செக்ஸ் என்பதும் ஓர் உணர்வு, பேசத் தயங்க வேண்டிய விஷயமல்ல – வித்யாபாலன் அதிரடி
செக்ஸ் என்பது மனித உணர்வு. அது பேசத் தயங்கக்கூடிய விஷயம் அல்ல’ என்கிறார் அதிரடியாக.
‘‘திருமணம் என்ற அமைப்புக்குள்தான் செக்ஸ் இடம்பெற வேண்டும், அது இனப்பெருக்கத்துக்கானது என்பதே இந்திய கலாசாரமாக உள்ளது. அதுவே அந்தரங்க இன்பத்தைக் கெடுத்துவிடுகிறது’’ என்பது வித்யாவின் வாதம்.
அவரே தொடர்ந்து, ‘‘உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக நாம் இருந்தாலும், இன்னும் செக்ஸ் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்குத் தயங்குவது வேடிக்கையானது. செக்ஸ் என்பதற்கு நாம் போதுமான முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அது திருமண உறவில்தான் நடக்க வேண்டும், வாரிசுகளை உருவாக்க மட்டுமே தேவைப்படும் விஷயம் என்று எண்ணுகிறோம். ஆனால் பாலியல் உணர்வு தரும் இன்பம், அந்தரங்க நெருக்கத்தின் மகிழ்ச்சி, அதன் சுவாரசியம் எல்லாவற்றையும் தவறவிட்டுவிடுகிறோம்’’ என்று படபடவென்று விளாசுகிறார்.
செக்ஸ் பற்றிய நமது மனோபாவத்தை மாற்றிக்கொ...