புதன்கிழமை, மே 27
Shadow

HOME SLIDER

கிறிஸ்துமஸ் விருந்தாக வரப்போகும் விமலின் மன்னர் வகையறா டீசர்..!

கிறிஸ்துமஸ் விருந்தாக வரப்போகும் விமலின் மன்னர் வகையறா டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விமல் நடிப்பில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு வெளியாகவிருக்கும் படம் ‘மன்னர் வகையறா’. பூபதி பாண்டியன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை விமல் தனது சொந்த நிறுவனமான ஏ3வி சினிமாஸ் மூலம் தயாரித்திருக்கிறார். விமல் ஜோடியாக கயல் ஆனந்தியும், முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக், சாந்தினி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்திருக்கின்றனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதபாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் 2018 ஜ...
பதில் சொல்லி புரட்சி செய்ய வேண்டிய காலம் இனி வரும் – `வேலைக்காரன்’ இயக்குநர் ராஜா

பதில் சொல்லி புரட்சி செய்ய வேண்டிய காலம் இனி வரும் – `வேலைக்காரன்’ இயக்குநர் ராஜா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் 'வேலைக்காரன்'. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் 22-ஆம் தேதி (நாளை) வெளியாகிறது. இந்நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்து படத்தை பற்றிய தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார் இயக்குனர் மோகன் ராஜா பேசும் போது, சிவகார்த்திகேயன் இல்லைனா இந்த படமே நடந்திருக்காது. தனி ஒருவன் கொடுத்த அழுத்தத்தை நாம் செய்யப்போற படத்துலயும் கொடுக்கணும்னு கேட்டார். படத்துக்கு என்ன தேவையோ அதை தயங்காமல் பண்ணுங்கனு பெரிய தெம்பை கொடுத்தார் ஆர்டி ராஜா. படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. வீம்புக்கு நடிகர்களை நடிக்க வைக்காமல் எல்லோருக்கும் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறேன். ராம்ஜி உழைப்பு அபரிமிதமானது. அவருடன் 3-வது படமும் இணைந்து பண...
ஆ.ராசா, கனிமொழி விடுதலையை ஸ்வீட் கொடுத்து கோலாகலமாக வீட்டில் கொண்டாடிய மு.க. ஸ்டாலின்

ஆ.ராசா, கனிமொழி விடுதலையை ஸ்வீட் கொடுத்து கோலாகலமாக வீட்டில் கொண்டாடிய மு.க. ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இனிப்பு வழங்கி கொண்டாடினார். நாடே பெரிதும் எதிர்பார்த்த 2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி வழங்கினார். இந்த தீர்ப்பை வரவேற்று அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின் இனிப்புகளை வழங்கி கொண்டாடினார். அப்போது அவர் கூறுகையில், திமுகவை அவமானப்படுத்தி அழிக்க போடப்பட்ட வழக்குதான் ஸ்பெக்ட்ரம். திமுக மீதான களங்கம் துடைக்கப்பட்டுவிட்டது. அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியை அவமானப்படுத்தி போடப்பட்டதுதான் இந்த வழக்கு. குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பு மகிழ்ச்சிக்குரிய ஒன்று. திமுக எந்த தவறும் செய்யவில்லை என்று சிறப்பு நீதிமன்றம் நிரூபித்து விட்டனர். 2ஜ...
2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை: சி.பி.ஐ. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு

2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை: சி.பி.ஐ. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது (2004-2009 மற்றும் 2009-2014)  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெருமளவில் ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. இதையடுத்து, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் மீதும், 3 தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அமலாக்கப்பிரிவும் தனியாக விசாரணை நடத்தியது. டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் இறுதிக்கட்ட வாதங்கள் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தன. அதன்பின்னர் குற்றம்சாட்டப்பட்டவர்கள், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு தரப்பு ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யு...
நாடே எதிர்பார்க்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் நாளை தீர்ப்பு

நாடே எதிர்பார்க்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் நாளை தீர்ப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, Photos, politics, செய்திகள்
நாடே எதிர்பார்க்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் நாளை தீர்ப்பு நாடே மிகவும் எதிர்பார்க்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி நாளை தீர்ப்பளிக்க உள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக திமுகவின் ஆ. ராசா பதவி வகித்த காலத்தில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது என்பது சிபிஐ தொடர்ந்த வழக்குகள். இந்த வழக்கில் ஆ.ராசா, திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்குகளின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இவ்வழக்கை நீதிபதி ஓ.பி. ஷைனி விசாரித்து வந்தார். இவ்வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நாளை தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி ஓ.ப...
லொள்ளுசபா ஜீவா நாயகனாக நடிக்கும் “கொம்பு”..!

