வரலாறு காணாத மழை ஃபைட்கிளப் படத்தை நிறுத்தி நிவாரணம் – திரையரங்குக்குப் பாராட்டு
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 95 செ.மீ மழை கொட்டியிருக்கிறது. தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 50 செ.மீக்கும் கூடுதலான மழை பெய்திருக்கிறது.
அதனால் தூத்துக்குடி – திருநெல்வேலி சாலை துண்டிக்கப்பட்டிருக்கிறது. பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித்தனி தீவாக மாறியிருக்கின்றன. இன்றும் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமை என்னவாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ள சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீபாலகிருஷ்ணா டாக்கீஸ் திரையரங்க நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
என்னை வாழ வைக்கும் தூத்துக்குடி மக்களே இன்று இந்த புயல் சின்னத்தினால் பல பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என...