சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

விளையாட்டு செய்திகள்

தோனி குறித்து அஸ்வின் புகழாரம்!

தோனி குறித்து அஸ்வின் புகழாரம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஐ.பி.எல். 2022 டி20 தொடர் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை  எம் எஸ் தோனி வழிநடத்தி செல்வது குறித்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளதாவது : ஐ.பி.எல்.லில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக தோனி இருந்தார். கடந்த சீசன் உள்பட  சென்னை சூப்பர் கிங்ஸ் 4 பட்டங்களை கைப்பற்ற தோனி அணியை வெற்றிகரமாக வழி நடத்தி உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல சந்தர்ப்பங்களில் முக்கியமான பினிஷிங் ஷாட்கள் விளையாடியதன் மூலம் கடந்த காலங்களில் தோனி அணியின் மன உறுதியை உயர்த்த உதவியுள்ளார். அவரது கேப்டன் திறமை குறித்து பேசுபவர்கள் இது குறித்து  சரியாக பேசுவதில்லை. ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸை மிகவும் நிலையான அணியாக மாற்றினார். தோனியின் அமைதியான மற்றும் கூட்டு அணுகுமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறது. இவ்வாறு அவர் ...
ரஹானே, புஜாராவுக்கு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடமில்லை – பி.சி.சி.ஐ. முடிவு!

ரஹானே, புஜாராவுக்கு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடமில்லை – பி.சி.சி.ஐ. முடிவு!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி வரும் 25ம் தேதி முதல் மார்ச் 1ந் தேதி வரை பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இஷாந்த் ஷர்மா, விருத்திமான் சாஹா, அஜிங்க்யா ரஹானே மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படாது என இந்திய கிரிக்கெட் வாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொடரில் தேர்வாளர்கள் சில புதிய வீரர்களை களமிறக்க விரும்புகிறார்கள், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணி நிர்வாகத்தின் மற்ற மூத்த உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. உயர் அதிகாரி உறுதிப்படுத்தி உள்ளார். அணியில் இடம் இல்லை என்பது தேர்வாளர்களால் தனித்தனியாக நான்கு பேரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ரஞ்சி போட...
2வது ஒருநாள் போட்டி : இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்!

2வது ஒருநாள் போட்டி : இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகளும் அகமதாபாத்தில் உள்ள மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், 2-வது ஒருநாள் போட்டி இன்று பகல் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ரிஷ்ப் ப்ண்டும் களமிறங்கினர். ரோகித் சர்மா 5 ரன்னிலும், ரிஷப் பண்ட் 18 ரன்னிலும், விராட் கோலி 18 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் 43 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து இந்தியா தத்தளித்தது. அடுத்து இறங்கிய கே எல் ராகுலுடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 91 ரன்கள் சேர்த்த நிலையில், ராகுல் 49 ரன்னில் ஆட்டமிழந்தார். அரை சதமடித்த சூர்யகுமார் யாதவ் 64 ரன்னில் அவுட்டானார். வாஷிங்டன் ...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது சிறப்பானதாக இருக்கும்-தினேஷ் கார்த்திக்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது சிறப்பானதாக இருக்கும்-தினேஷ் கார்த்திக்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஐ.பி.எல். 2022 சீசனுக்கான மெகா ஏலம் வரும் 12, 13-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. மூத்த வீரர்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள், அசத்தல் பவுலர்கள், சிறந்த ஆல் ரவுண்டர்கள், இளம் வீரர்கள் என பலர் தங்கள் பெயரை பதிவுசெய்துள்ளனர். இதற்கிடையே, தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த சீசனில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது அங்கிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து விளையாட விரும்புவதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் கார்த்திக், சென்னையை சேர்ந்தவன் நான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது சிறப்பானதாக இருக்கும். எந்த அணியில் விளையாட வாய்ப்பு வந்தாலும் அந்த அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்....
குளிர்கால ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்ற நார்வே

குளிர்கால ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்ற நார்வே

HOME SLIDER, sports, உலக செய்திகள், விளையாட்டு செய்திகள்
  24-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. முழுக்க முழுக்க உறைபனியில் நடக்கும் இந்த போட்டியில் முதலாவது தங்கப்பதக்தக்தை நார்வே தட்டிச் சென்றது. பெண்களுக்கான 15 கிலோமீட்டர் ஸ்கியாத்லான் பந்தயத்தில் (காலில் சக்கர பலகை கட்டிக்கொண்டு ஐஸ்கட்டி பாதையில் சறுக்கியும், கம்பு ஊன்றியும் ஓடுவது) நார்வே வீராங்கனை தெரசி ஜோஹாக் 44 நிமிடம் 13.7 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். ரஷிய வீராங்கனை நதாலியா நேப்ரியேவா வெள்ளிப்பதக்கம் பெற்றார். 33 வயதான ஜோஹாக் ஊக்கமருந்து பயன்படுத்தியதால் 1½ ஆண்டு கால தடை காரணமாக 2018-ம்ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது....
19 வயது உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா 5வது முறையாக சாம்பியன்!

19 வயது உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா 5வது முறையாக சாம்பியன்!

