வெள்ளிக்கிழமை, ஜூன் 26
Shadow

Author: Kodanki

காயத்ரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்: விஜய் சேதுபதி

காயத்ரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்: விஜய் சேதுபதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
7சி எண்டர்டெயின்மெண்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுக குமார் எழுதி இயக்கி இருக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி பேசும்போது, ‘ஒரு தெளிந்த நீரோடை போல மிகவும் தெளிவானவர் தான் இயக்குனர் ஆறுமுக குமார். ஆள் பார்த்து பழகாமல், எல்லோரையும் சமமாக நினைத்து பழகக் கூடியவர். அவர் முதல் படத்திலேயே தயாரித்து இயக்கியிருக்கிறார். தன் திறமை மேல் நம்பிக்கை வைத்து உழைக்கும் ஹீரோ தான் கௌதம் கார்த்திக்...
சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான ராமின் பேரன்பு..!

சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான ராமின் பேரன்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
`தரமணி' படத்தை தொடர்ந்து, ராம் அடுத்ததாக `பேரன்பு' படத்தை இயக்கி வருகிறார். இதில் கேரளா சூப்பர் ஸ்டார் மம்முட்டி நாயகனாக நடிக்கிறார். சரத்குமார், அஞ்சலி, அஞ்சலி அமீர், சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, தங்கமீன்கள் சாதனா, லிவிங்ஸ்டன், சுராஜ், சித்திக், அருள்தாஸ் உள்பட பலரும் நடிக்கும் இந்த படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ள இந்த படம் நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளதாக இயக்குநர் ராம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராம் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, `47-வது ரோட்டர்டாம் (நெதர்லாந்து) சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு திரைப்படம் தேர்வாகியுள்ளது. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. பேரன்போடு, ராம்.'...
பத்ம விபூஷண் விருது பெற்ற இசைஞானிக்கு ரஜினி- கமல்-விஷால் வாழ்த்து

பத்ம விபூஷண் விருது பெற்ற இசைஞானிக்கு ரஜினி- கமல்-விஷால் வாழ்த்து

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகர்கள் ரஜினிகாந்த் போனிலும், கமல்ஹாசன், விஷால் ஆகியோர் டுவிட்டரிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கமல் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது’ என்று பதிவு செய்திருக்கிறார். விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நாட்டின் 2-வது உயரிய குடிமகனுக்கு வழங்கப்படும் பத்ம வ...
இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு

இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பாரத் ரத்னா விருதுக்கு அடுத்த படியாக நாட்டின் 2-வது உயரிய குடிமகனுக்கு வழங்கப்படும் பத்ம விபூஷன் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு இளையராஜாவுக்கு பத்ம பூஷன் விருது அளிக்கப்பட்டது. இதுதவிர மதுரை தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் பேராசிரியர் ராஜகோபாலன் வாசுதேவன், தமிழக நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஞானம்மாள் (98), அரவிந்த் குப்தா, லட்சுமி குட்டி (கேரளா), சுபசினி மிஸ்திரி (மேற்குவங்கம்), பாஜு ஷ்யாம், சுதன்ஷு பிஸ்வாஸ், சுலாகட்டி நரசம்...
’நாளை நமதே’ ஸ்லோகனுடன்  கிராமங்களை தத்தெடுக்க கமல்ஹாசன் திட்டம்..!

