ஞாயிற்றுக்கிழமை, மே 24
Shadow

HOME SLIDER

ஸ்டாலின் தலைமை இருக்கும் வரை தி.மு.க.வுக்கு வெற்றி இல்லை: மு.க அழகிரி

ஸ்டாலின் தலைமை இருக்கும் வரை தி.மு.க.வுக்கு வெற்றி இல்லை: மு.க அழகிரி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே நகரில் தி.மு.க தோற்றது, தி.மு.க.வின் செயல்பாடு, பணப்பட்டுவாடா, தினகரன் வெற்றி என பல்வேறு விஷயங்கள் குறித்து முன்னாள் மத்திய மந்திரி மு.க அழகிரி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். கருணாநிதி தலைமையில் அனைத்து தேர்தல்களிலும் ஜெயித்தோம். ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்றி பெறப்போவது இல்லை. அவரது தலைமையில் சந்தேகம் எழுகிறது. களப்பணி இல்லாமல் எந்த வெற்றியும் பெற முடியாது. வேனில் இருந்து ஓட்டு கேட்டால் போதாது. ஆர்.கே நகரில் டெபாசிட் போனதற்கு ஸ்டாலின் காரணம். எனக்கும் அவருக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சனைகள் வேறு, அரசியல் வேறு. போதிய மேற்பார்வை இல்லாமல் இருக்கும் நிலையில், தி.மு.க.வின் உண்மையான தொண்டர்களை பணத்திற்காக விலை போனதாக கூறுவதா?. ஸ்டாலினுடன் இருப்பவர்களின் செயல்பாடு சரியில்லை. வெற்றிப்பாதையில் செல்லவேண்டுமானால் தி.மு.க.வில் தலைமை மாறுதல் தேவை,...

ஆண்மையில்லாதவர்கள் என்றதற்கு பதிலடி குருமூர்த்தியை புறம்போக்கு என்கிறாரா அமைச்சர் ஜெயக்குமார்..?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆண்மையில்லாதவர்கள் என்றதற்கு பதிலடி குருமூர்த்தியை புறம்போக்கு என்கிறாரா அமைச்சர் ஜெயக்குமார்..? குருமூர்த்தி ட்வீட்டும் அதற்கு ஜெயக்குமார் பதிலடியும் தொடர்கதையாகி வருகிறது. இம்பொடன்ட் என்ற வார்த்தைக்கு குருமூர்த்தி விளக்கம் சொல்ல, அதற்கு பதிலடியாக புறம்போக்கு என்பதற்கு விளக்கம் சொல்லியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், புறம்போக்கு என்றால் ஆங்கில அகராதியில், Land exempt from assessment, either becauseit is set aside for communal purposes or because it is uncultivable என்று போட்டுள்ளது. தமிழில் சமுதாய நன்மை சாகுபடிக்குத் தகுதியின்மை முதலிய காரணங்களினால் குடிகள் வசம் விடப்படாததும் தீர்வை விதிக்கப்படாததுமாகிய நிலம் என்று போட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்ய முடியாத நிலங்களான, கடற்கரை, ஆறு, ஓடை, வாய்க்கால், போன்ற நீர்நிலைகள...
பாஜக தலைகீழாக நின்றாலும், குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜகவால் கால் வைக்கவே முடியாது – குஷ்பு சீண்டல்

