பாலா-அமீர் இல்லம் இடிப்பு கதறி அழுத காமெடியன்..!
பாலா-அமீர் இல்லம் இடிப்பு கதறி அழுத காமெடியன்..!
தமிழ் சினிமாவில் வாழ வந்தான் கதாபாத்திரத்தை அத்தனை சீக்கிரம் யாரும் மறக்க மாட்டார்கள். கஞ்சா கருப்பு என்றாலே தமிழ் சினிமாவில் தனி மவுசு இருந்தது ஒருகாலம்.
அப்படி கஞ்சா கருப்பு திரைத்துறையில் உச்சத்தில் இருந்தபோது சென்னை போரூர் கிருஷ்ணமாச்சாரி நகரில் பெரிய பங்களா ஒன்றை கட்டினார்.
சினிமாவில் இந்தளவுக்கு உயர தனக்கு வாய்ப்பு அளித்து உதவிய திரைப்பட இயக்குநர்கள் பாலா மற்றும் அமீர் ஆகியோரின் பெயரை வைத்தார். “பாலா – அமீர்” இல்லம் என்று பெயர் வைக்கப்பட்டது.
சம்பாதித்த பணத்தை நம்பிக்கை வைத்தவர்களே ஏமாற்றி விட கஞ்சா கருப்பு நொந்து போனார்.
இந்த சூழலில் வேல்முருகன் போர்வெல் என்ற படத்தை தயாரித்து பல கோடி கடன் ஏற்பட்டது.
இந்த கடன் பிரச்சினையை சமாளிக்க ஆசை ஆசையாக பார்த்து பார்த்து கட்டிய வீட்டை கஞ்சா கருப்பு அடமானம் வைத்த...