“வடக்குப்பட்டி ராமசாமி” படத்தில் பெரியார் குறித்த சர்ச்சை சந்தானம் விளக்கம் அளிப்பார் – எஸ்கேப் ஆன இயக்குனர்
வடக்கு பட்டி ராமசாமி பட டிரைலரில் பெரியார் குறித்த அவதூறு சர்ச்சை தமிழகம் முழுவதும் எழுந்த நிலையில் அதன் இயக்குனர் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “படத்தில் இடம் பெற்ற அந்த வசனம் தந்தை பெரியாரை அவமதிக்கும் வசனமல்ல. காட்சிக்காகச் சேர்க்கப்பட்ட ஒரு வசனம்தான் அது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதற்குரிய விளக்கத்தை சந்தானம் கண்டிப்பாகக் கொடுப்பார்.
பக்தியை வைத்து பணம் சம்பாதிக்கும் சிலரைப் பற்றிய கதைதான் இந்தப் படம். 70களில் நடக்கும் கதை. அப்போது ‘மெட்ராஸ் ஐ’ என்ற கண் நோய் பரவியது. அதை வைத்தும் படத்தின் திருப்புமுனை காட்சிகளை அமைத்துள்ளோம். ஒரே கட்டமாக 63 நாட்களில் படத்தை முடித்தோம்.
எனது முந்தைய படமான ‘டிக்கிலோனா’ படம் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு படமாக அமைந்தது. அதனால், அடுத்த படத்தை கடந்த காலத்தைப் பற்றிய ஒரு படமாக எடுக்க வேண்டும் என இப்படத்தை எடுத்த...









