Author: Kodanki
வெள்ளித்திரையில் இந்திரா காந்தி ஆக மாறப்போகும் வித்யா பாலன்..!
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் வித்யா பாலன்
மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான சம்பவம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட நிகழ்ச்சியாகும். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்தியாவின் முதல் மற்றும் கடைசி பெண்மணியான இந்திரா காந்தி 31-10-1984 அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்தியாவின் ‘இரும்பு பெண்மணி’ என்றழைக்கப்பட்ட இந்திரா காந்தியின் வாழ்க்கையில் நிகழந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான சகாரிகா கோஷ், ‘இந்திரா: இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பிரதமர்’ என்ற நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.
பிரபல கவர்ச்சி நடிகை மறைந்த சில்க் ஸ்மிதா வேடத்தில் ’டர்ட்டி பிக்சர்’ படத்...
செல்லாது… செல்லாது… வருத்தம் மட்டுமல்ல பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் வைரமுத்துவை சாடும் தமிழிசை..!
பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கவிஞர் வைரமுத்து, ஆண்டாளைப் பெருமைப்படுத்துகிறேன் என்று பேசவும், எழுதவும், ஆரம்பித்து சிறுமைப்படுத்தியிருக்கிறார். தேவதாயாக, பெண் ஆழ்வாராக பெருமை சேர்த்தவரை, தேவதாசியாக சித்தரிக்க எப்படி மனம் வந்தது?
தமிழைப் பழித்தவரை தாய் தடுத்தாலும் விடேன் என்ற பாரதியின் வார்த்தையை தமிழ் வளர்த்த ஆண்டாளைப் பழித்தவரை யார் தடுத்தாலும் விடோம் என்பதே எங்களது நிலை. மனது புண்பட்டால் வருந்துகிறேன் என்பது, பண்படாமல் எழுதிய வாசகங்களுக்கு பதில் ஆகாது.
உடனே கட்டுரையை மாற்றி, எழுத்து பூர்வமாக பதிவு செய்வது மட்டுமின்றி, இனிமேல் இதுபோன்று உணர்வுகளை காயப்படுத்த மாட்டேன் என மன்னிப்பு கேட்க வேண்டும். இப்போது நீங்கள் கொடுத்திருக்கும் மறுப்பு ஏதோ வெறுப்பை மனதில் வைத்தே கொடுத்தைப் போல் உள்ளதால் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
...
தேர்தலில் சீட் தருவதற்கு லஞ்சமாக நடிகையை நிர்வாணமாக நிற்கச் சொன்ன ராஜபக்ஷே நண்பர்..!
தேர்தலில் சீட் தருவதற்கு நிர்வாணமாக நிற்கச் சொன்ன ராஜபக்ஷே நண்பர்..!
நடிகை வெளியிட்ட பகீர் குற்றச்சாட்டு
இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மகிந்த ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன முன்னணியின் வேட்பாளராக போட்டியிட நடிகை மதுசா ராமசிங்கே விரும்பியுள்ளார்.
இது தொடர்பாக மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய நண்பரிடம் நடிகை மதுசா உதவி கேட்டிருக்கிறார், ராஜபக்சேவின் நண்பரோ, நடிகை மதுசாவை படுக்கைக்கு வரும்படி அழைத்ததோடு முழு நிர்வாணமாக நிற்க வேண்டும் என 'லஞ்சம்' கேட்டிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை மதுசா இந்த விவகாரம் குறித்து கட்சியின் நிர்வாகியான முன்னாள் அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்து அவர் நண்பரின் நிர்வாணமாக நிற்க சொன்ன கொடுமையை சொல்லியிருக்கிறார்.
ஆனால், இதை கேட்ட மகிந்த ராஜபக்சேவோ அந்த குற்றச்சாட்டை கண்டுகொள்ளாமல் வெறும் சாரி மட்டும் கூறி விட்டு போய்...
