திமுக ஆட்சி அமைந்ததும் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியம் அமையும் ஷார்ஜா புத்தக கண்காட்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு..!
அமீரகத்தில் நடைபெற்றுவரும் 36வது சார்ஜா சர்வதேச புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றினேன். சார்ஜாவின் அரசர் மாட்சிமைமிகு சுல்தான் அவர்கள் வரலாற்று ஆய்வு மனப்பான்மையும், இலக்கிய ஆர்வம் உடையவராகவும் இருப்பதால் புத்தக ஆணைக்குழுவை உருவாக்கி, புத்தக திருவிழாவை நடத்துவது மட்டுமல்லாமல் சார்ஜா மண்ணின் மைந்தர்களின் வீட்டிற்கு அரசு செலவிலேயே ஓர் நூலகத்தை வழங்கியிருக்கிறார் என்ற செய்தி கேட்டு ஆச்சர்யப்பட்டேன்.
எந்த மொழியாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும் தன் மொழி மற்றும் இனத்தின் உரிமைகளைப் பாதுகாக்க, பிறரது ஆதிக்கத்திற்கு ஆட்படாமல் சுயமரியாதையுடன் உயர்ந்து நிற்க முயற்சிப்போர் அனைவருமே திராவிட இயக்கத்துக்கு நெருக்கமானவர்கள் தான். அந்த வகையில் தன் மண்ணின் பெருமையை அறிவு தீபம் ஏற்றி வெளிச்சமிட்டுக் காட்டும் சுல்தான் அவர்கள் போற்றுதலுக்குரியவர் என்றேன்.
பேரறிஞர் அண்...