சனிக்கிழமை, நவம்பர் 1
Shadow

Tag: PM MODI

தமிழகத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள்!

தமிழகத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகிறார். நேரு உள் விளையாட்டரங்கில் மாலை 5.45 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு ரூ. 31 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் நாட்டுக்கு அர்ப்பணித்தும் உரையாற்றுகிறார். விழாவில் முடிவுற்ற 5 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அந்த 5 திட்டங்கள் விபரம் வருமாறு:- தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தூரத்துக்கு ரூ.598 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 3-வது ரெயில் பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதே போல் மதுரை-தேனி இடையே ரூ.506 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அகல ரெயில் பாதையையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவில் 115 கி.மீ. தூரத்துக்கு குழாய் வழியே எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 115 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.849 கோடி செலவில் எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்...
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி முறையே லிட்டருக்கு ரூ.8 மற்றும் ரூ. 6 -குறைக்கப்பட்டது. இந்த வரிக்குறைப்பின் மூலம் பெட்ரோல், ஒரு லிட்டர் ரூ. 9.5-ம், டீசல் ரூ. 7-குறையும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்பு குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, எப்போதும் மக்கள் நலனே முதலில் என்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு எப்போதும் மக்கள்தான் முதன்மை,  இன்றைய முடிவுகள், குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு தொடர்பான முடிவுகள் பல்வேறு துறைகளில் சாதகமாக அமையும். ந...
பணவீக்கத்திற்கு தீர்வு காண வேண்டும்- பிரதமருக்கு, ராஜஸ்தான் முதலமைச்சர் கோரிக்கை!

பணவீக்கத்திற்கு தீர்வு காண வேண்டும்- பிரதமருக்கு, ராஜஸ்தான் முதலமைச்சர் கோரிக்கை!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள்
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், காணொலி மூலம் பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.  இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: கொரோனா தொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், ஐந்து முதல்வர்களுக்கு மட்டுமே கருத்து தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது. இறுதியில், பிரதமர் திடீரென பணவீக்கம் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி குறிப்பிட்டார். மேலும் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் மீது அவர் குற்றம் சாட்ட முயன்றார். நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் முக்கியமாக மத்திய அரசால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டாலும், அதன் விளைவுகள் மாநிலங்களில் பிரதிபலிக்கின்றன. பணவீக்கம் பிரச்னை தொடர்பாக, அனைத்து முதல்வர்களுடனும் ஆலோசனை க...
இலங்கைக்கு 2,70,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசலை வழங்கியது இந்தியா!

இலங்கைக்கு 2,70,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசலை வழங்கியது இந்தியா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவு பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல மணி நேர தொடர் மின்வெட்டால் மக்கள் துயரங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 36,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டன் டீசல் ஆகியவற்றை இலங்கைக்கு இந்தியா வழங்கி உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. சரக்கு கப்பல் மூலம் இது விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு உதவும் நடவடிக்கையாக இந்தியா இலங்கைக்கு வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டாலர் எண்ணெய்க் கடனின் ஒரு பகுதியாக இந்த எரிபொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமது நாட்டுக்கு இந்தியா பெரிய  அளவில் உதவி செய்துள்ளதாக பிரதமர் மோடிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் அமைச்சருமான, அர்ஜூன ரணதுங்கா பாராட்டு தெரிவ...
இலவச திட்டங்களால் இலங்கை போல் இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்!

இலவச திட்டங்களால் இலங்கை போல் இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள்
மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா, அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, பெரிய வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க புதிய கண்ணோட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பிரதமர் வலியுறுத்தினார். இந்நிலையில், சட்டசபை தேர்தல் நடந்துமுடிந்த மாநிலம் உள்பட பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள இலவச திட்டங்கள் பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாதவை. இத்திட்டங்கள் மூலம் இலங்கையில் ஏற்பட்டதை போல் பொருளாதார நெருக்கடி நம் நாட்டிலும் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது என அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்....
நாடாளுமன்றத்தில் மு.க.ஸ்டாலின்… உற்சாகமாக செல்பி எடுத்துக்கொண்ட எம்.பி.க்கள்!

