ற அவருக்கு 50 லட்சம் நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது. நம்பி நாராயணன் தனக்கு நடந்த சம்பவங்களை 'ரெடி டூ பையர்: How India and I survived the ISRO...
அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருந்தேன் – தண்ணீர் பிரச்சினையை  பொது மேடையில் பேசிய எஸ்.பி.பி.

அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருந்தேன் – தண்ணீர் பிரச்சினையை பொது மேடையில் பேசிய எஸ்.பி.பி.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருந்தேன் - தண்ணீர் பிரச்சினையை பொது மேடையில் பேசிய எஸ்.பி.பி. யோகிபாபு நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கூர்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பேசியதாவது:- ‘தங்கம், பிளாட்டினத்தை விட தண்ணீர் மிகவும் விலை உயர்ந்தது. தண்ணீர் பற்றாக்குறை தற்போது அதிக அளவில் உள்ளது. அதற்கு காரணம் நாம் தான். இப்போதாவது தண்ணீர் சேகரிப்பது தொடர்பாக நல்ல வி‌ஷயங்களை நாம் செய்ய முயற்சி செய்ய வேண்டும். தண்ணீரை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். சின்ன சின்ன பயன்படுத்தும் முறைகள் உள்ளன. அவற்றை அன்றாடம் நாம் பயன் படுத்தினால் போதும். நம் தட்டில் சாப்பிடுவதை விட வாழை இலையில் சாப்பிடலாம். அதனால் தண்ணீர் மிச்சமாக வாய்ப்புள்ளது. தினமும் வெவ்வேறு ஆடைகளை பயன்படுத...
சமந்தாவுக்காக டப்பிங் பேசி மீண்டும் பணிக்கு திரும்பிய சின்மயி..!

சமந்தாவுக்காக டப்பிங் பேசி மீண்டும் பணிக்கு திரும்பிய சின்மயி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு எழுப்பியதும் திரையுலகில் சர்ச்சை பெண்ணாக சித்தரிக்கபட்டவர் சின்மயி. சிறந்த பாடகி அதே போல சிறந்த பின்னணி குரல் கலைஞர் என்பதால் பல முன்னணி ஹீரோயின் பலருக்கு டப்பிங் குரல் கொடுத்து வந்தார். வைரமுத்து சர்ச்சைக்கு பின் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயி திடீரென நீக்கப்பட்டார். இதனால் அவரை யாரும் டப்பிங் பேசவோ, பாடவோ அழைக்காமல் இருந்தார்கள். இந்த சர்ச்சையில் சிக்குவதற்கு முன் 96 படத்தில் திரிஷாவுக்கு டப்பிங் பேசினார். இதுகுறித்து சின்மயி கூறும்போது, “டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் என்னை நீக்கிவிட்டனர். அதனால் தமிழ் படங்களுக்கு பின்னணி குரல் கொடுக்க முடியாது. சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளாக சந்தா கட்டவில்லை என்றும் அதனால் நீக்கி விட்டதாகவும் காரணம் சொல்கிறார்கள். சந்தா கட்டாதது குறித...
நடிப்பை பார்க்காமல் உடலை பார்த்தார்கள் மேடையில் கதறிய பிரபலத்தின் மகள்..!

நடிப்பை பார்க்காமல் உடலை பார்த்தார்கள் மேடையில் கதறிய பிரபலத்தின் மகள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நடிகர் பிரபல தயாரிப்பாளர், பைனான்சியர் அருண் பாண்டியன். இவரது மகள் கீர்த்தி பாண்டியன். இவர் தும்பா என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தின் விழாவில் கீர்த்தி பாண்டியன் பேசும் போது ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு ஒரு கட்டத்தில் அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழ அரங்கம் நிசப்தமானது. வழக்கமாக நடிப்புக்காக மேடையில் அழுகிற பிரபலங்களுக்கு மத்தியில் ஒரு பிரபலத்தின் வாரீசாக இருந்தும் தான் அவமதிப்பு செய்யப்பட்டதை பகிரங்கமாக சொல்லி உணர்ச்சிகளை கீர்த்தி பாண்டியன் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அவர் பேசும் போது ""எனக்கு வாய்ப்புத் தருவதற்காக பலர் வந்தனர்.பேசினார்கள்.நானும் பலரிடம் வாய்ப்புக் கேட்டுச்சென்றேன். ஆனால் அவர்களில் பலர் என் தோற்றத்தைக் கண்டு இந்த உருவத்தை எல்லாம் எவன் பார்ப்பான்..யாரும் தியேட்டருக்கு வரமாட்டார்கள் என்று இழிவாக பேசினார்கள்...
கதிர்-சூரி இணைந்த “சர்பத்”

கதிர்-சூரி இணைந்த “சர்பத்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios) நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் 'சர்பத்' அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில் இப்படத்தின் நாயகனாக பரியேறும் பெருமாள் புகழ் கதிர் நடிக்கிறார். அவரோடு  முதல்முறையாக  சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா  அறிமுகமாகிறார்.  முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து,  ஆகியோர் நடிக்கிறார்கள். நம் போக்கில் கதையை வளைக்காமல் கதை போகும் வழியில் திரைக்கதையை அமைத்து, பக்கா பேமிலி எண்டெர்டெயின்மெண்ட் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் பிரபாகரன். டெக்னிக்கல் டீமில் கேமராமேனாக இயக்குநரின் பெயரைக் கொண்ட பிரபாகரன் என்பவர் இணைந்து இருக்கிறார். எடிட்டராக பிரசன்னா ஜி கே இருக்கிறார். இசை அமைப்பாளராக சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அஜிஸ் இருக்கிறார். தரமணி, பேரன்பு உள்...
30 நாளில் முடிந்த சிறகு – இயக்குனர் குட்டி ரேவதி

30 நாளில் முடிந்த சிறகு – இயக்குனர் குட்டி ரேவதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இயக்குநர் குட்டி ரேவதி பேசியதாவது, "இந்த டீமின் ஹம்பல்ஸில் தான் நான் நிற்கிறேன். இது மன மகிழ்ச்சியான நாள். இவர்கள் அனைவரையும் சந்தித்தது பின்னால் ஒரு அழகான கதை இருக்கிறது. நானும் தயாரிப்பாளர் அவர்களும் நிறைய பேசினோம். இரண்டு பேருக்கும் பிடித்தமான கதை தயாரான பின் தான் படத்தைத் துவங்கினோம். 30 நாள் படப்பதிவு நாட்கள் . வாழ்க்கையில் மிக சந்தோஷமான நாட்கள். இந்த நாளில் இசையை வெளியீட வேண்டும் என்பது படப்பதிவுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. இந்தப்படத்தின் இரண்டு. சிறகுகள் யார் என்றால் இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர் தான். அரோல் கரோலியோடு வேலை செய்யும் போது மிக மகிழ்வாக இருந்தது. ஒவ்வொரு பாட்டுக்கும் நிறைய ஆராய்ச்சி செய்து பாடல்களை உருவாக்கினார். ஏ.ஆர்.ரகுமான் அவர்களிடம் எதிர்பார்ப்பதை அரோல் கரோலியிடம் எதிர்பார்த்தேன். அதை அவர் செய்து தந்தார். ஒளிப்பதிவாளர் இந்தப்படத்தை ஒரு நகை வேலை ...