அதிகாரிகளை அருவருப்பான கேலிச்சித்திரம் வரைந்ததால் கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தோம் – நெல்லை காவல்துறை விளக்கம்
கார்ட்டூனிஸ்ட் பாலா சென்னையில் கைது செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான அருண்சக்தி குமார் விளக்கம் அளித்து செய்திக்குறிப்பு வெளியிட்டு உள்ளார்.
நெல்லை மாவட்டம் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர், தான் வாங்கிய கடன் தொகையான 1.45 லட்சம் ரூபாய்க்கு 2.45 லட்சம் ரூபாய் பணம் செலுத்திய பின்னரும் கடன் தொகையைக் கேட்டு கந்துவட்டி கொடுத்தவர்கள் மிரட்டியதால் நெல்லை மாவட்ட ஆட்சியரான சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தார்.
பல முறை மனு அளித்தும் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.காவல்துறையினர் கந்து வட்டிக் கும்பலுக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்து செய்ததால் மனம் உடைந்த அவர் கடந்த மாதம் 23-ம் தேதி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்தார். அவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தீக்கொளுத்தி தற்கொலை செய்து க...