உண்மை நிகழ்வின் திரை வடிவம் தான் லட்சுமி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்”
2015ம் ஆண்டு சென்னைமட்டும் அதன் சுற்றுப்புறத்தை புரட்டிப்போட்ட சம்பவம், ‘சென்னை வெள்ளம். இந்த வெள்ளத்தினால் பலர் உணவின்றி, பூச்சிகள், பாம்புகள் போன்றவையுடன் அவர்களுடைய வீடுகளில் வெள்ள நீர் தேங்கிய நிலையில் தூக்கமின்றி பல நாட்கள் இருந்தனர். அப்படிப்பட்டவர்கள் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர், சிலர் உயிரிழந்தனர்.
இந்த சென்னை வெள்ளத்தில், இப்படிப்பட்ட ஒரு சூழலை சந்தித்த ஒருவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை தான் படமாகியுள்ளார் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த படத்திற்கு ‘ஹவுஸ் ஓனர்’ என்று பெயரையும் வைத்து, படத்தின் முழு படபிடிப்பையும் முடித்துவிட்டு படத்தினை ரிலீசுக்கு தயார் செய்துள்ளார் லட்சுமி.
இப்படம் சென்னை வெள்ளம் சம்பத்தப்பட்ட காட்சிகள் உள்ளதால், அதற்கு செட் போடும் பணியும், பொருட்செலவும் சற்று அதிகம் தான். இந்த சூழலில் படத்தின் இயக்குனர் லட்சுமி ரா...









