செவ்வாய்க்கிழமை, ஜூன் 30
Shadow

Author: Kodanki

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தல ரசிகர்!

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தல ரசிகர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கடந்த 4-ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் 71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 41 பதக்கங்களை வென்று முதலிடத்திலும், 23 பதக்கங்களை பெற்று இங்கிலாந்து இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா, இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கங்களை பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இந்தியா ஒரு தங்க பதக்கத்தை வென்றுள்ளது. இந்த போட்டியில் ஆடவர் 77கிலோ பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்ட தமிழகத்தின் வேலூரை சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம், முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு மூன்றாவது தங்கத்தை சதீஸ்குமார் பதிவு செய்துள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்க பதக்கத்தை வென்றுள்ளார். தமிழக வீரரின் இந்த சாதனைக்கு நமது இந்தியாவின்...
நடிகையர் திலகம் படத்தில் ’மதுரவாணி’யாக சமந்தா!

நடிகையர் திலகம் படத்தில் ’மதுரவாணி’யாக சமந்தா!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
நடிகையர் திலகம் படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் குறித்த தகவலுடன் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாராகிவருகிறது. இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துவருகின்றனர். பத்திரிகை நிருபராக நடிக்கும் சமந்தா, தனக்கான படப்பிடிப்புக் காட்சிகள் முடிவடைந்துவிட்டதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “மகாநதியில் எனக்கான படப்பிடிப்புக் காட்சிகளில் நடித்துமுடித்துவிட்டேன். சாவித்திரியின் வாழ்க்கை சம்பந்தபட்ட படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். நன்றி நாக் அஸ்வின் சார்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். தற்போது இந்தப் படத்தில் சமந்தா மதுரவாணி...
தமிழ் திரைத்துறை வேலைநிறுத்தம் – 2018!- சில சந்தேகங்களும், பதில்களும்!

தமிழ் திரைத்துறை வேலைநிறுத்தம் – 2018!- சில சந்தேகங்களும், பதில்களும்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
VPF எனும் வார்த்தை இவ்வளவு பிரபலம் ஆகும் என்று ஆரம்பத்தில் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு துறையில் இருக்கும் தொழில்நுட்ப விசயங்கள் அல்லது அதனுள் உள்ள குளறுபடிகளை அதன் பயனீட்டாளர்களுக்கு தெரியப்படுத்தித்தான் போராட வேண்டும் என்பது அவசியம் அல்ல என்றாலும், நாடி நரம்பெல்லாம் சினிமா ஊறிப்போய் உள்ள நமக்கு அது சிறிது காலம் தவிர்க்கப்படும் போது, அதைப் பற்றி தெளிவுபடுத்த பல தளங்கள் முற்பட்டதால் இந்த அளவுக்கு பிரபலம் ஆகி விட்டது. ஆனால் இந்த ஒரு வார்த்தைக்குப் பின் மறைந்திருந்த பல விசயங்கள் இன்று வெளிவந்துள்ளதும் திரைத்துறைக்கு பெரும் நன்மையே. சினிமா உருவான காலகட்டம் முதல் பலதரப்பட்ட வடிவில் வரவு செலவு இருந்ததால் தயாரிப்பாளர், வினியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர் இடையே எந்த வரவு செலவு, யார் யாருக்கு என்ற வரைமுறை இருந்தது. இடையே காலமாற்றத்தில் உருவான தொழில்நுட்ப மாற்றங்களை, முறைப்பட...
தேசியகொடியை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: சென்னை ஆட்சியர் எச்சரிக்கை

தேசியகொடியை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: சென்னை ஆட்சியர் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, செய்திகள்
 தேசியகொடி அல்லது இந்திய அரசமைப்பு சட்டத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொது இடத்தில் தேசிய கொடியை அவமதிப்பது, சேதப்படுத்துவது போன்ற செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பொது இடத்தில் தேசியகொடி அல்லது இந்திய அரசமைப்பு சட்டத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கொடியை அல்லது இந்திய அரசியலைப்புச் சட்டத்துடன் தொடர்புடைய பகுதியை எரிக்கிற, சிதைக்கிற, அழிக்கிற, மிதிக்கிற அல்லது அவமதிக்கிற செயலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று ஆட்சியர் எச்ச...
லண்டனில் முதன்முறையாக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிரூத்

