போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட மாற்றுத்திறளானி சபரிவர்மன் குடும்பத்துக்கு சி.எம்.விஜய்யின் முன்னாள் மேனேஜரும் தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் ஒரு லட்சம் நிதி வழங்கினார்!
சபரி வர்மன் மனைவிக்கு ரூ. 1 லட்சம் உதவி
பி.டி.செல்வகுமார் வழங்கினார்
முதல்வர் நிவாரணம் வழங்க வேண்டுகோள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி சபரி வர்மன் நாகர்கோயில் கிளைச்சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது மனைவி ஆனந்தவள்ளிக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவியை கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வழங்கினார்.
இதையடுத்து, அங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் விஜய் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதிரடியாக செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அச்சமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் குட்கா மற்றும் போதைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் கடைகளுக்கு...