பாஜக தலைகீழாக நின்றாலும், குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜகவால் கால் வைக்கவே முடியாது – குஷ்பு சீண்டல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
சமூக வலைதளமான டுவிட்டரில் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காங்., செய்தி தொடர்பாளர் குஷ்பு இடையே கடுமையான வார்த்தை போர் நடந்துள்ளது. இவர்களின் காரசார கருத்து பதிவிற்கு பதில் கருத்து பதிவிடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ரஜினி அரசியலுக்கு வருவது பற்றிய தமிழிசை கூறிய கருத்தை வைத்து, சண்டையை துவக்கினார் குஷ்பு. குஷ்பு : மக்கள் அரசியலில் சேர்வது அவர்களின் கொள்கைள் மற்றும் விருப்பத்திற்காக மட்டுமே. நீங்கள் தான் உங்கள் கட்சியில் சேரும்படி கெஞ்சிக் கொண்டு இருக்கிறீர்கள். தமிழிசை : குஷ்பு அரசியலில் இணைந்தீர்களா? கட்சிகளுக்கு தாவினீர்களா? திமுக.,வில் இருந்து விலகி காங்.,கில் இணைந்தது மிகச் சிறந்த கொள்கையாலா என அனைவருக்கும் தெரியும். குஷ்பு : திமுக.,விலிருந்து விலகுவதற்கு 6 மாதத்திற்கு முன்பிருந்து இருகட்சிகளுடனும் எனக்கு நல்லுறவு இருந்தது. உங்கள் மூளையை சரிசெய்து க...
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் துணிச்சலாக களம் கண்ட பாஜகவை குறைகூறுவதா? – தமிழிசை கண்டனம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் துணிச்சலாக களம் கண்ட பாஜகவை குறைகூறுவதா? – தமிழிசை கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே.நகரில் துணிச்சலாக களம் கண்ட பாஜகவை மட்டும் குறை கூறுவது எந்த வகையில் நியாயம் என மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக  அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: ஆர்.கே.நகரில் நாங்கள் வாங்கியிருக்கும் வாக்குகள் எங்கள் ஆட்சிக் கனவின் முற்றுப்புள்ளி என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியிருக்கிறார். அவர் தீவிரமாக ஆதரித்து வரும் திமுக கூட்டணியின் வாக்கு, 33 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக குறைந்திருக்கிறது. அப்படியெனில், திமுகவின் ஆட்சிக் கனவின் முற்றுப்புள்ளி என்று அதை எடுத்துக்கொள்ளலாமா?. ஆக, இந்த தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் பணத்தின் குறியீடாக இருக்கலாமே தவிர பலத்தின் குறியீடு அல்ல. அதேபோல, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது கூட்டணிக்கு வாக்குகளை பெற்றுத் தர முடியவில்லை என்பதை மறைத்து பாஜகவுக்கு...
ஒரு தொகுதியில் வென்றதன் மூலம் டிடிவி தினகரனை பெரிய அரசியல் தலைவராக தூக்கி வைத்துக் கொண்டாதீர்கள்- குஷ்பு காட்டம்

ஒரு தொகுதியில் வென்றதன் மூலம் டிடிவி தினகரனை பெரிய அரசியல் தலைவராக தூக்கி வைத்துக் கொண்டாதீர்கள்- குஷ்பு காட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
ஒரு தொகுதியில் வென்றதன் மூலம் டிடிவி தினகரனை பெரிய அரசியல் தலைவராக தூக்கி வைத்துக் கொண்டாதீர்கள் அவர் ஜெயலலிதாவுக்கு மாற்று அல்ல, 2019 தேர்தலில் எத்தனை தொகுதியை வெல்கிறார் பார்ப்போம் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு பேசியதாவது: “ஜெயலலிதாவை பல முறை பார்த்திருக்கிறேன். அவருக்கு எதிரான அரசியல் நடத்தி இருக்கிறேன். ஆனாலும் அவர் ஒரு எடுத்துக்காட்டான தலைவர். அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. அவர் அளவுக்கு தினகரன் வர முடியாது. அவர் சாதாரணமான நபர் தான். பணம் கொடுத்து வாக்குகளைப் பெற்ற வெற்றி அது. இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது என்று மக்கள் விரும்புகிறார்கள், ஓபிஎஸ், ஈபிஎஸ்தான் ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக துரோகம் செய்துள்ளார்கள் என்ற கோபம் மக்களுக்கு இருந்திருக்கும். ஜெயலலிதாவின் தொகுதி அது. ஜெயலலி...
 பொங்கலுக்கு வெளியாகும் விக்ரம்  நடிக்கும்  “ஸ்கெட்ச் “

 பொங்கலுக்கு வெளியாகும் விக்ரம்  நடிக்கும்  “ஸ்கெட்ச் “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
 பொங்கலுக்கு வெளியாகும் விக்ரம்  நடிக்கும்  “ ஸ்கெட்ச் “                 கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும்  படம் “ ஸ்கெட்ச் “ விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார்.  மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ்,மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் திருநாளில் உலகம்  முழுவதும் வெளியாகிறது....
காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெறும் `சாமி-2′

காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெறும் `சாமி-2′

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரம் சினிமா படப்படிப்பு தளமாக இருந்து வருகிறது. பொதுவாக சினிமா படப்பிடிப்பு சென்னை, மதுரை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதியிலும், வெளிநாடுகளிலும் நடைபெறுவது வழக்கம். ஆனால் காரைக்குடி பகுதியில் ஒரு படத்தின் படப்பிடிப்பு நடத்தினால் அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்து விடும் என்ற நம்பிக்கை சினிமாத்துறையினருக்கு இருந்து வருகிறது. மேலும் இயக்குனர் ஹரி இயக்கும் தனது படத்தின் ஒரு காட்சியாவது காரைக்குடி பகுதியில் நடத்துவதை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். இதன்படி சினிமா டைரக்டர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த சாமி திரைப்படம் கடந்த 2003-ம் ஆண்டு திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து அந்த படத்தின் 2-வது பாகம் தற்போது நடைபெற்று வருகிறது. சாமி-2 திரைப்படத்தில் நடிகர் விக்ரம், வில்லன் நடிகராக பாபிசிம்ஹா, ஓ.ஏ.கே. சுந்தர், பாலாசிங், தியாக...
டிடிவி தினகரன் 29–ந்தேதி ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கிறார்

டிடிவி தினகரன் 29–ந்தேதி ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கிறார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த வியாழக் கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், சுயேச்சையாக டி.டி.வி.தினகரன், பாரதீய ஜனதா சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் ஆகியோர் உள்பட 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பல்வேறு வேட்பாளர்கள் களத்தில் இருந்த போதிலும் மதுசூதனன், மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இடையேதான் கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் டிடிவி தினகரன் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை விட அவர் 40 ஆயிரத்து 707 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார். 48 ஆயிரத்து 306 ஓட்டுகள் பெற்ற மதுசூதனனுக்கு 2-வது இடம் கிடைத்தது. ...
முதலில் குடும்பம்தான் உங்களோடு நிறைய பேச வேண்டியுள்ளது காத்திருங்கள் -2ம் நாள் சந்திப்பில் ரஜினிகாந்த்

முதலில் குடும்பம்தான் உங்களோடு நிறைய பேச வேண்டியுள்ளது காத்திருங்கள் -2ம் நாள் சந்திப்பில் ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில்  காஞ்சீபுரம், திருவள்ளூர், கிருஷ்ண கிரி, தர்மபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை நேற்று சந்தித்தார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அடையாள அட்டையுடன் வந்த ரசிகர்கள் மட்டுமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், இன்று 2-வது நாளாக  ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட ரசிகர்களை சந்தித்து ரஜினிகாந்த், அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். முன்னதாக, பேசிய ரஜினிகாந்த், ”இரண்டாவது நாளாக உங்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் குடும்பம்தான் முக்கியம். தாய். தந்தையர் வாழும் தெய்வங்கள். குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், நமது சொத்து அவர்கள் தான். ரசிகர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலி...
ஜன.28ல் லிப்ரா குறும்பட விழாவில் கலந்துகொள்ளும் கனடா மற்றும் ரஷ்ய குறும்படங்கள்..!

ஜன.28ல் லிப்ரா குறும்பட விழாவில் கலந்துகொள்ளும் கனடா மற்றும் ரஷ்ய குறும்படங்கள்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
லிப்ரா குறும்பட விழாவில் கலந்துகொள்ளும் கனடா மற்றும் ரஷ்ய குறும்படங்கள்..! லிப்ரா குறும்பட விழாவில் பங்கேற்க சர்வதேச திரைப்பட ஜூரிக்கள் வருகை..! குறும்பட விழாக்களின் முன்னோடியாக திகழப்போகும் லிப்ரா புரொடக்சன் குறும்பட விழா..! ஜன-28ல் லிப்ரா புரொடக்சன்ஸ் பிரமாண்ட குறும்பட திருவிழா..! சில விஷயங்கள் சொன்ன நேரத்தில் நடக்காமல் தள்ளிப்போவது என்பது கூட நல்லதற்குத்தான் என்றே நினைக்க தோன்றுகிறது. ஆம்.. தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் தயாரிப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டு சொல்ல கூடியவற்றில் ஒன்றான லிப்ரா புரடக்சன்ஸ் குறும்பட இயக்குனர்களுக்கு வெள்ளித்திரை வாசலை திறந்துவிடும் ஒரு முயற்சியாக கடந்த நவ-29ல் குறும்பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த குறும்பட போட்டியில் கலந்துகொள்ள போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்புமாறு அறிவிப்பு வெளியிட்டிருந்தது லிப்ரா புரடக்சன...