’நாளை நமதே’ ஸ்லோகனுடன் கிராமங்களை தத்தெடுக்க கமல்ஹாசன் திட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கிராமங்களை தத்து எடுத்து, அனைத்து வித வசதிகளையும் செய்து கொடுக்க நடிகர் கமல்ஹாசன் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வார இதழில் எழுதி வரும் கட்டுரையில் கூறி இருப்பதாவது:- ‘மக்களைக் களத்தில் சந்திக்க, வரும் பிப்ரவரி 21-ந்தேதி பயணம் கிளம்புகிறேன்’ என்று சொல்லியிருந்தேன். இந்தப் பயணத் திட்டத்துக்கு ஒரு பெயர் வைத்துள்ளோம். ‘நாளை நமதே’. ஆம், அந்தப் பயணத்திட்டத்துக்கு நாங்கள் வைத்துள்ள பெயர் இது தான். அவர் ஞாபகம் வந்தாலும் பரவாயில்லை, அவை நல்ல ஞாபகங்கள் என்பதால் இந்தப் பெயரை வைத்துள்ளோம். நான் ஏதோ சக்கரத்தைப் புதிதாக வடிவமைத்தவன் போல் பேசுவதாக நினைக்க வேண்டாம். ஏற்கெனவே அதைக் கண்டுபிடித்துச் சுழலவிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் போய்ப் பாடம் கற்றேன். லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப்புகளுக்குச் சென்று அவர்களின் நற்பணிகள் என்னென்ன என்று தெரிந்து கொண்டு அதை அப்படியே நகலெடு...
பத்மாவத் பட ரிலீஸ் கொந்தளிப்பு… அரசு பஸ் எரிப்பு திரையிட தியேட்டர்கள் மறுப்பு

பத்மாவத் பட ரிலீஸ் கொந்தளிப்பு… அரசு பஸ் எரிப்பு திரையிட தியேட்டர்கள் மறுப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
பத்மாவத் படத்தை திரையிடலாம் என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவையும் மீறி பத்மாவத் படத்துக்கு பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. குறிப்பாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. பத்மாவத் படம் திரையிட இருந்த தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தியேட்டர்களுக்கு அருகில் சாலையோரம் இருந்த பெட்டிக்கடைகள், மால்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கி தீவைத்தனர். இதனால், சேதம் ஏற்படுத்திய கும்பலை விரட்ட போலீசார் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, அங்கு இருந்தவர்கள்  கலைந்து சென்றனர். இந்த வன்முறை தொடர்பாக ஏராளமான நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வன்முறை நீடிப்பதால், அகமதாபாத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இன்று மாலை குருகி...
எஸ்.எஸ்.ஆர் பேரன் அறிமுகமாகும் “கருத்துக்களை பதிவு செய்”..!

எஸ்.எஸ்.ஆர் பேரன் அறிமுகமாகும் “கருத்துக்களை பதிவு செய்”..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
திரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக காலூன்ற வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கையை பட தயாரிப்பிலும் வினியோகத்துறையிலும் அழுத்தமாக பதிய வைத்த நிறுவனம்RPM cinemas. ஜித்தன் 2 , 1 AM படங்களை தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் களத்தூர் கிராமம், 143 ஆகிய வெளியார் படங்களை சொன்ன தேதியில் வெளியிட்டு உள்ளது. இந்த நிறுவனம் அடுத்ததாக ஒரு குறுகிய கால தயாரிப்பாக    “ கருத்துக்களை பதிவு செய் ” என்ற படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின்  பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. கதை திரைக்கதை வசனத்தை எழுதி இருப்பவர் ராஜசேகர்.   இவர் மிர்ச்சி சிவா நடித்து வெளியான யா யா படத்த...
ஹிச்சி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப்படுத்தும் ராணி முகர்ஜி..!

ஹிச்சி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப்படுத்தும் ராணி முகர்ஜி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள், வீடியோ
ராணி முகர்ஜி தனது ஹிச்சி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப் படுத்த உள்ளார். ராணி ஹிச்சி திரைப்படத்தின் மூலம் சமூகத்திற்க்கு மிகமுக்கிய கருத்தினை தெரிவிக்க உள்ளார்.இப்படத்தின் விளம்பரம் மற்றும் ரிலீஸை 5 மொழிகளில் செய்யது இப்படத்தினை அதிகமாக மக்களிடையே கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். https://youtu.be/nLSaCFlXn-g ராணி முடிந்தவரை ஹிச்சி திரைப்டத்தை அதிக மக்களிடையே கொண்டு செல்ல மராத்தி,பெங்காலி,பஞ்சாபி,ஹிந்தி மற்றும் போஜ்புரி போன்ற 5 வித்யாசமான மொழிகளில் படத்தினை ரிலீஸ் செய்யவுள்ளார்.மேலும் தொலைக்காட்சி மூலமும் விளம்பரத்தை தொடங்கி இப்படத்தினை மக்களிடையே கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். "தனக்கு ஹிச்சி திரைப்படத்தின் கதை ஒரு நடிகையாகவும் மற்றும் பொதுமக்கள் நிலையிலும் வைத்து பார்க்கும்போது மிகவும் விரும்ப வைத்துள்ளது.முடிந்தவரை இப்படத்தினை மக்களிடையே கொண்டு செல்ல முயற்ச்சிப்பேன் " ராணி கூறி...
தில் ஆக சமூகத்துக்கு தீர்வு சொல்லும் வீரத்தேவன் – விமர்சனம்

