டி.ஆர்.முதலில் மேடை நாகரீகத்தை கற்றுக் கொள்ள வேண்டும் – விஷால் கண்டனம்
மீராகதிரவன் இயக்கிய விழித்திரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை பேசும் போது சொல்ல மறந்து விட்டார் என நடிகை தன்ஷிகாவை அதே மேடையில் டி.ராஜேந்தர் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்தார்.
நடிகை தன்ஷிகா மன்னிப்பு கேட்டும் இயக்குனர் டி.ராஜேந்தர் தொடர்ந்து தன்ஷிகாவை விமர்சித்ததால் அவர் அழுது கொண்டே மேடையில் இருந்து இறங்கி போனார்.
இந்த சம்பவம் கடும் எதிர்ப்பை டி.ராஜேந்தருக்கு ஏற்படுத்தி உள்ளது. மேடை நாகரீகம் பற்றி பேசும் டி.ஆர். நாகரீகமே இல்லாமல் நடந்து கொண்டார் என்றும் டி.ஆர்.வருத்தம தெரிவிக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க செயலாளர் விஷால் வெளியிட்ட அறிக்கை:
ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்ம...