லொள்ளுசபா ஜீவா நாயகனாக நடிக்கும் “கொம்பு”..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
லொள்ளுசபா ஜீவா நாயகனாக நடிக்கும் “கொம்பு” ஸ்ரீ சாய் சீனிவாசா பிக்சா்ஸ் சார்பில் எம். பன்னீா் செல்வம் பி.வானதி இருவரும் கூட்டாக தயாரிக்கும் படத்தின் பெயா் தான் “கொம்பு”. லொள்ளுசபா புகழ் ஜீவா நாயகனாக நடிக்கும் இதில் திஷாபாண்டே, பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, சாமிநாதன், ஈஸ்வா் சந்திரபாபு, காயத்ரி, புவிஷா, சங்கா், அஸ்மிதா, யோகிராம், இன்னும் பலா் நடிக்கின்றனா். தேவ்குரு இசையையும், சுதீப் ஒளிப்பதிவையும், கதிரேசன் படத்தொகுப்பையும், கஜினிகுபேந்தா் சண்டைபயிற்சியையும், ராதிகா நடனபயிற்சியையும், இ.கார்த்திகேயன் தயாரிப்புநிர்வாகத்தையும் புதியவரான இ. இப்ராகிம் கதை, திரைக்கதை, வசனத்தையும் கவனிக்கின்றனா். இரு இளம்பெண்களின் மா்ம மரணத்தை ஆராய்ச்சி செய்ய நாயகன் தலைமையில் ஐவா் குழு அந்த வீட்டிற்கு வருகிறது. அதன் பிறகு நடைபெறும் சம்பவங்களை கதைக் களமாக்கி நகைச்சுவையுடன், திரில்லையும் கலந்து “கொம்பு...
குஜராத் வெற்றிக்கு  பா.ஜ.,  மோடிக்கு மட்டும் இல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் மாலை மரியாதை செலுத்த வேண்டும் – சிவசேனா விமர்சனம்..!

குஜராத் வெற்றிக்கு பா.ஜ., மோடிக்கு மட்டும் இல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் மாலை மரியாதை செலுத்த வேண்டும் – சிவசேனா விமர்சனம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி  அண்மைக்காலமாக பாரதீய ஜனதாவை கடுமையாக விமர்சித்து வருகிறது. குஜராத் தேர்தல் முடிவுக்கு பிறகும் தொடர்ந்து விமர்சன கணைகளை தொடுத்து வரும் சிவசேனா, குஜராத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டு இருக்கலாம் என சூசகமாக தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில், பாரதீய ஜனதா 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. கடந்த முறை 115 தொகுதிகளில் வென்ற பாரதீய ஜனதா, இம்முறை 16 தொகுதிகளை இழந்தது. அதேவேளையில், காங்கிரஸ் 2012 ஆம் ஆண்டு தேர்தலின் போது 61 தொகுதிகளில் வென்றிருந்த நிலையில், தற்போதைய தேர்தலில் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த  நிலையில், பாரதீய ஜனதா வெற்றி குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள சிவசேனா, வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்திருக்க வாய்ப்பு உள்ளதாக முறைமுக...
பிரதமர் மோடியை புதுமண தம்பதி விராட் கோலி-அனுஷ்கா சர்மா சந்தித்து வாழ்த்து பெற்றனர்..!

பிரதமர் மோடியை புதுமண தம்பதி விராட் கோலி-அனுஷ்கா சர்மா சந்தித்து வாழ்த்து பெற்றனர்..!

HOME SLIDER, NEWS, politics, நடிகைகள்
புதுடெல்லியில் பிரதமர் மோடியை புதுமண தம்பதி விராட் கோலி-அனுஷ்கா சர்மா ஆகியோர் சந்தித்து பேசினர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமணம் கடந்த 11ம் தேதி இத்தாலியில் நடைபெற்றது. அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் டிசம்பர் 21 மற்றும் 26ம் தேதி நடைப்பெற உள்ளது. இந்நிலையில்  புதுடெல்லியில் பிரதமர் மோடியை புதுமண தம்பதி விராட் கோலி-அனுஷ்கா சர்மா ஆகியோர் சந்தித்து பேசினர். அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்....
பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட ரிலீசுக்கு சிக்கல் ஏற்படுத்தும் ஜன்னல் ஓரம் பட கடன்…!

பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட ரிலீசுக்கு சிக்கல் ஏற்படுத்தும் ஜன்னல் ஓரம் பட கடன்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அரவிந்த் சாமி-அமலாபால் ஜோடியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட ரிலீஸ் நடிகர் விமல் புகாரால் கேள்விக்குறியதாகி உள்ளது. பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளர் முருகன் சில ஆண்டுக்கு முன் ஜன்னல் ஓரம் என்ற் படத்தை தயாரித்தார். இதில் பார்த்திபன், விதார்த் இவர்களோடு விமல் நடித்தார். அந்த பட ஷூட்டிங் நேரத்திலும், ரிலீஸ் ஆகும் போதும் விமல் தனது பெயரை வைத்து  கடன் வாங்கி கொடுத்தாராம். ஆண்டுகள் ஓடியும் கடன் அடைக்கப்படவில்லை.  அந்த கடன் வட்டியோடு வளர்ந்து நிற்கிறது. தயாரிப்பாளர் முருகன் இப்போது பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை தயாரிக்கிறார். இதில் அரவிந்த் சாமி, அமலாபால் ஜோடி நடிக்கின்றனர். அதே நேரம் விமல் சொந்த படமாக மன்னர் வகையறா என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். வாங்கிய கடன் பட ரிலீஸ் நேரத்தில் சிக்கலான சூழலை ஏற்படுத்தும் என உணர்ந்து கடன் வாங்கி திருப்பி தராத தயாரிப்பாளர் முருகனி...