சனிக்கிழமை, மே 30
Shadow

MOVIES

கார் ரேஸை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட காமெடி படம்  “ ஜெயிக்கபோவது யாரு “

கார் ரேஸை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட காமெடி படம் “ ஜெயிக்கபோவது யாரு “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
டிட்டு புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பானுசித்ரா தயாரிக்கும் படம் “ ஜெயிக்கபோவது யாரு “ இந்த படத்தில் சக்திஸ்காட் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வந்தனா நடிக்கிறார். மற்றும் ஆர்.பாண்டியராஜன், பவர்ஸ்டார் சீனிவாசன், கோட்டி, சைதன்யா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், எழுதி நாயகனாக நடிக்கிறார் – சக்தி ஸ்காட். இசை   -  சக்திஸ்காட் மற்றும் ஆண்டன் ஜெப்ரின் படம் பற்றி இயக்குனர் சக்தி ஸ்காட் கூறியதாவது... கார் ரேஸை மையமாக வைத்து உருவாக்கப் பட்ட காமெடி படம். பவர் ஸ்டார், காமெடி வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் அவர் புருஸ்லீ, அர்னால்டு, ஹிட்லர், ஐயின்ஸ்டீன், தாம்குரூஸ், ஜேம்ஸ்பாண்ட், பில்கேட்ஸ் என பல கெட்டப்களில் காமெடியில் அசத்தியிருகிறார். இந்த படம் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட படம். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, பாடல்கள், கலை, விஷுவல் எபெக்ட்...
சசிகுமார்  – அஞ்சலி நடிக்கும் நாடோடிகள் – 2

சசிகுமார்  – அஞ்சலி நடிக்கும் நாடோடிகள் – 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
சசிகுமார்  - அஞ்சலி நடிக்கும் நாடோடிகள் -  2   2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில்    "நாடோடிகள் – 2 " உருவாக உள்ளது.  இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டார பகுதிகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில்  அஞ்சலி,பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி,ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்....
‘பத்மாவத்’ எதிர்ப்பு ; பா.ஜ.க.,  ஒட்டுமொத்த நாட்டையும் கொழுந்து விட்டு எரிய வைக்கிறது- ராகுல்காந்தி

‘பத்மாவத்’ எதிர்ப்பு ; பா.ஜ.க., ஒட்டுமொத்த நாட்டையும் கொழுந்து விட்டு எரிய வைக்கிறது- ராகுல்காந்தி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜபுத்ர ராணி பத்மாவதியின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம், `பத்மாவத்'. இந்த திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், தங்கள் மாநிலங்களில் அந்தப் படத்தை வெளியிட முடியாது' என்று மத்தியப்பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் அரசுகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தன. இதனிடையே, 'பத்மாவத்' திரைப்படத்துக்குத் தடை விதிக்க முடியாது' என்று சுப்ரீம் கோர்ட்  உத்தரவு பிறப்பித்தது. பல்வேறு தடைகளை உடைத்து `பத்மாவத்' திரைப்படம் இன்று இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவருகிறது. இதனை எதிர்த்து மத்தியப்பிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. பத்மாவத் படத்திற்கு எதிரான போராட்டத்தின் போது அரியானா மாநிலம், குர்கிராமில் பள்ளி குழந்தைகளை ஏற...
160 கோடிக்கு காப்பீடு… தீபிகாபடுகோனேவுக்கு 12 கோடி சம்பளம் – பத்மாவத் பரபரப்பு

160 கோடிக்கு காப்பீடு… தீபிகாபடுகோனேவுக்கு 12 கோடி சம்பளம் – பத்மாவத் பரபரப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
சர்சையில் சிக்கிய ‘பத்மாவத்’ படம் இந்தியா முழுவதும் நேற்று திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ராஜபுத்திர வம்சத்தினர் தெய்வமாக வழிபடும் சித்தூர் ராணி பத்மினி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடித்து இருக்கிறார். வாள்சண்டை, குதிரை சவாரி பயிற்சிகள் எடுத்து இதில் அவர் நடித்துள்ளார். சரித்திர கால ஆடைகள், ஆபரணங்கள் அணிந்து ராணியாகவே மாறி இருந்தார். படம் பார்த்தவர்கள் அவரது நடிப்பை பாராட்டி வருகிறார்கள். ஆனால் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர்கள் எதிர்க்கிறார்கள். தீபிகா படுகோனே தலைக்கு பரிசுகள் அறிவித்தனர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் அவர் வெளியே செல்கிறார். சமீபத்தில் மும்பையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று படம் சிக்கல் இல்லாமல் வெளியாக வேண்டி வழிபட்டபோதும் போலீசார் பாதுகாப்புக்காக கூடவே வந்தார்கள். தற்போது படம் வெளியான பிறகும் தீபிகா படுகோனேவுக்கு மிரட்டல்கள் தொடர்கின்றன...
மானம்,சூடு,சுரனை இல்லாத ரோலில் கவுதம்கார்த்திக் – படவிழாவில் இயக்குனர் கலாட்டா

மானம்,சூடு,சுரனை இல்லாத ரோலில் கவுதம்கார்த்திக் – படவிழாவில் இயக்குனர் கலாட்டா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
7சி எண்டர்டெயின்மெண்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுக குமார் எழுதி இயக்கி இருக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் ஆறுமுக குமார் பேசும்போது, ‘இந்த கதையின் மீதும், எங்கள் மீதும் நம்பிக்கை வைத்து ஃபைனான்ஸ் செய்திருக்கிறார்கள் அம்மே நாராயணா எண்டர்டெயின்மெண்ட். நான் இயல்பாக பழகுவது ஒரு சாதாரண விஷயம். ஆனால் விஸ்வரூப வளர்ச்சி அடைந்திருக்கும் விஜய் சேதுபதி இப்போதும் அதே மாதிரி பழகுவது  தான் ரொம்ப பெரி...
காயத்ரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்: விஜய் சேதுபதி