HOME SLIDER, sports, விளையாட்டு செய்திகள்
  19 வயது உலக கிரிக்கெட் கோப்பையில் இந்தியா சாம்பியன்! இறுதிப்போட்டியில் இங்கிலாந்து எதிரான 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது இந்திய U19 அணி. 5வது முறையாக கோப்பையை வென்றுள்ளது   19 வயதுக்குட்பட்டோருக்கான  உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ரூ.40 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது சிறிய டோக்கன் முறையிலான பாராட்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.     இந்திய ஜூனியன் அணி ஐந்தாவது முறை சாம்பியன் பட்டம் வென்றவுடன் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா, வீரர்கள் மற்றும் துணைப்பணியாளர்களுக்கு ரொக்க வெகுமதிகளை அறிவித்தார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த...
U19 உலகக்கோப்பை கிரிக்கெட் : சேஸிங் செய்து இந்தியா வரலாறு படைக்குமா?

U19 உலகக்கோப்பை கிரிக்கெட் : சேஸிங் செய்து இந்தியா வரலாறு படைக்குமா?

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். இதனால் 61 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4-வது வீரராக களம் இறங்கிய ஜேம்ஸ் ரிவ் சிறப்பாக விளையாடி 116 பந்தில் 95 ரன்கள் அடிக்க இங்கிலாந்து 44.5 ஓவரில் 189 ரன்கள் அடித்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியில் ராஜ் பவா சிறப்பாக பந்து வீசி 9.5 ஓவரில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். மற்றொரு பந்து வீச்சாளர் ரவி குமார் 9 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுதது 4 விக்கெட் கைப்பற்றினார். பின்னர்...
வீரர்கள் தேர்வின்போது எடுத்த படம் அல்ல: கங்குலி விளக்கம்!

வீரர்கள் தேர்வின்போது எடுத்த படம் அல்ல: கங்குலி விளக்கம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் கங்குலி உள்ளார். இந்த பதவியில் நியமிக்கப்பட்டதில் இருந்து திறம்பட செய்து வருகிறார். இவர்தான் முதன்முறையாக இந்திய மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை அறிமுகப்படுத்தினார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சில தொடர்களை நடத்த முடியாத நிலையில் ஏற்பட்டது. கடந்த சீசன் ரஞ்சி கோப்பை தொடரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதேநேரில் பெண்கள் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் வழங்கியதாக கூறப்பட்டது. விராட் கோலி கேப்டன் விவகாரத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். இந்த நிலையில்தான், கிரிக்கெட்டில் தாதாவாக செயல்பட்ட கங்குலி, கிரிக்கெட் வாரியத்திலும் தாதாவாக செயல்பட்டு வருகிறார். வீரர்கள் தேர்வில் தலையிடுகிறார் விமர்சனம் எழுந்தது. உச்சக்கட்டமாக வீரர்கள் தேர்வு செய்யும் தேர்வுக்குழுவில் கலந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் படம் ஒன்று பரவி வருகிறது. தற்...
“புஷ்பா” பாடலுக்கு நடனமாடும் வார்னர் மகள்கள்!

“புஷ்பா” பாடலுக்கு நடனமாடும் வார்னர் மகள்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, sports, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், விளையாட்டு செய்திகள்
  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரின் மகள்கள், தெலுங்கு படமான புஷ்பா திரைப்படத்தில் இடம்பிடித்த சாமி சாமி பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியுள்ளனர். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் முரட்டு ரசிகரான டேவிட் வார்னர், அல்லு அர்ஜூன் நடிக்கும் படங்களின் காட்சிகளையும், பாடல்களையும் அப்படியே நடித்துக்காட்டி பலரின் பாராட்டுகளை பெற்றவராவார். இந்நிலையில் அண்மையில் வெளியான புஷ்பா திரைப்பட பாடலுக்கு வார்னர் நடனமாடினார்.   https://twitter.com/DuckBunnyHaters/status/1484470761771323394?s=20&t=loPKvHXFfZbVLqWrV6HTMg   இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் நிலையில் அவரின் மகள்கள் அதேபடத்தில் இடம்பிடித்துள்ள மற்றொரு பாடலுக்கு நடனமாடுவது வார்னரின் ரசிகர்களையும், தெலுங்கு திரைப்பட ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.   https://twitter.com/roronoa_...
டி20 போட்டி – 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய 4வது வீரர் ஹோல்டர்!

டி20 போட்டி – 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய 4வது வீரர் ஹோல்டர்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதிய 5-வது டி20 போட்டி பார்படாசில் நடைபெற்றது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. பொல்லார்டு 41 ரன்னும், பாவெல் 35 ரன்னும் எடுத்தனர். அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜேம்ஸ் வின்ஸ் 55 ரன்னிலும், சாம் பில்லிங்ஸ் 41 ரன்னிலும் அவுட்டாகினர். ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஜேசன் ஹோல்டர் 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தினார். இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என டி20 தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், ஹொசைன் 4 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்நிலையில், டி20 போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய நான்காவது வீரர் ஜேசன் ஹோல்டர் ஆவார். இவருக்கு முன்னதாக, அயர்லாந்தின் காம்பெர், இலங்கையின் லசித் மலிங்கா மற்றும் ஆப்கா...