புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: வைகோ

போலி பத்திரப்பதிவு ஒழிப்பு சட்டத்துக்கு வைகோ பாராட்டு!

போலி பத்திரப்பதிவு ஒழிப்பு சட்டத்துக்கு வைகோ பாராட்டு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் சில ஆண்டுகளாக போலியாகவும், ஆள்மாறாட்டம் செய்தும், நிலம் மற்றும் சொத்துகளை மோசடியாக பத்திரப்பதிவு செய்து வருவது தொடர்ந்து கொண்டிருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப் பேரவையில் சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி போலி ஆவணம், ஆள் மாறாட்டம் போன்ற காரணங்களின் அடிப்படையில் மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை பதிவுத்துறையே ரத்து செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இச்சட்ட முன்வரைவுக்கு கடந்த ஆகஸ்டு 6-ந் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன், சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. நில அபகரிப்பு செய்து, போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது குறித்து மாவட்டப் பதிவாளர்களால் புகார் மனு பெறப்படும் பட்சத்தில், மனுதாரர் ...
‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரை தடை செய்ய வேண்டும் –  வைகோ மத்திய மந்திரிக்கு கடிதம்!

‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரை தடை செய்ய வேண்டும் – வைகோ மத்திய மந்திரிக்கு கடிதம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரை தடை செய்ய வேண்டும் - வைகோ மத்திய மந்திரிக்கு கடிதம்! நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு தடைகோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தி பேமிலி மேன்-2 என்ற இந்தி வெப் தொடர் ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி இந்த கடிதத்தை எழுதி இருக்கின்றேன். இந்தி மொழியில் வெளியாகும் இந்த தொடரின் முன்னோட்டக் காட்சிகள் சமூக வலைதளங்களி...
ஸ்டெர்லைட் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் வைகோ கேவியட் மனு தாக்கல்

ஸ்டெர்லைட் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் வைகோ கேவியட் மனு தாக்கல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *ஸ்டெர்லைட் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் வைகோ கேவியட் மனு தாக்கல்* ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி இல்லை என வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து ஆகஸ்ட் 18 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் உடல் ஆரோக்கியத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் மிகப் பெரிய ஆபத்து ஏற்படும் என்று கூறி மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆரம்பம் முதல் இந்நாள் வரை ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வந்துகொண்டிருக்கிறார். இந்த ஆலைக்கு எதிராக சுமார் கால் நூற்றாண்டாக பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை வைகோ தலைமை தாங்கி நடத்தி உள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் பசுமைத் தீர்ப்பாயம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்...
ஒரே நாடு; ஒரே பணியாளர் தேர்வு பா.ஜ.க. அரசின் சதித் திட்டம் – வைகோ கண்டனம்

ஒரே நாடு; ஒரே பணியாளர் தேர்வு பா.ஜ.க. அரசின் சதித் திட்டம் – வைகோ கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஒரே நாடு; ஒரே பணியாளர் தேர்வு முகமை: பா.ஜ.க. அரசின் சதித் திட்டம்! வைகோ கண்டனம் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று (19.08.2020) எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜிதேந்திர சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கி உள்ளனர். அதில், மத்திய அரசின் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு, தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை (National Recruitment Agency - NRA) உருவாக்கப்படும் என்றும், மத்திய அரசு பணியிடங்களை நீரப்புவதற்கு நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் என்றும், இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தற்போது வங்கிப் பணி, இரயில்வே பணி உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறை பணிகளுக்கு தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகளை எழுதுவதால் கால விரயமும், தேர்வு கட்டண செலவு அதிகரிப்பதும், வீண் அலைச்சல...
திமுக நடத்த திட்டமிட்ட அனைத்து கட்சி கூட்டத்துக்கு தடை… தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சியா வைகோ காட்டம்!

திமுக நடத்த திட்டமிட்ட அனைத்து கட்சி கூட்டத்துக்கு தடை… தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சியா வைகோ காட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    திமுக நடத்த திட்டமிட்ட அனைத்து கட்சி கூட்டத்துக்கு தடை... சர்வாதிகார ஆட்சியா வைகோ காட்டம்! கொரானா பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கால் முடக்கப்பட்ட நிலையில் 21 நாள் ஊரடங்கு முடியும் நிலையில் மீண்டும் இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பணிகளை தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் செய்ய தடை செய்த அரசுக்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் அரசு அறிவிக்கப்பட்டது தவறாக புரிந்து கொண்டதாகவும், சமூக இடைவெளியை பின்பற்றி அரசின் விதிமுறைகள் படி நிவாரண உதவிகள் செய்யலாம் என அரசு விளக்கம் கொடுத்தது. இருந்த போதும் அரசின் நடவடிக்கைகளை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த திமுக அழைப்பு விடுத்தது. இந்த கூட்டம் நா...
கொரானாவால் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து ஆல்பாஸ்  அறிவியுங்கள் – வைகோ அறிக்கை