காயத்ரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்: விஜய் சேதுபதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
7சி எண்டர்டெயின்மெண்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுக குமார் எழுதி இயக்கி இருக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி பேசும்போது, ‘ஒரு தெளிந்த நீரோடை போல மிகவும் தெளிவானவர் தான் இயக்குனர் ஆறுமுக குமார். ஆள் பார்த்து பழகாமல், எல்லோரையும் சமமாக நினைத்து பழகக் கூடியவர். அவர் முதல் படத்திலேயே தயாரித்து இயக்கியிருக்கிறார். தன் திறமை மேல் நம்பிக்கை வைத்து உழைக்கும் ஹீரோ தான் கௌதம் கார்த்திக்...
சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான ராமின் பேரன்பு..!

சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான ராமின் பேரன்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
`தரமணி' படத்தை தொடர்ந்து, ராம் அடுத்ததாக `பேரன்பு' படத்தை இயக்கி வருகிறார். இதில் கேரளா சூப்பர் ஸ்டார் மம்முட்டி நாயகனாக நடிக்கிறார். சரத்குமார், அஞ்சலி, அஞ்சலி அமீர், சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, தங்கமீன்கள் சாதனா, லிவிங்ஸ்டன், சுராஜ், சித்திக், அருள்தாஸ் உள்பட பலரும் நடிக்கும் இந்த படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ள இந்த படம் நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளதாக இயக்குநர் ராம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராம் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, `47-வது ரோட்டர்டாம் (நெதர்லாந்து) சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு திரைப்படம் தேர்வாகியுள்ளது. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. பேரன்போடு, ராம்.'...
பத்மாவத் பட ரிலீஸ் கொந்தளிப்பு… அரசு பஸ் எரிப்பு திரையிட தியேட்டர்கள் மறுப்பு

பத்மாவத் பட ரிலீஸ் கொந்தளிப்பு… அரசு பஸ் எரிப்பு திரையிட தியேட்டர்கள் மறுப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
பத்மாவத் படத்தை திரையிடலாம் என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவையும் மீறி பத்மாவத் படத்துக்கு பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. குறிப்பாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. பத்மாவத் படம் திரையிட இருந்த தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தியேட்டர்களுக்கு அருகில் சாலையோரம் இருந்த பெட்டிக்கடைகள், மால்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கி தீவைத்தனர். இதனால், சேதம் ஏற்படுத்திய கும்பலை விரட்ட போலீசார் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, அங்கு இருந்தவர்கள்  கலைந்து சென்றனர். இந்த வன்முறை தொடர்பாக ஏராளமான நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வன்முறை நீடிப்பதால், அகமதாபாத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இன்று மாலை குருகி...
எஸ்.எஸ்.ஆர் பேரன் அறிமுகமாகும் “கருத்துக்களை பதிவு செய்”..!

எஸ்.எஸ்.ஆர் பேரன் அறிமுகமாகும் “கருத்துக்களை பதிவு செய்”..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
திரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக காலூன்ற வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கையை பட தயாரிப்பிலும் வினியோகத்துறையிலும் அழுத்தமாக பதிய வைத்த நிறுவனம்RPM cinemas. ஜித்தன் 2 , 1 AM படங்களை தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் களத்தூர் கிராமம், 143 ஆகிய வெளியார் படங்களை சொன்ன தேதியில் வெளியிட்டு உள்ளது. இந்த நிறுவனம் அடுத்ததாக ஒரு குறுகிய கால தயாரிப்பாக    “ கருத்துக்களை பதிவு செய் ” என்ற படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின்  பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. கதை திரைக்கதை வசனத்தை எழுதி இருப்பவர் ராஜசேகர்.   இவர் மிர்ச்சி சிவா நடித்து வெளியான யா யா படத்த...
ஹிச்சி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப்படுத்தும் ராணி முகர்ஜி..!

ஹிச்சி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப்படுத்தும் ராணி முகர்ஜி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள், வீடியோ
ராணி முகர்ஜி தனது ஹிச்சி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப் படுத்த உள்ளார். ராணி ஹிச்சி திரைப்படத்தின் மூலம் சமூகத்திற்க்கு மிகமுக்கிய கருத்தினை தெரிவிக்க உள்ளார்.இப்படத்தின் விளம்பரம் மற்றும் ரிலீஸை 5 மொழிகளில் செய்யது இப்படத்தினை அதிகமாக மக்களிடையே கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். https://youtu.be/nLSaCFlXn-g ராணி முடிந்தவரை ஹிச்சி திரைப்டத்தை அதிக மக்களிடையே கொண்டு செல்ல மராத்தி,பெங்காலி,பஞ்சாபி,ஹிந்தி மற்றும் போஜ்புரி போன்ற 5 வித்யாசமான மொழிகளில் படத்தினை ரிலீஸ் செய்யவுள்ளார்.மேலும் தொலைக்காட்சி மூலமும் விளம்பரத்தை தொடங்கி இப்படத்தினை மக்களிடையே கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். "தனக்கு ஹிச்சி திரைப்படத்தின் கதை ஒரு நடிகையாகவும் மற்றும் பொதுமக்கள் நிலையிலும் வைத்து பார்க்கும்போது மிகவும் விரும்ப வைத்துள்ளது.முடிந்தவரை இப்படத்தினை மக்களிடையே கொண்டு செல்ல முயற்ச்சிப்பேன் " ராணி கூறி...