சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

மோடியுடன் நான் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் – தமிழிசைக்கு சவால் விட்ட ஸ்டாலின்

மோடியுடன் நான் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் – தமிழிசைக்கு சவால் விட்ட ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேசி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பா.ஜ.க.வுடன் பேசியதாக தமிழிசை சவுந்தரராஜன் நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என பா.ஜ.க. தலைவர் தமிழிசைக்கு ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடியுடன் நான் பேசியதாக பச்சைப் பொய் கூறிய தமிழிசைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை இந்த அளவு தரம் தாழ்த்திக் கொண்டது வேதனை அளிக்கிறது.

ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதில் இரட்டிப்பு உறுதியாக உள்ளேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

624 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன