புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? – விவசாயிகள் எதிர்பார்ப்பு

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? – விவசாயிகள் எதிர்பார்ப்பு

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், நாகப்பட்டணம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் தான் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். இதேபோல் நீர்மட்டம் 90 அடிக்கு குறைவாக இருந்தாலும் அணைக்கு வரும் நீர்வரத்து திருப்திகரமாக இருந்தால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக பருவ மழை சரிவர பெய்யாததாலும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீர் திறந்துவிடப்படாததாலும் குறிப்பிட்ட காலத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிய...
காலா இசை வெளியீடு – ரஜினி ரசிகர்கள் 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு

காலா இசை வெளியீடு – ரஜினி ரசிகர்கள் 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படத்தின் ஆடியோ வருகிற 9-ந்தேதி வெளியிடப்படுகிறது. இதுவரை ரஜினி படத்தின் ஆடியோ வெளியீடு ஏதாவது அரங்குக்குள்தான் நடைபெறும். முதல் முறையாக காலா படத்தின் ஆடியோ வெளியீட்டை சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திறந்தவெளி அரங்கில் வெளியிட உள்ளனர். காலா படத்தைத் தயாரித்துள்ள நடிகர் தனுஷ் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். ரஜினி தனது அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு மிகப் பெரிய அளவில் நடத்தும் விழா இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி 10 ஆயிரம் பேருக்கு “ரஜினி மக்கள் மன்றம்” அழைப்பிதழும், விழா நுழைவு அனுமதி அட்டையையும் அனுப்பி வைத்துள்ளது. இந்த 10 ஆயிரம் பேரில் 7,500 பேர் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வருகிறார்கள். சென்னையை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு அதிகபட்சமாக 2,500 அழைப்பிதழ்கள் வழங்கப...
ரிலீசுக்கு ரெடியான புதுமுகம் ராஜனின்  ‘செயல்’

ரிலீசுக்கு ரெடியான புதுமுகம் ராஜனின் ‘செயல்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சி.ஆர்.கிரியேசன்ஸ் நிர்மலாராஜன் வழங்க, திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘செயல்’. இதில் அறிமுக நாயகன் ராஜன் தேஜேஸ்வர் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக புதுமுகம் தருஷ் நடித்துள்ளார். ‘செயல்’ படத்தின் நாயகன் ராஜன் தேஜேஸ்வர் தனது அனுபவம் பற்றி கூறுகிறார்.... “எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்தது. பின்னர் அது வெறியாக மாறிடுச்சி. அப்போது, டைரக்டர் ரவி அப்புலுவை சந்தித்தேன். அவர் ஒரு கதையை சொன்னார். அது எனக்கு ஏற்ற கதையாக இருந்ததால் நடிக்க ‘ஓகே’ சொன்னேன். சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் என் அப்பாவே தயாரிக்க முன் வந்தார். அப்படி ஆரம்பித்த ‘செயல்’ படம் இந்த மாதம் 18-ந் தேதி வெளியாகிறது. விஜய்யை வைத்து ‘ஷாஜகான்’ படத்தை இயக்கிய ரவி அப்புலு 14 வருடத்துக்குப் பிறகு இயக்குகிற படம் இது. இதில் நடிக்கும் பாக்கியம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. இந்த படத்தில் எனக்கு ஆக்‌‌ஷன்...
பயன்பாட்டில் இல்லாத 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விற்க ரெயில்வே முடிவு

பயன்பாட்டில் இல்லாத 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விற்க ரெயில்வே முடிவு

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாடு முழுவதும் வளர்ச்சிப்பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை 100 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே இலாகா கையகப்படுத்தியது. இது தவிர அகல ரெயில் பாதை திட்டத்துக்காகவும் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் மீட்டர் கேஜ் ரெயில் பாதை அகல ரெயில் பாதைகளாக மாற்றப்பட்டு விட்டன. இந்த பாதைகள் அகற்றப்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அப்படியே வீணாக கிடக்கிறது. இதையடுத்து தன்னிடம் உபரியாக உள்ள 12 ஆயிரத்து 66 ஏக்கர் நிலத்தை மாநில அரசுகளுக்கு விற்பனை செய்ய ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதுபற்றி ரெயில்வே வாரியம் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம், மத்திய பிரதேசம், கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், “உபரியாக இருக்கும் ரெயில்வேக்கு சொந்தமான நிலங்களை மாநில அரசுகள் தேசிய அல்லது மாநில நெடுஞ்சா...
இன்று முதல் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு – ஐதராபாத் பறந்த அஜித்

இன்று முதல் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு – ஐதராபாத் பறந்த அஜித்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சிவா - அஜித் நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மார்ச்சில் தொடங்க இருந்த படப்பிடிப்பு பட அதிபர்கள் போராட்டத்தால் தள்ளிப்போனது. ஸ்டிரைக் முடிந்து மற்ற படங்களின் அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், விஸ்வாசம் அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், விஸ்வாசம் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கிறது. இதற்காக நடிகர் அஜித் ஐதராபாத் சென்றுள்ளார். விமான நிலையத்தில் ரசிகர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் துவங்கி, படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக...
333 கோடி வரதட்சணை கொடுத்து திருமணம் செய்த சவுதி இளவரசர்..!