லண்டனில் முதன்முறையாக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிரூத்

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தமிழ் திரையிசை உலகின் இளம் இசையமைப்பாளரான அனிரூத் முதன்முறையாக இலண்டனில் பிரம்மாண்டாமான முறையில் இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார்.  ஜுன் 16 மற்றும் 17 ஆம் தேதியில் இலண்டன் மற்றும் பாரீஸில் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் அனிரூத் முதன்முறையாக நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனமும், ஹியூபாக்ஸ் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து செய்து வருகிறது. இது தொடர்பாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது... ஜுன் 16 ஆம் தேதியில் இலண்டனில் உள்ள S S E Wembly Arena என்னுமிடத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் இசை நிகழ்ச்சி நடைபெறும் கலையரங்கத்தின் இணையதளத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை பிரபல இணையதளங்களிலும் ( டிக்கெட் மாஸ்டர்) இன...
காவிரி பிரச்னைக்கான முழு அடைப்பு  முழு வெற்றி! – ஸ்டாலின் ஹேப்பி

காவிரி பிரச்னைக்கான முழு அடைப்பு முழு வெற்றி! – ஸ்டாலின் ஹேப்பி

HOME SLIDER, NEWS, செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி கைதான திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சி தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் முழு அடைப்புப் போராட்டம் நூறு சதவிகிதம் வெற்றியடைந்துள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முதல் கட்டமாக இன்று (ஏப்ரல் 5) முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்க ணக்கானோரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். மெரினா கடற்கரை முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு, புரசைவாக்கத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், "இதற்கு முன்பு...
அதிமுக உண்ணாவிரத போராட்டம்; எடப்பாடி & பன்னீர் பங்கேற்பு

அதிமுக உண்ணாவிரத போராட்டம்; எடப்பாடி & பன்னீர் பங்கேற்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அதிமுக சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றுள்ளனர். காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி 16 -ஆம் தேதி முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அந்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்கு அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது. இதற்கிடையே இந்த கெடு கடந்த வியாழக்கிழமை முடிவடைந்தது. எனினும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. மேலும் 3 மாத கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதனால், மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம...
புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இலங்கையில் தமிழ் ஈழம் அமைவதற்காக அரும்பாடுபட்ட விடுதலை புலிகள் இயக்கத்தினை உருவாக்கியவர் பிரபாகரன். இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கை அரசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இயக்குநர் வெங்கடேஷ் குமார் முன்வந்துள்ளார். இப்படத்தினை வெங்கடேஷ் தனது சொந்த நிறுவனமான ‘ஸ்டூடியோ 18’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவிருக்கிறார். இவர் ‘நீலம்’, ‘உனக்குள் நான்’, ‘லைட்மேன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
ரஜினியின் காலா – படத்துக்கு கிடைத்த U/A சென்சாருடன் ரிலீஸாகுமா?

ரஜினியின் காலா – படத்துக்கு கிடைத்த U/A சென்சாருடன் ரிலீஸாகுமா?

CINI NEWS, திரைப்படங்கள்
காலா படம் அறிவிக்கப்பட்ட தேதியில் வெளிவருமா என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்துக்கான தணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் முதலாவதாக வெளிவருமென எதிர்பார்க்கப்பட்ட வேளையில், காலா படம்தான் முதலாவதாக வெளிவரவிருக்கிறது என்று சொல்லும்விதமாக காலா படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்தார் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ். இதையடுத்து வெளியான காலா டீசரும் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. ஆனால், படம் அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியாகுமா என்பது இன்றளவும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஏனெனில் தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தப் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே தயாரிப்பாளர்கள் சங்கப் போராட்டம் முடிவை எட்டிய பிறகே அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 27ஆம் தேதி காலா படமானது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் காலா படத்துக்கு...