பாகிஸ்தானில் ரிலீஸ் ஆகும் ரஜினியின் 2.0
ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் லைகா தயாரிக்கும் ரஜினியின் 2.0 படம் 29ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. தென்னிந்திய மொழி படங்களில் அதிலும் குறிப்பாக பாகிஸ்தானில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை ரஜினியின் 2.0 பெற்றுள்ளது.
இதற்கு முன்பு ரஜினி நடித்த முத்து படம் சீனாவில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டு பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.
அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிக துல்லியமான இசையை கேட்க 4டி டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. படமும் 3டி தொழில்நுட்பத்தில் பார்க்க முடியும். இந்தியாவில் 10 திரையரங்குளில் மட்டுமே இப்போதைக்கு இந்த வசதி இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை இரண்டு திரையரங்குளில் மட்டுமே இந்த நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல ஆயிரம் ஸ்கிரீன்களில் 2.0 ரில...
திமிரு புடிச்சவன் விமர்சனம்
சிறார் குற்றவாளிகள் செய்கிற கொடூரங்களை செய்திகளில் பார்க்கும்போது நம்மையறியாமல் ஒரு பதட்டம் ஏற்படும்... அந்த குழந்தைகள் தப்பித்தவறியும் நமக்கு வேண்டியவர்களாக இருக்கக்கூடாது என்று மனசு வேண்டிக்கொள்ளும்... ஆனால் அம்மா அப்பா இல்லாத சூழலில் தம்பியை நல்லபடியாக வளர்க்கப்போராடும் அண்ணன்... அண்ணனின் கெடுபிடி பாசத்தை உணராத தறுதலை தம்பி இந்த காம்பினேஷனில் உருவான கதைதான் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன்.
போலீஸ் அதிகாரியான விஜய் ஆண்டனி காக்கி யூனிபார்முக்கு கொஞ்சமும் கவுரவம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக ரொம்பவே மெனக்கெடும் சூழலில் தவிர்க்க முடியாத கட்டாயம் ஏற்படும்போது உயிராய் நேசித்த சொந்த தம்பியையே சுட்டுக் கொல்கிறார்.
அந்த கொலைக்கு பிராயச்சித்தம் தேட புறப்படும்போது சிறார் குற்றவாளிகள் என்ற மிகப்பெரிய நெட்வொர்க் தெரிகிறது... அதன் தலைவனை தன் பாணியில் எப்படி...
ஒயிலாட்டம்
கின்னஸ் சாதனை
முயற்சி!
பிண்ணணிபாடகர்
வேல்முருகன் பேட்டி!
பின்னணிபாடகர் வேல்முருகன் கூறியதாவது ; -
" தமிழின் பெருமையும் தமிழர்களின் உணர்வுகளையும் பறைசாற்றும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி 25.11.18 ஞாயிறு அன்று சென்னை திருநின்றவூர் அருகே உள்ள ஜெயா கால்லூரியில் மதியம் 3.00 மணியளவில் நடைபெற உள்ளது.
https://youtu.be/XSWovh650Sw
தமிழர்களின் பாரம்பரிய கலையான ஒயிலாட்டம் நடனத்தை 5000 பேருக்கும் மேல் நடனமாடி கின்னஸ் உலாகசாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளனர்.
இந்த சாதனை நிகழ்வில் பங்கு பெற அதிகமானபேர் பெயர் கொடுத்து வருகின்றனர்.
இந்த முயற்சிக்கு
நடிகர் சங்க தலைவர் நாசர், இசைமைப்பாளர்கள் தேவா, ஜி.வி.பிரகாஷ்,கவிஞர் பிறைசூடன், முன்னாள் மேயர் மா.சுப்ரமணியம், நடிகர்கள் தம்பிராமையா, சூரி, ரோபோசங்கர், போஸ்வெங்கட், வையாபுரி, நடிகை ஆர்த்தி, திண்டுக்கல் லியோனி, சுப.வீர...
சைக்கோ கதை எனக்காக உருவாக்கப்பட்டது - மிஷ்கின் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் - புதுமுக நடிகர் மைத்ரேயா குமுறல்
பிரபல இயக்குனர் மிஷ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘சைக்கோ’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் வெளியானது.
இந்நிலையில், புதுமுக நடிகர் மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் எனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குனர் மிஷ்கின் என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வீடியோ லிங்க்...
https://www.youtube.com/watch?v=-1F4PmrCv6Y...