புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

முதன் முறையாக ஏழு பாடலாசிரியர்கள் பாடல் எழுதும்“அனிருத் “

முதன் முறையாக ஏழு பாடலாசிரியர்கள் பாடல் எழுதும்“அனிருத் “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க  சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ அனிருத்  “ தெலுங்கில் பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் “ அனிருத் “ என்ற பெயரில்  தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.    காஜல்அகர்வால்,  சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள்.  படம் பற்றி  A.R.K.ராஜராஜா கூறியதாவது..                                                                            தனது உறவுகள் பசித்திருக்க அடுத்தவர்க்கு தானம் செய்வதை விட மோசமான காரியம் வேறேதும் இல்லை ! என்ற நபிகள் நாயகத்தின் பொன் மொழிதான்  இந்த படத்தின் கதை.  முதன் முறையாக இந்த படத்தில் ஏழு பாடலாசிரியர்களை அறிமுகப் ப...
ஆர்.கே. நகர் தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் வாக்குப்பதிவு

ஆர்.கே. நகர் தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் வாக்குப்பதிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு நாளை மறுநாள் (21-ந் தேதி) இடைத்தேர்தல் நடக்கிறது. மதுசூதனன் (அ.தி.மு.க.), மருதுகணேஷ் (தி.மு.க. ), கரு.நாகராஜன் (பா.ஜனதா), தினகரன் (சசிகலா அணி), கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) மற்றும் சுயேட்சைகள் உள்பட 59 பேர் களத்தில் உள்ளனர். வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கடந்த சில நாட்களாக பிரசாரம் செய்தனர். அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.-எம்.எல்.ஏ.க் கள் தீவிர பிரசாரம் செய்தனர். தொகுதி முழுக்க வீதி வீதியாக சென்று அவர்கள் வாக்கு சேகரித்தனர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லியும், அவர் அறிவித்த திட்டங்களை ஆர்.கே. நகர் தொகுதியில் நிறைவேற்றிடவும் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர். தி.மு.க. வேட்பாளர்...
பைனான்சியர் அன்பு செழியன் மீதான கிரிமினல் நடவடிக்கைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

பைனான்சியர் அன்பு செழியன் மீதான கிரிமினல் நடவடிக்கைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
சினிமா இயக்குனரும் நடிகருமான சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் மரணத்திற்கு காரணம் பைனாசியர் அன்பு செழியன் என கூறி இருந்தார். இதனையடுத்து, அன்புசெழியன் மீது கந்துவட்டி, தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது அன்புசெழியன் மீதான வழக்கு மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் அன்பு செழியன் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இறந்த அசோக் குமாருக்கும் நான் கொடுத்த கடன் தொகைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சசிகுமார்தான் என்னிடமிருந்து பணம் வாங்கினார். சசிகுமாரின் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நான் கடனாக அளித்திருந்த பணத்தை திரும்ப கேட்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக நான் அதிக வட்டி கேட்டு மிரட்டியதாக...
கதை திருட்டு போய் வசன திருட்டு புகாரில் சிக்கிய இயக்குனர் லிங்குசாமி…

கதை திருட்டு போய் வசன திருட்டு புகாரில் சிக்கிய இயக்குனர் லிங்குசாமி…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவில் கதை திருட்டு புகார் ஒன்றும் புதுசு இல்லை... பிரபல நடிகர் அல்லது இயக்குனர் படங்கள் ரிலீஸ் நேரத்தில் இப்படி திருட்டு கதை புகார்கள் கிளம்பும்... அதில் பல உண்மையாக இருந்தாலும் கரன்சி பலம்... காவாலிதனம் இப்படி ஏதாவது ஒன்றால் அந்த புகார் கிடப்பில் போடப்படும். இந்த புகாரும் ஒரு திருட்டு புகார்தான்... இந்த முறை கதைக்கு பதில் வசனத்தை திருடி இருக்கிறார்கள். எப்படி... விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படத்தின் 2ம் பாகம் இப்போது எடுத்து வருகிறார்கள். தயாரிப்பு ஹீரோ இரண்டும் விஷால்... இயக்கி தர வேண்டியது லிங்குசாமி. மதுரை கதை என்பதால் மதுரை வட்டார மொழியில் வசனம் இருந்தால் நலம் என கருதிய இயக்குனர் தரப்பு அங்கே தேடி இங்கே தேடி கடைசியில் கண்டு பிடித்தது... பங்காளியை... இவர் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர்... சினிமாவில் பி.ஆர்.ஓ., ஆர்ட்டிஸ்ட் ம...
குஜராத் தேர்தலில் நோட்டாவுக்கு 5.5 லட்சம் வாக்குகள்… ஆளும் பாஜக அதிர்ச்சி

குஜராத் தேர்தலில் நோட்டாவுக்கு 5.5 லட்சம் வாக்குகள்… ஆளும் பாஜக அதிர்ச்சி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
குஜராத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 49.1 சதவீத வாக்குகள் விழுந்துள்ளன. எந்த வேட்பாளரையும் ஆதரிக்காத 5.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்து உள்ளனர். இது ஆளும் பாஜகவை கடும் அதிர்ச்சியாக்கி உள்ளது.   குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. 99 தொகுதிகளில் வெற்றி பெற்று 6-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளைப் பிடித்து வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், பாரதிய பழங்குடியினர் கட்சி 2 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகளில் பா.ஜ.க. 49.1 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பா.ஜ.க. பெற்ற வாக்குகள் 14724427. அடுத்து காங்கிரஸ் கட்சி 41.4 சதவீதம...
மோடி பிறந்த ஊரில் பா.ஜ.க.வை வீழ்த்திய காங்கிரஸ் பெண் வேட்பாளர்

மோடி பிறந்த ஊரில் பா.ஜ.க.வை வீழ்த்திய காங்கிரஸ் பெண் வேட்பாளர்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 17-9-1950 அன்று (அந்நாள் பம்பாய் மாகாணம்) குஜராத் மாநிலம், பிறந்த மெஹ்சானா மாவட்டத்துக்குட்பட்ட வட்நகர் என்ற ஊரில் பிறந்தார். இந்த ஊர் தற்போது உன்ஜா சட்டமன்ற தொகுதிக்குள் அடங்கியுள்ளது. நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் உன்ஜா சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக நாராயண் பட்டேல்(74) நிறுத்தப்பட்டார். அதே தொகுதி எம்.எல்.ஏ.வாக கடந்த 2012-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 19 ஆயிரத்து 529 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட பெண் வேட்பாளர் ஆஷா பட்டேல்(40) என்பவரிடம் தோல்வி அடைந்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் நாராயண் பட்டேலை எதிர்த்து போட்டியிட்ட ஆஷா பட்டேல் அப்போது தோல்வி அடைந்தார். அந்த நஷ்டக் கணக்கை தற்போதையை வெற்றியின் மூலம் லாபக் கணக்காக ஆஷா பட்டேல் மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
தனுஷ் இயக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ள தேனாண்டாள் பிலிம்ஸ்..!

தனுஷ் இயக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ள தேனாண்டாள் பிலிம்ஸ்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தை தனுஷ் இயக்கவுள்ளார். இப்படத்தின் பணிகள் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்கு மேல் தொடங்கவுள்ளது. 'வடசென்னை', 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'மாரி 2' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இப்படங்களின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்கு மேல் படமொன்றை இயக்க முடிவு செய்திருக்கிறார் தனுஷ். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. 'ப.பாண்டி' படத்தைத் தொடர்ந்து, தனுஷ் இயக்கவுள்ள இரண்டாவது படமாக இது உருவாகவுள்ளது. இதனை தமிழ் - தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்காக தெலுங்கில் முன்னணி நடிகரை நடிக்க வைக்கலாமா என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனம்....
சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தி உடலுக்கு தீங்கு தரும் சானட்டரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டாம் நடிகை தியா மிர்சா வேண்டுகோள்

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தி உடலுக்கு தீங்கு தரும் சானட்டரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டாம் நடிகை தியா மிர்சா வேண்டுகோள்

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியாவின் சுற்றுச்சுழலுக்கான நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகை தியா மிர்சா பதவியேற்றிருக்கிறார். கென்யாவின் தலைநகரமான நைரோபியில், ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றாம் சுற்றுச்சுழல் மாநாடு நடந்தது. இதில் கலந்துகொண்ட தியா மிர்சா “மறுசுழற்சிக்கு எதிரான சானிட்டரி நாப்கின்கள் நம்  நாட்டின் சுற்றுச்சுழலைப் பாதிக்கின்றன. அதனால்தான், நான் மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். ஒரு நடிகையாக நான் இதைக் கூறுவது கவனத்துக்குரிய விஷயம். ஏனென்றால், பல சானிட்டரி நாப்கின் நிறுவனங்கள் அவர்களின் விளம்பரங்களில் நடிக்க என்னை அணுகினார்கள். ஆனால், நான் அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டேன்” என்று தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், “பெண்கள் சானிட்டரி நாப்கினுக்குப் பதிலாக, சுற்றுச்சுழலைப் பாதிக்காத, மக்கும் தன்மைகொண்ட நாப்கின்களை (biodegradable napkin...