வியாழக்கிழமை, மே 21
Shadow

HOME SLIDER

அதிகாரிகளை அருவருப்பான கேலிச்சித்திரம் வரைந்ததால் கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தோம் – நெல்லை காவல்துறை விளக்கம்

அதிகாரிகளை அருவருப்பான கேலிச்சித்திரம் வரைந்ததால் கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தோம் – நெல்லை காவல்துறை விளக்கம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கார்ட்டூனிஸ்ட் பாலா சென்னையில் கைது செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான அருண்சக்தி குமார் விளக்கம் அளித்து செய்திக்குறிப்பு வெளியிட்டு உள்ளார். நெல்லை மாவட்டம் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர், தான் வாங்கிய கடன் தொகையான 1.45 லட்சம் ரூபாய்க்கு 2.45 லட்சம் ரூபாய் பணம் செலுத்திய பின்னரும் கடன் தொகையைக் கேட்டு கந்துவட்டி கொடுத்தவர்கள் மிரட்டியதால் நெல்லை மாவட்ட ஆட்சியரான சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தார். பல முறை மனு அளித்தும் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.காவல்துறையினர் கந்து வட்டிக் கும்பலுக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்து செய்ததால் மனம் உடைந்த அவர் கடந்த மாதம் 23-ம் தேதி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்தார். அவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தீக்கொளுத்தி தற்கொலை செய்து க...
கட்சி ஆரம்பிக்க ரசிகர்கள் பணம் தருவார்கள் 7ம் தேதி அரசியல் கட்சிக்கான முன்னோட்ட ஒரு செயலி அறிமுகம் – பிறந்த நாள் விழாவில் கமல் பேச்சு

கட்சி ஆரம்பிக்க ரசிகர்கள் பணம் தருவார்கள் 7ம் தேதி அரசியல் கட்சிக்கான முன்னோட்ட ஒரு செயலி அறிமுகம் – பிறந்த நாள் விழாவில் கமல் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கட்சி துவங்கி அரசியலுக்கு வருவதில் உறுதியாக உள்ளேன் - நடிகர் கமல் சென்னை, கேளம்பாக்கத்தில் பிறந்த நாள் மற்றும் நற்பணி மன்றத்தில், 38 வது ஆண்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: மக்களுக்கு உதவும் வள்ளல் தேசத்தை உருவாக்கும் நாடு இது. இங்கிருக்கும் கூட்டம் மன்னர் முன் கையேந்தும் கூட்டம் இல்லை . கையேந்துபவன் நான்; தமிழ்நாட்டுக்காக ஏந்துகிறேன். தமிழக நலனுக்காக கையேந்துவதில் வெட்கம் இல்லை . பணக்காரர்கள் வரியை சரியாக செலுத்தினாலே நாடு ஓரளவு சரியாகும். ஏதோ ஆர்வத்திற்காக பதவிக்காக பிரச்னைகள் பற்றி நான் பேசவில்லை. சரித்திரத்தை திரும்பி பார்க்காமல் செய்த தவறை திரும்பி செய்கிறோம். இயற்கையின் சீற்றத்துக்கு ஏழை பணக்காரர்கள் பற்றி தெரியாது. பேரழிவு வரும் வரை பொறுத்திருக்க வேண்டுமா? உறவுகள் செத்த பிறகு தான் புத்தி வருமா? வரும் முன் காக்க அனைவரும் முன் வர வேண்டும் . அடக்குமு...
கொட்டும் மழையிலும் கன ஜோராக இறுதிகட்ட ஷூட்டிங்கில் விஷாலின் இரும்புத்திரை..!

கொட்டும் மழையிலும் கன ஜோராக இறுதிகட்ட ஷூட்டிங்கில் விஷாலின் இரும்புத்திரை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1960ல் வெளியான படம் இரும்புத்திரை. சுமார் 57 ஆண்டுகளுக்கு பின் அதே பெயரில் விஷால் நடிப்பில் வேகமாக வளர்ந்து வருகிறது இரும்புத்திரை. இதில் விஷால் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். வில்லனாக ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், காமெடிக்கு ரோபோ சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மித்ரன் இயக்கி வரும் இந்த படம் ஒரு அதிரடி கணிணி குற்றங்களை வெளிச்சம் போடும் கதை என கூறப்பட்டாலும் இதுவரை இல்லாத அளவுக்கு சமந்தா காமெடியாக நடித்திருக்கிறாராம். கொட்டும் மழையிலும் இரும்புத்திரை படத்தின் இறுதிகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இரும்புத்திரை 2018 பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆக உள்ளது. விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி சார்பில் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.    ...
உதவி தேவைப்படுவோருக்கு புதிய அப்ளிகேஷன் அறிமுகப் படுத்தும் விஷால்..!