நாடாளுமன்றத்தில் மு.க.ஸ்டாலின்… உற்சாகமாக செல்பி எடுத்துக்கொண்ட எம்.பி.க்கள்!

HOME SLIDER, NEWS, Photos, politics, செய்திகள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
நாடாளுமன்றத்தில் மு.க.ஸ்டாலின்... உற்சாகமாக செல்பி எடுத்துக்கொண்ட எம்.பி.க்கள்.. தமிழக முதலமைச்சர் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தை சுற்றிப் பார்த்தார். அப்போது எம்.பி.க்கள் அவருடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துகொண்டனர்.   இதை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்திற்குள் வந்த மு.க.ஸ்டாலின் உடன் தமிழக எம்.பி.க்களான கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோனு ஆகியோர் புகைப்படம் எடுத்துகொண்டனர்   திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா மு.க.ஸ்டாலின் உடன் புகைப்படம் எடுத்துகொண்டார்.       Tamil Nadu CM MK Stalin in his meeting with PM Modi today discussed the economic condition in Sri Lanka. He proposed to send relief materials including food and medicines from Tamil Nadu ...
காஷ்மீர் பைல்ஸ் படமா? வெறுப்பை உமிழும் விஷம பிரச்சாரமா? கோடங்கி கேள்வி

காஷ்மீர் பைல்ஸ் படமா? வெறுப்பை உமிழும் விஷம பிரச்சாரமா? கோடங்கி கேள்வி

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, politics, அரசியல், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், வீடியோ
காஷ்மீர் பைல்ஸ் படமா? வெறுப்பை உமிழும் விஷம பிரச்சாரமா? கோடங்கி கேள்வி   https://youtu.be/60rtDfn_1gM
தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம்விடுவதை தடுத்துநிறுத்த வேண்டும் – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம்விடுவதை தடுத்துநிறுத்த வேண்டும் – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த படகுகளை இலங்கை அரசு அரசுடைமையாக்கி தங்கள் வசம் வைத்து இருந்தது. இந்த படகுகளை விடுவிக்க வேண்டும் என மீனவர் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக அரசியல் கட்சிகளும் அதனை வலியுறுத்தின. இதற்கிடையே, இந்த படகுகளை ஏலம் விடும் பணி இன்று தொடங்கியது. முதல் கட்டமாக 65 படகுகள் இன்று ஏலம் விடப்படுகின்றன. இலங்கையில் உள்ள காரை நகரில் ஏலம் விடுவதற்கான பணிகளை இலங்கை அரசு மேற்கொண்டது. அடுத்தடுத்த நாட்களில் மற்ற படகுகளும் ஏலம் விடப்படுகின்றன. வரும் 11-ம் தேதிக்குள் மீதமுள்ள அனைத்து படகுகளையும் ஏலத்தில் விட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் முயற்சிகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வ...
பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை – ராகுல் காந்தி கிண்டல்

பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை – ராகுல் காந்தி கிண்டல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை - ராகுல் காந்தி கிண்டல் ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும் காணொளி மூலம் உரையாற்றினார். பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்த, டெலிபிராம்ப்டர் இயந்திரம் தொழில்நுட்ப கோளாறால் நின்றது. இதன் காரணமாக மோடி சில நிமிடங்கள் பேசாமல் அப்படியே நின்றார். இந்த வீடியோவை பகிர்ந்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலர் கிண்டலடித்து வருகின்றனர் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 'பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரதமர் மோடியால் சொந்தமாகப் பேச முடியாது' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். https:...
இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம் – டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம் – டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம் - டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு! சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பு மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடிஉரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியா 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது. நாட்டில் 156 கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி சாதித்து உலகிற்கு இந்தியா நம்பிக்கையின் பூச்செண்டை பரிசாக அளித்துள்ளது. இந்தியர்களாகிய நமக்கு நமது ஜனநாயகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. 21-ம் நூற்றாண்டை இந்தியர்களின் மனோபாவம் மற்றும் திறமையால் மேம்படுத்தும் தொழில்நுட்பம் எங்களிடம் உள்ளது. இந்தியா உலகின் 3-வது பெரிய மருந்து உற்பத்தியாளராக உள்ளது. கொரோனா தொற்று காலங்களில் 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி பல நாடுகள...