தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் திருப்பதி கோயிலை மாற்றும் திட்டம் வாபஸ்: பக்தர்களின் எதிர்ப்பால் பின்வாங்கியது மத்திய அரசு
திருப்பதி ஏழுமலையான் கோயிலை மத்திய தொல்லியல் துறைக்கு மாற்றுவது தொடர்பாக அந்தத் துறை சார்பில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த நோட்டீஸ் உடனடியாக வாபஸ் பெறப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். சோழர் காலத்தில் தோன்றிய இந்த கோயில் சேரர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், விஜய நகர பேரரசர்கள், மஹந்திக்கள், சுல்தான்கள், நவாபுகள், ஆங்கிலேயர்கள், ஜமீன்கள், மிராசுதாரர் கள் அதிகாரத்தின் கீழ் பராமரிக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடை யும் முன்பு மதராஸ் மாகாணம் சார்பில் திருப்பதி கோயில் பாராமரிக்கப்பட்டது. பின்னர், 1933- ம் ஆண்டில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கப்பட்டு, இன்றுவரை கோயிலை தேவஸ்தானம் பராமரித்து வருகிறது.
ஆந்திரா, தமிழகம் பிரிந்தபோது, திருப்பதி ஏழுமலையான் கோயில்...