தில் ஆக சமூகத்துக்கு தீர்வு சொல்லும் வீரத்தேவன் – விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, சினி நிகழ்வுகள்
ஒத்த வார்த்தை உசுர அறுக்கும்ணு ஊர்ல ஒரு பழமொழி இருக்கு... அப்படி அப்பா சொன்ன ஒரு வார்த்தையால ஒரு உசுரு போக காரணமான நண்பனின் வலி மிகுந்த கதைதான் வீரத்தேவன். இதுக்கெல்லாம் ஒரு தில்லு வேணும்னு சொல்லுவாங்களே அந்த தில் முதல் படத்துலயே அறிமுக ஹீரோ கவுஷிக் கோபாலனுக்கும், வில்லனா நடித்திருக்கும் ஹீரோவின் நிஜ அப்பா கோபாலனுக்கும் ரொம்பவே இருக்கு. பையன் அறிமுகம் ஆகும் முத படத்துல முத சீனே ஹீரோவ உசுரா பழகின நண்பனே கரகரன்னு கழுத்தறுத்து கொன்னா... நெனச்சி பாக்கவே அடிவயிரு பகீர்னு இருக்கில்ல... இப்படித்தான் தொடங்குது வீரத்தேவன்... படத்தோட பேருக்கேத்த மாதிரியே பட ஆரம்பமே தேவர் ஜெயந்தியில போடுற ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மாதிரி ஒரு பாட்டு வச்சி அங்கிட்டு இங்கிட்டு நகர விடாம சீட்ல உக்கார வைக்கும் இயக்குனர். முதல் படம்னு எந்த டென்ஷனும் இல்லாம அடிச்சி ஆடுற ஹீரோ கவுஷிக் கோபாலன். நல்லவனா வில்லனான...
நியூயார்க் – லண்டனுக்கு 5 மணி 13 நிமிடத்தில் பறந்த விமானம் – வேகத்தில் புதிய சாதனை

நியூயார்க் – லண்டனுக்கு 5 மணி 13 நிமிடத்தில் பறந்த விமானம் – வேகத்தில் புதிய சாதனை

HOME SLIDER, NEWS, செய்திகள்
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு நார்வேயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 787-9 டிரீம் லைனர்’ விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானம் அதிவேகமாக பறந்து 5 மணி 13 நிமிடத்தில் சென்றடைந்தது. பொதுவாக இது 6 மணி 6 நிமிட நேரத்துக்கு லண்டனை சென்றடையும். ஆனால் குறிப்பிட்ட நேரத்தை விட 53 நிமிடத்துக்கு முன்னதாக சென்றடைந்தது. இது பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு 5 மணி 16 நிமிடத்தில் சென்றடைந்தது. அதுவே அதிவேக சாதனை படைத்ததாக கருதப்பட்டது. தற்போது நார்வேயன் ஏர்லைன்சின் ‘போயிங் 787-9 டிரீம் லைனர்’ விமானம் 3 நிமிடத்துக்கு முன்னதாக வந்து புதிய சாதனை படைத்துள்ளது. இது மகிழ்ச்சி அளிப்பதாக நார்வேயன் ஏர்லைன்ஸ் விமானத்தின் கேப்டன் ஹரால்டு வேன்டேம் தெரிவித்தார். தட்ப...