உதவி தேவைப்படுவோருக்கு புதிய அப்ளிகேஷன் அறிமுகப் படுத்தும் விஷால்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
வியக்க வைத்த விஷாலின்  V SHALL App.   உலகில் எவ்வளவோ ஏழை எளிய மாணவ மாணவிகள், வயதானோர், குழந்தைகள் ஆகியோர் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளுக்கே உதவ யாரும் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.   இது போன்ற மக்களுக்கு உதவ பல நல்ல உள்ளங்களும் உள்ளனர். இது போன்று உதவி தேவைப்படுவர்களையும் உதவி செய்ய காத்து கொண்டிருப்பவர்களையும் இணைப்பதற்காகவே நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் V SHALL என்ற அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி உள்ளார்.   இதன் மூலமாக உண்மையாகவே உதவி தேவைப்படுபவர்களும் உதவ முன் வருபவர்களும் நேரிடையாக உதவலாம் என்பது குறிப்பிடத்தக்கது.   இந்த அப்ளிகேஷன் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.   சத்தமில்லாமல் எத்தனையோ உதவிகள் செய்து வரும் விஷாலின் அடுத்த அதிரடிதான் இது....
திமுக ஆட்சி அமைந்ததும் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியம் அமையும் ஷார்ஜா புத்தக கண்காட்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு..!

திமுக ஆட்சி அமைந்ததும் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியம் அமையும் ஷார்ஜா புத்தக கண்காட்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அமீரகத்தில் நடைபெற்றுவரும் 36வது சார்ஜா சர்வதேச புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றினேன். சார்ஜாவின் அரசர் மாட்சிமைமிகு சுல்தான் அவர்கள் வரலாற்று ஆய்வு மனப்பான்மையும், இலக்கிய ஆர்வம் உடையவராகவும் இருப்பதால் புத்தக ஆணைக்குழுவை உருவாக்கி, புத்தக திருவிழாவை நடத்துவது மட்டுமல்லாமல் சார்ஜா மண்ணின் மைந்தர்களின் வீட்டிற்கு அரசு செலவிலேயே ஓர் நூலகத்தை வழங்கியிருக்கிறார் என்ற செய்தி கேட்டு ஆச்சர்யப்பட்டேன். எந்த மொழியாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும் தன் மொழி மற்றும் இனத்தின் உரிமைகளைப் பாதுகாக்க, பிறரது ஆதிக்கத்திற்கு ஆட்படாமல் சுயமரியாதையுடன் உயர்ந்து நிற்க முயற்சிப்போர் அனைவருமே திராவிட இயக்கத்துக்கு நெருக்கமானவர்கள் தான். அந்த வகையில் தன் மண்ணின் பெருமையை அறிவு தீபம் ஏற்றி வெளிச்சமிட்டுக் காட்டும் சுல்தான் அவர்கள் போற்றுதலுக்குரியவர் என்றேன். பேரறிஞர் அண்...
ஹாலிவுட் படங்களுக்கு நிகராக மிரட்டும் அவள் கொட்டும் மழையிலும் ஹவுஸ்புல்..!

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக மிரட்டும் அவள் கொட்டும் மழையிலும் ஹவுஸ்புல்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஹாலிவுட் திகில் படங்களுக்கு தமிழ் திகில் படங்கள் இணையில்லை என்ற காலம் 'அவள்' படம் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. கதையம்சத்திலும், சிறந்த தொழிலநுட்ப திறனாலும் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டி போட்டு பேய் ஓட்டம் ஓடிக் கொண்டு இருக்கிறது. சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி நடிப்பில், அறிமுக இயக்குனர் மிலிண்ட் ராவ் இயக்கத்தில் உருவாகி ரிலீஸாகியுள்ள 'அவள்',கூட்டம் கூட்டமாக மக்களை திரையரங்கிற்கு அழைத்து வந்துள்ளது. இப்படத்தை சித்தார்த்தின் 'Etaki Entertainment' நிறுவனம், 'Viacom18 Motion Pictures' நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளது. 'அவள்' படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்துள்ள 'Trident Arts' ரவீந்திரன் அவர்கள் இப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்ப்பால் உற்சாகத்தில் உச்சியில் உள்ளார். 'அவள்' குறித்து ரவீந்திரன் பேசுகையில், ''படத்தை பார்த்துவரும் மக்களிடையும் விமர்சகர்களிடையும் இப்படத்திற்கு...
இந்து தீவிரவாதம் பற்றிய என் பேச்சால் என்னை சுட்டுக்கொல்லப் பார்க்கிறார்கள் – விவசாயிகள் கூட்டத்தில் கமல் பேச்சால் அதிர்ச்சி

இந்து தீவிரவாதம் பற்றிய என் பேச்சால் என்னை சுட்டுக்கொல்லப் பார்க்கிறார்கள் – விவசாயிகள் கூட்டத்தில் கமல் பேச்சால் அதிர்ச்சி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
என்னை தீவிரவாதி என முத்திரைகுத்தி சுட்டுக் கொல்லப் பார்க்கிறார்கள் என விவசாயிகள் மாநாட்டில் கமல்ஹாசன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் இந்து தீவிரவாதம் பரவி வருகிறது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். இதற்கு நடிகர் பிரகாஷ்ராஜ், தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அகில பாரத இந்துமகாசபா நிகழ்ச்சி மீரட்டல் நடைபெற்றது. அதில் பேசிய இந்து மகாசபா தலைவர்,   இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசியதற்கு, ‘அவரை சுட்டுக்கொல்ல வேண்டும்‘ என்றும் பேசினார்.. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த கமல்,  இந்துத் தீவிரவாதம் இல்லை என்று இனி யாரும் சொல்ல முடியாது என கூறியிருந்தார். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. நடிகர் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு தமிழக்ததை சேர்ந்த ப...
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஊழல் முழு  விசாரணை தேவை  வைகோ  வலியுறுத்தல்

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஊழல் முழு விசாரணை தேவை வைகோ வலியுறுத்தல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு ‘நீட்’ திணிக்கப்பட்டதால், தமிழ்நாட்டு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மத்திய பா.ஜ.க. அரசு மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறித்து, ஆதிக்கம் செலுத்த முனைந்து, ‘நீட்’டுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த எதிர்ப்புக்களை அலட்சியப்படுத்தியது. இந்நிலையில்தான், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக ‘நீட்’ தேர்வு அடிப்படையில் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தகுதி வரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தப்பட்டது. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்ற போதே, வெளி மாநில மாணவர்கள் போலி இருப்பிடச் சான்று அளித்து மருத்துவப் படிப்பில் சேர முயற்சி செய்தனர். அப்போது தமிழக அரசின் சுகாதாரத்துறைச் செயலாளர், “போலி இருப்பிடச் சான்றிதழ் அளிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவித்தார். மேலும் ...
அஜீத் ரசிகர்களை வளைக்க திட்டமிடும்  பில்லா பாண்டி…!

அஜீத் ரசிகர்களை வளைக்க திட்டமிடும் பில்லா பாண்டி…!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  JK Film Productions சார்பாக K.C.பிரபாத்   தயாரிப்பில்  Studio.9 R.K.சுரேஷ் நடிக்கும்  "பில்லா பாண்டி" படத்திற்கு படம் தனது மாறுபட்டகதாபாத்திரங்களால் மக்கள் மனதில்நிலைத்து நின்றவர் நடிகர் R.K.சுரேஷ். தற்போது தீவர தல அஜீத்தின் ரசிகனாக"பில்லா பாண்டி" எனும் படத்தில்கதாநாயகனாக நடித்துவருகிறார். மேயாதமான் புகழ் இந்துஜா இப்படத்தின்கதாநாயகியாக நடிக்கின்றார். சரவணஷக்தி இயக்கும் இப்படத்தை  JK Film Productions சார்பாக  K.C.பிரபாத் தயாரிக்கிறார். மேலும் K.C.பிரபாத் இப்படத்தின் வில்லனாகதமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். இப்படத்தில் சாந்தினி, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலிமுருகன், மாஸ்டர் K.C.P. தர்மேஷ், மாஸ்டர் K.C.P. மிதுன்சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விருவிருப்பாக இறுதி கட்ட பணிகளில்நெருங்கியுள்ள இப்படத்தின் இசையின்வெளியிடு மிக விரைவில்நடைபெறவுள்ளதாகவும் பட...