வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

HOME SLIDER

நடிகை நயன்தாரா புகைப்படத்தை அனுப்பி காதல் வலை வீசி கொள்ளை கும்பலை பிடித்த பெண் போலீஸ் அதிகாரி

நடிகை நயன்தாரா புகைப்படத்தை அனுப்பி காதல் வலை வீசி கொள்ளை கும்பலை பிடித்த பெண் போலீஸ் அதிகாரி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
பீகாரில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி நடிகை நயன்தாரா புகைபடத்தை பயன்படுத்தி கொள்ளை கும்பலை காதல் வலையில் வீழ்த்தி பிடித்து உள்ளார். பாரதீய ஜனதா அமைச்சர் ஒருவரின் மொபைல் போனை  திருடி ஒரு பயங்கரமான கும்பல் பயன்படுத்தி வந்தனர். ஒரு பெண் போலீஸ் அதிகாரி அந்த கும்பலில் உள்ள ஒருவரை காதலிப்பதாக பொய் கூறி அந்த கும்பலையே பிடித்து உள்ளார். அந்த பெண் போலீஸ் அதிகாரி நடிகை நயன்தாரா படத்தை அந்த கும்பலிடம் காட்டி தான் நம்ப வைத்து உள்ளார். பீகாரின் தலைநகர் பாட்னாவில் இருந்து 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.  தர்பங்கா மாவட்டம் போலீசில் உள்ள பெண் அதிகாரிதான் இந்த சாகசத்தில் ஈடுபட்டார். பாரதீய ஜனதா தலைவர் சஞ்சய் குமார் மகோதன் என்பவரின் விலையுயர்ந்த மொபைல் ஒன்று திருட்டு போனது  இதனை முகம்மது ஹஸ்னைன் என்ற திருடன் திருடி உள்ளான். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து பொறுப்பு பெண் போலீஸ...
”நீதி நிச்சயம் வெல்லும்” குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு லாலு பிரசாத் யாதவ் டுவிட்

”நீதி நிச்சயம் வெல்லும்” குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு லாலு பிரசாத் யாதவ் டுவிட்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கால்நடைத் தீவன  ஊழல் தொடர்பான 2-வது வழக்கில், பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் குற்றவாளி என  ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் இன்று  தீர்ப்பளித்துள்ளது.  அவருக்கான தண்டனை விவரம் ஜனவரி 3ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், பீகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து, லாலு பிரசாத் யாதவை காவல்துறை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தது. லாலு பிரசாத் யாதவ், பிர்சா           முண்டா    சிறைச்சாலையில் அடைக்கப்பட உள்ளார். தனக்கு எதிராக தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், லாலு பிரசாத் யாதவ் தனது டுவிட்டரில், நீதி நிச்சயம் வெல்லும் என்று தெரிவித்துள்ளார். லாலு பிரசாத் யாதவ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:- “ உண்மையைச் சுற்றி தற்போது பொய் சூழ்ந்துள்ளது. மிக ...
சென்னை புறநகர் பகுதிகளில் ஏ.சி ரெயில்களை இயக்க திட்டம்..!

சென்னை புறநகர் பகுதிகளில் ஏ.சி ரெயில்களை இயக்க திட்டம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னை உள்பட 4 நகரங்களில் தானியங்கி கதவுகளுடன் கூடிய ஏ.சி. பெட்டிகள் கொண்ட புறநகர் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மும்பை மேற்கு புறநகர் ரெயில் சேவையின் ஒரு பகுதியாக 12 குளிர்சாதன வசதி பெட்டிகள் கொண்ட ரெயிலை இன்னும் ஒரு சில தினங்களில் இயக்க முடிவாகியுள்ளது. இதுபற்றி ரெயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, உண்மையில், 2019-2020ம் ஆண்டில் இருந்து அனைத்து புதிய உள்ளூர் ரெயில்களும் குளிர்சாதன வசதியுடன் தானியங்கி கதவுகளை கொண்டு இருக்கும்.  இறுதியாக சென்னை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் செகந்திராபாத் ஆகிய நகரங்களிலும் இதனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என கூறியுள்ளார். இந்த புதிய ஏ.சி. ரெயில்களுடன் பழைய ரெயில்களும் அடுத்தடுத்து இயக்கப்படும்.  ஆனால் கட்டணம் வேறுபடும். மும்பையில் சர்ச்கேட் மற்றும் போரிவிலி பகுதிகளுக்கு இடையே டிசம்பர் 25ந்தேதி அல்லது 2018 ஜனவரி 1ந...
டெல்லியில் பிரதமர் மோடி விழாவுக்கு முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை..!

டெல்லியில் பிரதமர் மோடி விழாவுக்கு முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டெல்லி மெஜந்தா லைன் பிரிவில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி, வரும் 25 ஆம் தேதி துவக்கி வைக்கிறார். இந்த விழாவுக்கு கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை. தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் மெட்ரோ ரயில் பாதையை  விரிவாக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அந்த வகையில், ஜானக்புரியில் இருந்து நொய்டா வரை  12.5 கி.மீட்டர் தூரம் வரை மெஜந்தா பிரிவில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்களை இயக்கும் திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன.  மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகள் முடிந்த நிலையில், வரும் டிசம்பர் 25 ஆம் தேதியன்று பிரதமர் மோடி, இந்த பாதையில் ரயில் பாதையை துவக்கி வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  கிறிஸ்துமஸ் தினத்தன்று நடைபெறும் துவக்க ...
அப்துல் கலாமை அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

அப்துல் கலாமை அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) தமிழகம் வந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமேசுவரம் அருகே உள்ள மண்டபம் பகுதிக்கு சென்றார். அங்கிருந்து கார் மூலம் ராமேசுவரம் செல்லும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  ராமநாத சாமி கோவிலில் தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து  பேய்க்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்துக்கு சென்று அவர் மரியாதை செலுத்தினார். பின்னர், மதுரைக்கு காரில் சென்ற அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு விமான நிலையத்தில் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை...
குழந்தைபேய்கள் மிரட்டும் சங்குசக்கரம்..!

குழந்தைபேய்கள் மிரட்டும் சங்குசக்கரம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற  படங்களை தயாரித்த லியோவிஷன் வி.எஸ்.ராஜ்குமார் மற்றும் சினிமா வாலா பிச்சர்ஸ் கே.சதீஷ் ஆகியோர் இணைந்து இந்த சங்கு சக்கரம் படத்தை தயாரித்துள்ளார்கள்.    குழந்தைகளை மையப்படுத்தி வெளியான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’, ராஜா சின்ன ரோஜா’, ‘அஞ்சலி’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. அதிலும் பேய்ப்படங்கள் பார்ப்பது என்றாலே குழந்தைகளுக்கு ஜாலி தான். ஆனால் இதுநாள்வரை குழந்தைகளை மிரட்டிய பேய்ப்படங்கள் தான் வந்திருக்கின்றன. இந்தமுறை குழந்தைகளே பேயை மிரட்டும்  புதுமையான விதமாக வரும் டிச-29ஆம் தேதி வெளியாக உள்ள படம் தான் மாரிசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சங்கு சக்கரம்‘. இந்த சங்கு சக்கரம்’ படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது முப்பது வருடங்களுக்கு முன்பு வெளியான ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ படத்தைப்போலவே இந்தப்படம் இரு...
அஜீத்தின் விஸ்வாசம் படத்துக்கு சிக்கல் வரும் எச்சரிக்கை செய்கிறார்  ஞானவேல் ராஜா..!

அஜீத்தின் விஸ்வாசம் படத்துக்கு சிக்கல் வரும் எச்சரிக்கை செய்கிறார் ஞானவேல் ராஜா..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  விரைவில் மதுரை விநியோகஸ்தர் சங்கத் தேர்தலிலும் நம்ம அணி போட்டியிடும். ஞானவேல் ராஜா அறிவிப்பு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிந்தாமணி முருகேசனின் ஆசியுடன் , அனைத்து உறுப்பினர்களின் வாழ்வதாரத்திற்காகவும், மூத்த உறுப்பினர்களின் நலன்களுக்காக பாடுபடவிருப்பதாகவும் 2017=2019 ஆண்டிற்காக நடைபெறும் தேர்தலில் தலைவர் பதவிக்கு நம்ம அணியின் சார்பாக போட்டியிடுகிறேன் என்று விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஞானவேல்ராஜா தெரிவித்திருக்கிறார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்காக 2017 =19 ஆண்டிற்காக நடைபெறும் தேர்தலில் நம்ம அணி சார்பாக போட்டியிடுபவர்களின் பத்திரியகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஞானவேல்ராஜா, துணைத்தலைவர் பதவிக...
உலக சமாதானத்திற்காக கிறிஸ்மஸ் தாத்தாக்கள் பங்கு பெற்ற கலக்கல் நிகழ்ச்சி

