செங்கோட்டையனை முதலமைச்சர் ஆக்கவே கவர்னரிடம் மனு கொடுத்தோம்: டி.டி.வி. தரப்பு வக்கீல் வாதம்
செங்கோட்டையனை முதலமைச்சர் ஆக்கவே கவர்னரிடம் மனு கொடுத்தோம்: டி.டி.வி. தரப்பு வக்கீல் வாதம்
டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்த வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு கொறடா ராஜேந்திரன் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தஹியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், டி.டி.வி.தினகரன் தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமனும் ஆஜராகி வாதாடினர்.
அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன்:- சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாது.
வக்கீல் பி.எஸ்.ராமன்:- சபாநாயகரின் நோட்டீசுக்கு பதில் அளிக்க ...









