தமிழ் சினிமாவில் உள்ள நாயகிகள் கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க விருப்பம் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் தற்போது பல நாயகிகள் தங்களது கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் நந்திதா ஸ்வேதாவும் இணைந்திருக்கிறார். ‘நர்மதா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், நந்திதா ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். இதுபற்றி படத்தின் தயாரிப்பாளரும், டைரக்டருமான கீதா ராஜ்புத் கூறியதாவது:-
“தாய்க்கும், மகனுக்கும் உள்ள பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியாக சொல்லும் படம், இது. இதில், கதையின் நாயகி நந்திதா ஸ்வேதா 7 வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். கதை நாயகனாக விஜய் வசந்த் நடிக்கிறார். கவுரவ வேடத்தில் நடிக்க முன்னணி கதாநாயகன் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
படத்துக்காக, நாகர்கோவிலில் இயற்கை எழிலுடன் கூடிய திறந்தவெளி அரங்கம், பி...
திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 50 நாட்கள் புதிய படங்கள் திரைக்கு வரவில்லை. இதனால் ஏராளமான படங்கள் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது முன்பதிவு பதிவு அடிப்படையில் படங்கள் திரைக்கு வருகின்றன. இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் தனி குழு அமைக்கப்பட்டு அவர்களுடைய அங்கீகாரத்துடன் வாரந்தோறும் 3 அல்லது 4 படங்கள் திரைக்கு வருகின்றன.
வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு ‘மெர்குரி’, ‘முந்தல்’, ‘தியா’, ‘பாடம்’, ‘பக்கா’, ‘அலைபேசி’, ‘காத்திருப்போர் பட்டியல்’, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன.
வருகிற 11-ந்தேதி முக்கிய படங்கள் திரைக்கு வருகின்றன. விஷால்-சமந்தா நடித்துள்ள ‘இரும்புத்திரை’, அரவிந்தசாமி - அமலாபால் நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, அருள்நிதி - மகிமா நம்பியார் நடித்திருக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, இவை தவிர கீர்த்தி சுரேஷ், சமந்தா,...
நடிகை எமி ஜாக்சன் தமிழில் ‘மதராசபட்டினம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து இந்தியாவிலேயே தங்கி அதிக படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இங்கிலாந்து மாடலான இவர் கவர்ச்சியாக நடிக்க தயங்குவதில்லை.
இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். பாலிவுட் டிவி சீரியலிலும் நடித்து வருகிறார்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘2.0’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். கவர்ச்சி சமூக வலைத்தள நட்சத்திரங்களில் இவரும் ஒருவர். கவர்ச்சி படங்களை வெளியிட கொஞ்சம் கூட தயக்கம் காட்டுவதில்லை. இவர் டாப்லெஸ் புகைப்படங்களை அதிக அளவில் வெளியிட்டுள்ளார்.
தற்போது புதிதாக நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது...
தரமான குடும்பத்தோடு பார்க்கும் படங்கள் இனி வருமா என்ற சந்தேகம் சமீபமாக திரை அரங்குக்கு செல்லும் ரசிகர்களுக்கு மேலோங்கி வருகிறது. அந்த அச்சத்தை ஜூன் 29 ஆம் தேதி வெளி வரும், ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பில் வெளி வரும் "அண்டாவ காணோம்" திரைப்படம் நீக்கும் என தெரிவித்தார் தயாரிப்பாளர் ஜே சதீஷ் குமார்.
ஜே எஸ் பிலிம் கார்பொரேஷன் நிறுவனத்தின் சார்பில் தொடர்ந்து தேசிய அளவில் அங்கீகாரம் கிடைக்க பெறும் படங்களை தயாரிக்கும் அவர் மேலும் கூறியதாவது " "அண்டாவ காணோம் ,
நியாயமான முறையில் தணிக்கை செய்யப்பட்டு , குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்க கூடிய நேர்மையான நகைச்சுவை படம். குழந்தைகள் விடுமுறை காலத்தில் பார்க்க விரும்பும் படங்களை தயாரிப்பது என்பது ஒரு சமூக அக்கறை.சமீபமாக வெகு குறைந்த அளவில் உள்ள ஒரு சாராரை கவரும் படங்கள் வருவது வருத்ததுக்கு உரியது.
இந்த சமூகத்துக்க...
தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன் தற்போது தயாரிக்கும் படத்திற்கு “ பாண்டி முனி “ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் முனியாக பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கிஷெராப் முனி என்கிற அகோரி வேடத்தில் நடிக்க, புதுமுக நடிகையான மேகாலி பாண்டி என்ற வேடத்திலும் நடிக்கிறார். மற்றும் இன்னொரு நாயகியாக நிக்கிஷாபட்டேல், பெராரே ,சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இது நான் இயக்கும் வித்தியாசமான படம்.
இரு வரை கிராம வாழ்வியலையும் காதலையும் குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான் இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன்.
சாமிக்கும் பேய்க்கும் இடையே நடக்க...
‘புன்னகை அரசி’ என்றும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்ளுக்கு பொருத்தமானவர் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை சினேகா, நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஹான் என்ற ஆண்குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு கதாநாயகி வாய்ப்பு அமையாததால் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
கடந்த வருடம் சிவகார்த்திகேயனுடன் ‘வேலைக்காரன்’ படத்தில் வந்தார். அதில், தான் நடித்த காட்சிகளை வெட்டி குறைத்து விட்டதாக அவர் அதிருப்தி வெளியிட்டது பரபரப்பானது. தற்போது தெலுங்கிலும் கன்னடத்திலும் தலா ஒரு படம் கைவசம் வைத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் கூந்தலை பாதியாக குறைத்த சினேகாவின் படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இவருக்கு நீளமான தலைமுடியும் மாடர்ன் உடையை விட புடவை கட்டிக்கொள்வதிலும்தான் அழகு என்று ரசிகர்கள் சொல்வது உண்டு. இந்த நிலையில் தலைமுடியை வெட்டி குறைத்ததை பார...
இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.
இந்நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி வருகிறது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் படத்தின் இயக்குநர் சமுத்திரகனியும் நடிக்கிறார்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தேனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த முடிந்தது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பாடல் காட்சி ஒன்றை பல லட்சம் ரூபாய் ...
ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் `பொட்டு'.
வடிவுடையான் இயக்கியிருக்கும் இந்த படத்தில் பரத் நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்கள். தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ் ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
மருத்துவ பின்னணியில் ஹாரர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற 25-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் தள்ளிப்போன நிலையில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார்....
பிரபல பாடகி நேஹா பாசின் , இன்ஸ்டகிராமில் தன்னுடைய படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கோடைகாலம் ஆரம்பித்து விட்டதால் பிரபல நடிகைகள் பலரும் சுற்றுலா சென்று அங்குள்ள கடலிலோ அல்லது நீச்சல் குளத்திலோ குளிக்கும் போது எடுத்த படங்களை ரசிகர்களிடம் ஷேர் செய்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் தான் பிகினி டிரஸில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றனர்.
தற்போது அஜீத் நடித்த ‘பில்லா’ படத்தில் இடம்பெற்ற ‘செய் ஏதாவது செய்’ என்ற பாடலையும் ‘யோகி’ படத்தில் ‘யோகி யோகி’தான் ஆகிய பாடல்களை பாடியவர் பிரபல பாடகி நேஹா பாசின். தற்போது இவர் நீச்சல் குளத்தில் இருக்கும் படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் இவர் இத்தாலி நாட்டை சேர்ந்த இசையமைப்பாளர் ஒருவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது....