வெள்ளிக்கிழமை, ஜூன் 26
Shadow

Author: Kodanki

ஜீவா – ஷாலினி பாண்டே இணையும் காமெடி படம்

ஜீவா – ஷாலினி பாண்டே இணையும் காமெடி படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா - ஷாலினி பாண்டே இருவரும் ஹெய்ஸ்ட் காமெடி படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரிப்பில் ஜீவாவின் 29-வது படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜீவா ஜோடியாக `அர்ஜுன் ரெட்டி' புகழ் ஷாலினி பாண்டே நடிக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் புதுமுக இயக்குநர் டான் சாண்டி. படத்தைப் பற்றி இயக்குநர் பேசும்போது, “ ஹெய்ஸ்ட் (திருட்டு சம்பந்தப்பட்ட) காமெடி த்ரில்லர் ஜேனரில் ஜீவாவின் 29-வது படமாக இந்த படம் உருவாகிறது. இதற்கு `விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். இந்தப் படத்தில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விஷயம் ஒன்றும் இடம்பெறுகிறது. படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜனவரியி...
வேலைக்காரன் விமர்சனம்

வேலைக்காரன் விமர்சனம்

REVIEWS, விமர்சனம்
தனி ஒருவன் படத்திற்கு பிறகு மோகன் ராஜாவின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனை அவர் ஈடுகட்ட இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. தனி ஒருவன் படத்தில் சமூகத்தின் முக்கிய பிரச்சனையான மருத்துவ பின்னணியில் நடக்கும் ஊழலை சுட்டிக் காட்டிய ராஜா, இந்த படத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் கலப்படமாக இருக்கும் நஞ்சு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை நேர்மறையாக சுட்டிக்காட்டிருக்கிறார். அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள். ஒரு தனி ஒருவனாக, ஒரு வேலைக்காரனாக மோகன் ராஜாவின் கதையும், திரைக்கதையும் படத்தை முன்னெடுத்து செல்கிறது. சமூகத்தின் முக்கிய பிரச்சனையை வைத்து கதையை கொண்டு சென்றாலும், ஆங்காங்கு சிறிது மசாலா சேர்த்திருக்கலாமோ என்று தோன்றும்படியாக இருக்கிறது. வேலைக்காரன் ஒருவன் தனது கம்பெனிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், அதற்காக ...
ரஜினியின் உயர்வுக்கு காரணம் அவரது நிதானம் தான் – இயக்குநர் மகேந்திரன் பேச்சு

ரஜினியின் உயர்வுக்கு காரணம் அவரது நிதானம் தான் – இயக்குநர் மகேந்திரன் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் ஈடுபட இருக்கிறார். விரைவில் புதிய கட்சியை தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக ரஜினி அவர்களது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று (26-ந்தேதி) முதல்31-ந் தேதி வரை ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார். இதில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை இன்று சந்திக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்துடன் தயாரிப்பாளர் கலைஞானம், இயக்குநர் மகேந்திரனும் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் மகேந்திரன் பேசுகையில், யாரும் வருத்தப்படும்படி ரஜினி நடந்து கொள்ள மாட்டார். ரஜினியின் உயர்வுக்கு காரணம் அவரது நிதானம் தான். நிதானம் உள்ளவர்கள்தான் ஜெயித்து சாதனை படைக்கின்றனர். நல்ல தலைவனுக்குரிய அத்தனை அம்சங்களும் ரஜினியிடம...
கட்சியில் இருந்து எங்களை நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது: தங்க தமிழ்ச்செல்வன்

கட்சியில் இருந்து எங்களை நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது: தங்க தமிழ்ச்செல்வன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் சென்னை அடையாறில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- டி.டி.வி.தினகரன் ஒரு மாயமான். அவர் பின்னால் சென்றால் எந்த பலனும் இருக்காது. அவரைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறாரே... பதில்:- 1999-ம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக நின்றபோது நாங்கள் தெருத்தெருவாக சென்று வாக்கு கேட்டுவிட்டு வந்து இரவு 11 மணிக்கு டீ சாப்பிடுவோம். அப்போது ஓ.பன்னீர்செல்வம் கையை கட்டிக் கொண்டு, நெற்றியில் பட்டையை போட்டுவிட்டு பவ்வியமாக நிற்பார். உங்களை விடவும் வயதில் நான் சின்னவன், வேட்பாளரும் வயது குறைவானவர்தான் உட்காருங்கள் தவறாக நினைக்கமாட்டார் என்று சொன்னேன். சாருக்கு முன்னாடி எப்போது நான் உட்கார்ந்தேன்.. சத்தியமாக உட்கா...
உலகம் முழுவதும் போர் காற்று வீசிக் கொண்டிருக்கிறது: போப் ஆண்டவர் பிரான்சிஸ்

உலகம் முழுவதும் போர் காற்று வீசிக் கொண்டிருக்கிறது: போப் ஆண்டவர் பிரான்சிஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
வாடிகன் நகரில் உள்ள செயின்பீட்டர் சதுக்கத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். அதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:- உலகம் முழுவதும் இன்று போர் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மத்திய கிழக்கிலும், ஆப்ரிக்காவிலும் பதற்றம் நிலவி வருகிறது. அதில் பாதிக்கப்படும் சிறு குழந்தைகளின் முகத்தில் தெரியும் வேதனை மிகவும் பாதிக்கிறது. எனவே, போர் பதற்றத்தை தணிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே அமைதியை ஏற்படுத்த வேண்டும். அது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே சாத்தியமாகும். கொரிய தீபகற்பத்தில் நிலவும் முரண்பாடுகளை களைய வேண்டும். அப்போது தான் பரஸ்பரம் நம்பிக்கை மேம்படும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், சிரியா, ஏமனில் நடக்க...
2016 தேர்தலில் 2,928 இம்முறை வெறும், 1,417 ஓட்டுகளை மட்டுமே பா.ஜ.,1,511 ஓட்டுகள் போனது எங்கே? தீவிரமாய் தேடுது

2016 தேர்தலில் 2,928 இம்முறை வெறும், 1,417 ஓட்டுகளை மட்டுமே பா.ஜ.,1,511 ஓட்டுகள் போனது எங்கே? தீவிரமாய் தேடுது

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
1,511 ஓட்டுகள் போனது எங்கே? தீவிரமாய் தேடுது தமிழக பா.ஜ., கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசலும், களத்தில் முன்கூட்டியே இறங்கி வேலை செய்யாததாலும், ஆர்.கே.நகரில், பா.ஜ., தலைகுனியும் அளவுக்கு படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த முறை கிடைத்ததில், 1,511 ஓட்டுகள், இந்த முறை எங்கே போயின என்பது தெரியாமல், அக்கட்சியினர், தற்போது ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில், அரசியல் மேடைகளில், 'கோட்டையில் தாமரை மலரும்' என, பா.ஜ., தலைவர்கள் முழங்கி வருகின்றனர். ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், வெறும், 1,417 ஓட்டுகளை மட்டுமே பெற்றிருப்பது, கட்சியினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 2016 தேர்தலில், அங்கு பா.ஜ., 2,928 ஓட்டுகளை பெற்றிருந்தது. ஆனால், இம்முறை, 'நோட்டா'வை விட குறைவாக பெற்றுள்ளது. இது, தொண்டர்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கி உள்ளது. இது குறித்து, தமிழக பா.ஜ.,வினர் கூறியதாவது: சென்னை, ஆர்.க...
தி.மு.க. மகளிர் அணியில் பணியாற்றுவதையே விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி.

தி.மு.க. மகளிர் அணியில் பணியாற்றுவதையே விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி.

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
2-ஜி வழக்கில் விடுதலையான தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை சென்னை பெரியார் திடலில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருக்கு கி.வீரமணி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ‘தந்தை பெரியார்’ புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார். இந்த சந்திப்புக்கு பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘என்னுடைய கொள்கைகளுக்கும், எனக்கும் உறுதுணையாக, உறுதியாக நான் என்னுடைய பாசறையாக நினைக்கக் கூடிய பெரி யார் திடலுக்கு வந்து, கி.வீர மணியை சந்தித்து வாழ்த்து பெற்றது எனக்கு பெருமையான ஒன்று ஆகும்.’ என்றார். இதையடுத்து அவரிடம், தி.மு.க.வில் உங்களுக்கு வேறு பதவிகள் கொடுப்பார்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கனிமொழி எம்.பி. ‘எனக்கு கொடுத்து இருக்கிற பத வியே மகிழ்ச்சியான பதவி. தொடர்ந்து மகளிர் அண...
அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31-ம் தேதி அறிவிப்பேன் – ரஜினிகாந்த்

அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31-ம் தேதி அறிவிப்பேன் – ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. கடந்த முறை ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்த போது, “நமது அரசியல் சிஸ்டம் சரி இல்லை. போர் வரும் போது களத்தில் இறங்குவேன்” என்று அறிவித்தார். எனவே, ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி புதிய அரசியல் கட்சி குறித்து ரஜினி அறிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அன்றும் அறிவிப்பு வரவில்லை. இந்த நிலையில், இன்று (26-ந்தேதி) முதல் ரஜினி மீண்டும் ரசிகர்களை 31-ந் தேதி வரை சந்திக்கிறார். இதில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31-ஆம் தேதி அறிவிப்பேன் என்றார். ரஜினி பேசுகையில்,  ரசிகர்களை சந்திப்பதில் ...
12 வருடங்களுக்கு முன் வளையல் போட்ட ஜெ… இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியாவின் மலரும் நினைவுகள்…!

12 வருடங்களுக்கு முன் வளையல் போட்ட ஜெ… இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியாவின் மலரும் நினைவுகள்…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வளைக்காப்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதா அவருக்கு வளையல் போடும் போட்டோக்களை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் ஜெயலலிதாவுக்கு சொந்தமான திராட்சை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்திற்கு ஆதரவு கொடுத்த ஜெயலலிதா சசிகலாவோடு சேர்த்து ஜெயராமனின் மனைவி இளவரசி, அவரது மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா உள்ளிட்டோரை போயஸ்கார்டனில் தங்க வைத்துக்கொண்டார். இந்நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு கிருஷ்ணப்பிரியாவுக்கு ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டில் வளைக்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த போட்டோக்களை கிருஷ்ணப்பிரியா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஆடம்பரமில்லாமல் எளிதான சேலையில் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் ஜெயலலிதா. அவரை பார்த்து கிருஷ்ணப்பிரியா பேசுவது போன்றுள்ளது போட்டோ....
திமுக, தினகரன் கூட்டு எனும் வாதம் தோற்றவர்களின் புலம்பல்: விஜயகாந்த் விமர்சனம்

திமுக, தினகரன் கூட்டு எனும் வாதம் தோற்றவர்களின் புலம்பல்: விஜயகாந்த் விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சென்னை சின்னமலை தேவாலயத்தில் கிருத்துமஸ் தினவிழா கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை விஜயகாந்த் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக தோல்விக்கு திமுகவும், டிடிவி தினகரனும் கூட்டுச்சேர்ந்து சதி செய்து வென்றதாக குற்றம் சாட்டப்படுவது பற்றி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த விஜய்காந்த் அது தோற்றவர்களின் புலம்பல் அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள், தோற்றவர்கள் எதாவது ஒன்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். தினகரன் வென்றுவிட்டார் அல்லவா அப்படித்தான் சொல்வார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அந்த வெற்றிடம் டிடிவியால் நிரப்பப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது அதை பொதுத்தேர்தல் தான் தீர்மானிக்கும். உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டு என்பதை அப்போது தான் முடிவு செய்வோம் என்று விஜயகாந்த் தெரிவித்தார்...