ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் மீண்டும் ஒரு வித்தியாசமான படமாக உருவாகி வரும் காற்றின்மொழி திரைப்படத்தின் டீசர் செப்டம்பர் 20 தேதி வெளியாகும் என பட தயாரிப்பாளர் தனஞசெயன் அறிவித்துள்ளார்.
கலைப்புலி தாணுவின் 'துப்பாக்கி முனை' டீசர்... கௌதம் மேனன் வெளியிட்டார்!
கலைப்புலி எஸ் தாணுவின் அடுத்த தயாரிப்பான துப்பாக்கி முனை படத்தின் முதல் டீசர் இன்று மாலை வெளியானது. இதனை இயக்குநர் கௌதம் மேனன் இன்று மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியிட்டார்.
60 வயது மாநிறம் படத்துக்குப் பிறகு கலைப்புலி தாணு தயாரித்து வெளியிடும் படம் 60 வயது மாநிறம். விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஹன்சிகா நாயகியாக நடித்துள்ளார். வேல ராமமூர்த்தி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துள்ளார் விக்ரம் பிரபு.
தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். எல்வி முத்து கணேஷ் இசையமைக்க, புலவர் புலமைப்பித்தன், பா விஜய் பாடல்கள் எழுதியுள்ளனர்.
இந்தப் படத்தின் டீசரை இன்று மாலை 6 ...
*"வால்டர்" வியாபாரம் தொடங்கியது*
அர்ஜீன் - விக்ரம் பிரபு - ஜாக்கி செராப் நடிக்கும் "வால்டர்" மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சிங்காரவேலன் தயாரிக்கும் இந்த படத்திற்கு தெலுங்கில் மெகாஹிட் ஆன 'அர்ஜீன் ரெட்டி' படத்தின் இசையமைப்பாளர் "ராடான்" இசையமைக்கிறார்,
படத்தின் அறிவிப்பு வெளியான 3 மணி நேரத்தில் ஆடியோ உரிமையை "NEW MUSIC" நிறுவனம் கைப்பற்றியது,
அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே 70% வியாபாரம் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.....
ஆணும், ஆணும் பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்வது காட்டுமிராண்டித்தனமானது என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் தன் பால் ஈர்ப்பில் ஈடுபடுவது குற்றமல்ல கூறி சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அண்மையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பிற்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது.
இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் திருநெல்வேலியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்வது காட்டுமிராண்டித்தனம். காட்டுமிராண்டித்தனத்திற்கு சட்டமும் சிலரும் துணைபோகிறார்கள் என பேசினார். அவரது இந்த பேச்சு தற்போது விவாதமாகி இருக்கிறது....
ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், படம் பார்ப்போரின் கண்களை மட்டுமின்றி, படம் பார்க்கும் அனுபவத்தையும் குளிர குளிர குளிர்ச்சியாக வைத்து இருப்பார். அவரது எண்ணம் போலவே அவரது காட்சி அமைப்பும் வண்ண மயமாக இருக்கும்.அவரது கடுமையான நேர்த்தியான உழைப்பு சீமராஜா படம் எங்கும் நிறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. சீமராஜா தனக்கு பெரும் சவாலாக இருந்ததாக கூறுகிறார் பாலசுப்ரமணியம். "எனது முந்தைய படங்களை விட இந்த படம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என நிறைய மெனக்கெட்டேன். பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில்., இமான் இசையில், என இந்த கூட்டணியில் வருத்த படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் கிராமிய பின்னணியில் உருவான படங்கள் என்பதால் இந்த வித்தியாசம் தேவைப்பட்டது. அதே பிண்ணனி என்றாலும், காட்சி அமைப்பு மிக மிக வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று உழைத்தோம். இயக்குநர் பொன்ராம், கலை இயக...