சனிக்கிழமை, மே 23
Shadow

HOME SLIDER

ஆண்டு கடைசி நாளில் வெளியாகும் விக்ரமின் ஸ்கெட்ச் பட டைட்டில் பாடல்..!

ஆண்டு கடைசி நாளில் வெளியாகும் விக்ரமின் ஸ்கெட்ச் பட டைட்டில் பாடல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஸ்கெட்ச் படத்தின் டைட்டில் பாடல் வெளியீடு தொடர்பான அறிவிப்பை இசையமைப்பாளர் தமன் வெளியிட்டுள்ளார். விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடிக்கும் ஸ்கெட்ச் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆர்.கே.சுரேஷ், ஸ்ரீ பிரியங்கா, சூரி, ஸ்ரீமன், ராதாரவி, ரவி கிஷன், பாபுராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமன் இசையமைக்க, ஆண்டனி.எல்.ரூபன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். இந்தப் படத்தை ‘மூவிங் ஃப்ரேம்’ என்ற புதிய நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி.எஸ்.தாணு ‘வி கிரியேஷன்ஸ்’மூலம் தயாரித்து வருகிறார். சமீபத்தில், படக்குழுவால் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மற்றும் கனவே கனவே, அட்சி புட்சி, சீனி சில்லாளே ஆகிய மூன்று பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. புத்தாண்டு கொண்டாட்டமாக டிசம்பர் 31ஆம் தேதி படத்தின் டைட்டில் பாடல் வ...
கழிவறையின் முக்கியத்துவம் குறித்து  த்ரிஷா விழிப்புணர்வு

கழிவறையின் முக்கியத்துவம் குறித்து த்ரிஷா விழிப்புணர்வு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
சினிமாவைத் தாண்டி சமூகச் சேவையில் அக்கறை செலுத்திவரும் த்ரிஷா, கழிவறையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறார். திரையுலகில் பல படங்களில் பிஸியாக த்ரிஷா நடித்துவந்தாலும் சமூகச் சேவைகளிலும் நாட்டம் காட்டி வருகிறார். விலங்குகள் நலன், குழந்தைகள் கல்வி போன்றவற்றுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் த்ரிஷாவுக்கு, அங்கீகாரம் தரும் வகையில் ‘யுனிசெஃபின் செலிப்ரிடி அட்வகேட்’ என்ற பதவி சமீபத்தில் அவருக்கு வழங்கப்பட்டது. இந்தப் பதவியில் இருந்தபடி அவர் குழந்தைகள் கல்வி, குழந்தைத் திருமண முறை, குழந்தைத் தொழிலாளர் முறை, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் போன்றவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார். குழந்தைகள், பெண்களுக்கான விழிப்புணர்வு மட்டுமல்லாது சமூக விழிப்புணர்விலும் ஈடுபட்டுவரும் த்ரிஷா, காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலி கிராமத்துக்கு வருகை புரிந்தார். அங்குக...
புதுமுகங்கள் நடிக்கும்“ செயல் “

புதுமுகங்கள் நடிக்கும்“ செயல் “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ்  தயாரிக்கும் முதல் படம்  “ செயல் “ ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.  கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..  இந்த படத்திற்காக கேரளாவில் பாபா பாஸ்கர் நடன அமைப்பில் “ நீயா உயிரே உயிர் தேடும் உயிர் நீயா “ என்ற பாடல் காட்சியில் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி இருவரும் பங்குபெற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சாலக்குடி, வாகமன் போன்ற அடர்ந்த காடுகளில் மிகவும் சிரமப்பட்டு இந்த பாடல் காட்சியை படமாக்கினோம். சென்னையில் “ டே மாமா வ...
2017 வைரலான செல்ஃபி படங்கள்

2017 வைரலான செல்ஃபி படங்கள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிக்கிறார்கள். ஏன், இருவருக்கும் ரகசியமாக கேரளாவில் திருமணம் நடந்துவிட்டதாகக் கூட கூறப்படுகிறது. இந்நிலையில் விக்னேஷ் நயன்தாராவுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொண்டாடினார் நயன்தாரா. அப்போது அவர்கள் சேர்ந்து எடுத்த செல்ஃபி வெளியாகி வைரலானது.   ஸ்ருதி ஹாஸன் தனது காதலர் மைக்கேல் கோர்சேலுடன் சேர்ந்து நடிகர் ஆதவ் கண்ணதாசனின் திருமணத்திற்கு வந்தார். அவர்கள் ஜோடியாக வந்தபோது எடுத்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. நடிகை சமந்தா, தனது காதலரான நாகசைதன்யாவை இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகின   ...
ஆட்சி கலையும் என டிடிவி தினகரன் கனவு – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