கொரானாவால் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து ஆல்பாஸ் அறிவியுங்கள் – வைகோ அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். மனித சமூகத்தை அச்சத்தில் உறையச் செய்திருக்கின்ற கொரோனா கிருமியை எதிர்த்து உலகமே போராடிக் கொண்டிருக்கிறது. இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனாவால் மக்கள் கொத்துக் கொத்தாக மடியும் நிலையைக் காணும்போது நெஞ்சம் நடுங்குகிறது. அதுபோன்ற துயரப் பள்ளத்தாக்கில் நமது நாடும் விழுந்துவிடக் கூடாது. கொரோனாவை வெற்றி காண்பது நம் கைகளில் தான் உள்ளது. எனவே ஊரடங்கு உத்தரவை கடைபிடிப்போம்; வீட்டிலேயே தனித்திருப்போம்; கொரோனா தொற்று பரவாமல் மக்களின் உயிரை காப்போம்! என்ற உறுதியை மேற்கொள்ள தமிழக மக்களை அன்புடன் மீண்டும் வேண்டுகிறேன் இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள், பத்தாம் வகுப்புப்...
புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன் – வைகோ பாராட்டு

புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன் – வைகோ பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன் - வைகோ பாராட்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து, சமூக நீதிக்கு கொள்ளி வைத்து, ஏழை–எளிய, தலித், பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை சூன்ய மயமாக்கும் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு கலை உலகின் ஒளிவிடும் நட்சத்திரமான நடிகர் சூர்யா தனது நியாயமான எதிர்ப்பை பதிவு செய்தார். நாட்டின் எதிர்காலத்துக்கே ஆபத்தான கூடாரத்திலிருந்து அதற்கு எதிர்ப்பு ஓங்கார குரல் எழுந்தது. சமூக நீதியிலும், மாநில சுயாட்சியிலும் மாறாத பற்று கொண்டவர்கள் நடிகர் சூர்யாவை ஆதரித்து குரல் தந்தபோது நான் மகிழ்ச்சியடைந்தேன். ஸ்டெர்லைட் மற்றும் தேசத்துரோக வழக்குகளின் பணி சுமையால் நடிகர் சூர்யாவை ஆதரித்து உடனே அறிக்கை தரும் கடமையில் தவறிவிட்டது எனது மனதை காயப்படுத்துகிறது. நடிகர் சூர்யாவின்...
மீண்டும் வைகோவின் சிம்ம குரல் ஒலிக்கப் போகும் மாநிலங்களவை… மதிமுகவினர் உற்சாகம்..!

மீண்டும் வைகோவின் சிம்ம குரல் ஒலிக்கப் போகும் மாநிலங்களவை… மதிமுகவினர் உற்சாகம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மீண்டும் வைகோவின் சிம்ம குரல் ஒலிக்கப் போகும் மாநிலங்களவை... மதிமுகவினர் உற்சாகம்..! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவிருந்த நிலையில் திடீரென அவர் மீதான தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு வெளிவந்தது. இந்த தீர்ப்பில் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்ற கேள்வி எழுந்தது இந்த சூழலில் இன்று வேட்புமனு பரிசீலிக்கப்பட்டபோது வைகோவின் வேட்புமனு தேர்தல் அதிகாரியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து வைகோ மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகி கர்ஜிப்பது உறுதியாகிவிட்டது. நீண்ட இடைவெளிக்கு பின் வைகோவின் குரல் மாநிலங்களவையில் ஒலிக்கப்போவதால் அவரது கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று பேட்டியளித்த வைகோ, தனது ராஜ்யசபா எம்பி சம்பளம் முழுவதையும் தனது கட்சியின் கணக்கில் வர...
வைகோ -அன்புமணி உட்பட 6 பேர் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு..!

வைகோ -அன்புமணி உட்பட 6 பேர் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வைகோ -அன்புமணி உட்பட 6 பேர் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு..! பாராளுமன்ற மேல் சபையில் தமிழக எம்.பி.க் கள் 6 பேர் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 6 பாராளுமன்ற மேல்- சபை எம்.பி.க்களை தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்ய வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டால் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும் தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும் தேர்வு செய்ய முடியும். அ.தி.மு.க. வேட்பாளராக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளரான வேலூரை சேர்ந்த முகமது ஜான், மேட்டூர் நகரச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. தோழமை கட்சியான பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ் பேட்டியி...
கோடிகளை கொட்டி ஏற்படுத்திய பல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார் – வைகோ

கோடிகளை கொட்டி ஏற்படுத்திய பல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார் – வைகோ

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளது. அதன்படி சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தொல்.திருமாவளவனும், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் ரவிக்குமாரும் வெற்றி பெற்றுள்ளனர். இந்தநிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பொதுச்செயலாளர் ரவிக்குமார் நேற்று சந்தித்தனர். அப்போது பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்காக இருவருக்குமே, வைகோ வாழ்த்து தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- எத்தனையோ தடைகளை உருவாக்கி பார்த்தும், கோடி கோடியாக பணத்தை கொட்டி பார்த்தும் தொல்.திருமாவளவனின் வெற்றியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கங்கணம்...