சரித்திர வில்லியாக களம் இறங்கப் போகும் உலக அழகி..!
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தொடங்கி இயக்குனர் செல்வராகவன் வரை படமாக்கி பார்க்க ஆசைப்பட்டு நிறைவேறாத ஒரு விஷயம் கல்கியின் பொன்னியின் செல்வன் கதை.
இப்போது அந்த கதையை பிரபல இயக்குனர் மணிரத்னம் கையில் எடுத்திருக்கிறார்.
தமிழ் தொடங்கி இந்தி திரையுலக பிரபலங்கள் பலர் நடிக்க ஒப்பந்தம் ஆகிவருகிறார்கள்.
பூங்குழலி கேரக்ட்டரில் தமிழ் பெண் சூப்பர் ஸ்டாரிணி நயன்தாரா நடிக்க பேசி வருகிறார்.
இப்போது முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அந்த சரித்திர படத்தில் நந்தினி ரோலில் நடிக்க பேசி இருக்கிறார்கள். இந்த கேரக்டர் கொஞ்சம் வில்லத்தனமானது. அப்ப ஐஸ் வில்லியோ......