உலக சமாதானத்திற்காக கிறிஸ்மஸ் தாத்தாக்கள் பங்கு பெற்ற கலக்கல் நிகழ்ச்சி

HOME SLIDER, NEWS, செய்திகள்
சிங்காரசென்னை வாலிபர் ஐக்கியம் சார்பில் உலக சமாதானத்திற்காக 100 கிறிஸ்மஸ் தாத்தாக்கள் பங்கு பெற்ற கலக்கல் நிகழ்ச்சி சிங்காரச் சென்னை வாலிபர் ஐக்கியத்தின் சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்மஸ் புத்தாண்டு நேரங்களில் பொதுமக்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் சொல்வதோடு உலக சமாதானத்திற்காக பல்வேறு சமூக நிகழ்வுகளை செய்வது வழக்கம். இதில் குறிப்பிடும் படியாக கிறிஸ்மஸ் நாட்களில் அனைவராலும் வரவேற்கப்படும் சாண்டாகிளாஸ் என்ற கிறிஸ்மஸ் தாத்தர்க்கள் பேரணி நடத்துவது விசேஷமான ஒன்று. இந்தாண்டும் வழக்கம்போல 100 சாண்டாகிளாஸ் கலந்து கொண்ட கலக்கலான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. புதுவாழ்வு ஜெம்ஸ் சபையின் பிஷப் தயானந்தன் இந்த கிறிஸ்மஸ் தாத்தாக்கள் பேரணியை குரோம்பேட்டையில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். குரோம்பேட்டையில் இருந்து புறப்பட்ட சாண்டாகிளாஸ் தாத்தாக்கள் சிங்கார சென்னை வாலிபர் ஐக்கியத்தின் தலைவர் ஐசக்டேனி...
உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம் யாருமே திருடவில்லை பணம் எங்கே என்பதற்கான விடைதான் ‘வேலைக்காரன்’.சிவகார்த்திகேயன்.

உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம் யாருமே திருடவில்லை பணம் எங்கே என்பதற்கான விடைதான் ‘வேலைக்காரன்’.சிவகார்த்திகேயன்.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம் யாருமே திருடவில்லை பணம் எங்கே என்பதற்கான விடைதான் ‘வேலைக்காரன்’.சிவகார்த்திகேயன். அறிவு என்ற கதாபாத்திரத்தின் உணர்வுபூர்வமான, உணர்ச்சிகரமான பயணம்தான் படம். ஒட்டுமொத்த வேலைக்காரர்களுக்கான படமாக இருக்கும். நாம் உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம். அந்தப் பணம் எங்கே போகிறது, யாருமே திருடவில்லை. அப்படியானால் என் பணம் எங்கே என்பதற்கான விடைதான் ‘வேலைக்காரன்’ என்கிறார் சிவகார்த்திகேயன். வேலைக்காரன் அனுபவம் குறித்து சிவகார்த்திகேயன் என்ன சொல்கிறார்... இப்படத்தின் மூலமாக நிறையக் கற்றுக்கொள்ள முடிந்தது. ஃபகத் பாசில் எப்படி ஒரு காட்சியைப் புரிந்துகொள்கிறார், எப்படி நடிக்கிறார் என்று உன்னிப்பாகக் கற்றுக்கொண்டேன். இம்மாதிரியான படங்களை திரையுலகின் அனுபவப் பாடமாகப் பார்க்கிறேன். ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்பும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். அப்படியொரு முக்கியக் கதாபாத்த...
பரபரப்பான 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுதலை… வழக்கு கடந்து வந்த பாதை

பரபரப்பான 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுதலை… வழக்கு கடந்து வந்த பாதை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மத்தியில் முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா தொலைத்தொடர்பு துறை மந்திரியாக இருந்தார். அப்போது, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராயின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தின. இதில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியதாக கூறப்படும் புகார் தொடர்பான வழக்கும் அடங்கும். இந்த வழக்கில் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பலர் மீதும் மற்றும் சில நிறுவனங்களின் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் டெல்லியில...