333 கோடி வரதட்சணை கொடுத்து திருமணம் செய்த சவுதி இளவரசர்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
சவுதி இளவரசர் சுல்தான் பின் சல்மான், ரூ. 333 கோடி வரதட்சனை கொடுத்து, 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதி இளவரசரான 68 வயது சுல்தான் 25 வயதான பெண்ணை மணந்துள்ளார். இதற்காக அவர், 50 மில்லியன் டாலர்கள் வரதட்சணையாக அவர் கொடுத்துள்ளார். https://youtu.be/JBsSx-NKcxU திருமணத்தின் போது 30 சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தவிர, ஒரு சொகுசு பேருந்தில் 30 பெட்டிகளில் பரிசுகள் கொண்டு வரப்பட்டன. இந்த பரிசுகள் மணப்பெண் வீட்டாருக்கு கொடுக்கப்பட்டது. தவிர, வைரங்களும் தரப்பட்டது. மணப்பெண் வெள்ளை நிற ஆடையில் ஜொலிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது....
படு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாடகி..!

படு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாடகி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிரபல பாடகி நேஹா பாசின் , இன்ஸ்டகிராமில் தன்னுடைய படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கோடைகாலம் ஆரம்பித்து விட்டதால் பிரபல நடிகைகள் பலரும் சுற்றுலா சென்று அங்குள்ள கடலிலோ அல்லது நீச்சல் குளத்திலோ குளிக்கும் போது எடுத்த படங்களை ரசிகர்களிடம் ஷேர் செய்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் தான் பிகினி டிரஸில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றனர். தற்போது அஜீத் நடித்த ‘பில்லா’ படத்தில் இடம்பெற்ற ‘செய் ஏதாவது செய்’ என்ற பாடலையும் ‘யோகி’ படத்தில் ‘யோகி யோகி’தான் ஆகிய பாடல்களை பாடியவர் பிரபல பாடகி நேஹா பாசின். தற்போது இவர் நீச்சல் குளத்தில் இருக்கும் படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் இவர் இத்தாலி நாட்டை சேர்ந்த இசையமைப்பாளர் ஒருவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது....
பொய் செய்தியோ மார்பிங் படங்களையோ என் பெயரில் வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் – நடிகை நிவேதா பெத்துராஜ்

பொய் செய்தியோ மார்பிங் படங்களையோ என் பெயரில் வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் – நடிகை நிவேதா பெத்துராஜ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
தமிழ் நாட்டில் பிறந்து , தமிழில் பேசி, தமிழ் படங்களில் நடிக்கும் நடிகைகள் வெகு சிலரே. "ஒரு நாள் கூத்து" படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் அவர்களில் ஒருவர்.சமீபமாக ஒரு சில ஊடங்கங்களில் வேறு ஒரு நடிகையின் மிக கவர்ச்சிகரமான படங்களை போட்டு, அது நிவேதா பெத்துராஜ் என்று அறிவித்ததை கண்டு மிகவும் வருத்தமடைந்து உள்ளார். " கடந்த சில நாட்களாக ஒரு சில ஊடகங்களில் வேறு ஒரு நடிகையின் புகை படங்களை வெளி இட்டு அது நான் தான் என்று பொய் பரப்புரை செய்து வருகின்றனர். என் மேல் அக்கறை கொண்ட சிலர் தொடர்ந்து இதை பற்றிய கவனத்தை என்னிடம் கொண்டு வந்தனர். இந்த செயலை வெறும் கவன குறைவான செயலாக என்னால் பார்க்க முடியவில்லை. என் பெயரை கெடுக்க வேண்டும் என்றே யாரோ இவ்வாறு செய்கிறார்கள் என்று சந்தேக பட வேண்டி உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளது. இத...
மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து  நாடோடிகள் –  2 படத்தின் படப்பிடிப்பு

மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து நாடோடிகள் – 2 படத்தின் படப்பிடிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில்,  சமுத்திரகனி இயக்கத்தில்    "நாடோடிகள் – 2 "உருவாகி வருகிறது.               இதில் சசிகுமார் - அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும்   பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.பாடல் காட்சி ஒன்றை பல லட்சம் ரூபாய் செலவில் மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கி உள்ளனர். யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலுக்கு ஜஸ்டின்பிரபாகரன் இசையமைத்த...
வடிவுடையானின் ‘பொட்டு’ மே 25ல் ரிலீஸ்..!

வடிவுடையானின் ‘பொட்டு’ மே 25ல் ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா,பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.  வடிவுடையான் கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார். மருத்துவ பின்னணியில் ஹாரர் படமாக உருவாகி உள்ள பொட்டு இம்மாதம் 25 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.   ...