கொரானாவை ஒழிக்க வல்லரசுகளே திணறுகிறது அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுதும் ஊரடங்கு – பிரதமர் மோடி உத்தரவு
கொரானா வைரஸ் பரவலை தடுக்க அடுத்த 3 வாரங்கள் மிக முக்கியமான நாட்கள்.
இன்று இரவு முதல் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் சுய கட்டுப்பாட்டில் இல்லாமல் போனால் பெரும் அழிவை சந்திக்க வேண்டி வரும்.
ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம். உறவினர்கள் உட்பட யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம்.
காட்டுத்தீ போல் கொரானா பரவி வருகிறது. .
ஒருவருக்கு தெரியாமலேயே கொரானா தொற்று ஏற்படுகிறது. நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் என்று கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.
கொரானாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் சரி செய்து விடலாம்.
வல்லரசு நாடுகளாலேயே கொரானாவை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரானாவை கட்டுப்படுத்த ஒரே வழி சுய கட்டுப்பாட்டுடன் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பதுதான்.
பொருளாதாரத்தை விட மக்கள் பாதுகாப்பே முக்கியம்.
அரசின் நடவ...