ஆட்சி கலையும் என டிடிவி தினகரன் கனவு – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆட்சி கவிழும் என டிடிவி தினகரன் கனவு காண்கிறார் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் ஆர்கே நகர் தொகுதி சட்டசபை உறுப்பினராக இன்று பதவியேற்றார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அ.தி.மு.க.வில் ரத்தமும் சதையுமாக உள்ள தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர் என்று அவர் கூறினார். சசிகலா தலைமையிலான அ.தி.மு.க.வே உண்மையான இயக்கம் என ஆர்.கே நகர் மக்கள் தீர்ப்பு வழங்கி விட்டனர் என்றும் தினகரன் தெரிவித்தார். துரோக வரலாற்றில் துரோகத்திற்கு இடமில்லை என்றும் கூறினார். மனதளவில் பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எங்கள் பக்கமே உள்ளனர் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். சிலர் வழிவிட்டால் கட்சியை தக்கவைக்கலாம் என்றும் அவர் கூறினார். கடந்த சில நாட்களாகவே டிடிவி தினகரன் இந்த ஆட்சி விரைவில் கவிழும் வீட்டுக்கு அனுப்பப்படும் என கூறி வருக...
அறிவாலயத்தில் 2018-ஜனவரி 7- ம் தேதி தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…!

அறிவாலயத்தில் 2018-ஜனவரி 7- ம் தேதி தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜனவரி 7ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அதிமுக அரசு பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் 2018-ஜனவரி 7- ம் தேதி தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்...
திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த ரஜினிகாந்த்

திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினி, தன் ரசிகர்களை 4 வது நாளாகச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துவருகிறார். இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை ரஜினி சந்தித்து வருகிறார். காலை சுமார் 8.30 மணிக்கு ராகவேந்திரா மண்டபம் வந்த ரஜினி, ரசிகர்கள் மத்தியில் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:- என் நண்பர்கள் அதிகம் வாழும் நகரம் கோவை என்று பேச்சைத் தொடங்கிய ரஜினி, அங்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். எனது குரு சச்சிதானந்தர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர். எனக்கு மந்திர உபதேசம் செய்தவர் சச்சிதானந்த சுவாமிகள். சுவாமி தயானந்த சரஸ்வதி எனது குரு. சச்சிதானந்த சுவாமிகள் சொல்லியே பாபா படம் எடுத்தேன். அதேபோல் தயானந்த சரஸ்வதி எனக்கு குரு. கோயம்புத்தூர் விமான நிலையம் போகும் போதெல்லாம் எனக்கு ஒரு ஞாபகம் வரும். ஆன்மிகத்திற்கும் ஓரளவுக்கு பப்ளிசிட்டி தேவை. கோவை வ...
மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் தனுஷ்..!

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் தனுஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என நடிகர் தனுஷ் பிசியாக நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படத்தில் நடிக்க இருக்கிறார். மாரி-2 படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி இரண்டாவது பாதியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பிலும் தனுஷ் ஒப்பந்தமாகி இருந்தார். அந்த படத்தை தனுஷே இயக்குவதாக சமீபத்தில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் தனுஷே வெளியிட்டிருக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் அவரது அடுத்த படத்தை இயக்குகிறார். அதில் நாயகனாகவும் நடிக்கிறார். தனுஷின் 37-வது படமாக உருவாகும் இந்த படம் குறித்த மற்ற...
ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது: முதல்வர் பழனிசாமி

ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது: முதல்வர் பழனிசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தினகரன், எம்.எல்.ஏ.வாக இன்று பதவியேற்றுக்கொண்டார். சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “குறிப்பிட்ட சிலர் மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சியை தக்க வைக்கலாம்” என்று கூறினார். “கட்சிக்கு களங்கம் விளைவித்தவர்களே, மற்றவர்களை களங்கம் விளைவித்ததாக நடவடிக்கை எடுக்கின்றனர். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் எங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும். இவர்களின் ஆட்சி இன்னும் 3 மாதத்திற்கு மட்டுமே தொடரும்” என்றும் கூறினார். இந்நிலையில், கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- அ.தி.மு.க ஆட்சி மீது திட்டமிட்டு வீண்பழியை சுமத்தி அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சி செய்கின்றனர். ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அ.தி.மு.க என...