தோல்விக்கு முக்கிய அமைச்சர்களே காரணம்: முதல் அமைச்சருக்கு மதுசூதனன் கடிதம்
ஆர்.கே. நகர் தோல்விக்கு முக்கிய அமைச்சர்களே காரணம்: முதல் அமைச்சருக்கு மதுசூதனன் கடிதம்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரான மதுசூதனன் தோல்வியுற்றார். இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தது பற்றி இதுவரை ஆலோசனை மேற்கொள்ளாதது ஏன்? என கேள்வி எழுப்பி அ.தி.மு.க. அவை தலைவர் மதுசூதனன் முதல் அமைச்சர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியதுடன் இடைத்தேர்தல் தோல்விக்கு முக்கிய அமைச்சர்களே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுசூதனன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர். அவர் திடீரென போர்க்கொடி உயர்த்தியிருப்பதால் மீண்டும் கோஷ்டி சிக்கல் அதிமுகவில் உருவாகி...
‘அருவா சண்ட’ படத்தின் டீசர் நன்றாக இருக்கிறது – அமீர் பாராட்டு
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
'அருவா சண்ட’ படத்தின் டீசர் நன்றாக இருக்கிறது - அமீர் பாராட்டு
சிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து ஆதிராஜன் எழுதி இயக்கும் படம் ‘அருவா சண்ட’. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
புதுமுகம் ராஜா நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் மாளவிகா மேனன், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா, மதுரை சுஜாதா, காதல் சுகுமார், சரத் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.
பரபரப்பான திரைக்கதையோடு உருவாகும் ‘அருவா சண்ட’ படத்தின் டீசரை, இயக்குநர் அமீர் வெளியிட்டார்.
https://youtu.be/AKZu28cjtYo
‘டீசர் நன்றாக இருக்கிறது, படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்” என்று அமீர் பாராட்டினார். ஒயிட் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை வி.ராஜா தயாரித்திருக்கிறார்
அருவா சண்ட படத்தில் நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணன் இந்த படம்...
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் தபாங் 3 தொடங்க பேச்சுவார்த்தை..!
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் தபாங் 3 தொடங்க பேச்சுவார்த்தை..!
பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘குலேபகாவலி’. இதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்த வாரம் வெளியாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் தீவிர புரோமோஷனில் ஈடுபட்டு வருகிறார் பிரபுதேவா.
இந்த புரோமோஷன் வேலைகளில் பல சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார் பிரபுதேவா. சில காலமாக படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்த பிரபுதேவா, தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதுகுறித்து கேட்டதற்கு, “படம் இயக்குவது குறித்து தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன், கண்டிப்பாக மீண்டும் படம் இயக்குவேன். மேலும், சல்மான் கான் நடிக்கவிருக்கும் தபாங் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கும் பேச்சு வார்த்தையும் நடந்து வருகின்றது” என்றார்.
சல்மான் கானில் தபாங் முதல் இரண்டு பாகங்களும் ரூ ...
‘குலேபகாவலி’ என்று பெயர் சூட்டியது ஏன்? பிரபுதேவா பட டைரக்டர் விளக்கம்
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
‘குலேபகாவலி’ என்று பெயர் சூட்டியது ஏன்?
பிரபுதேவா பட டைரக்டர் விளக்கம்
‘‘எம்.ஜி.ஆர். நடித்த ‘குலேபகாவலி’ படம், ஒரு பயண கதைதான். அதேபோல் பிரபுதேவா நடித்துள்ள ‘குலேபகாவலி’ படமும் பயண கதைதான். அதனால்தான் எங்கள் படத்துக்கு ‘குலேபகாவலி’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம். மற்றபடி, 2 படங்களுக்கும் தொடர்பு இல்லை.
பிரபுதேவா, ஹன்சிகா, முனீஸ்காந்த் ஆகிய மூவரும் ஒரு புதையலை தேடி செல்கிறார்கள். அதே புதையலை தேடி வில்லன்கள் ஆனந்தராஜ், மதுசூதனராவ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் அலைகிறார்கள். ரேவதி, ஒரு குழந்தையை தொலைத்து விட்டு தேடுகிறார். படத்தின் கலகலப்புக்கு யோகி பாபு இருக்கிறார்.
15 வருடங்களுக்கு முன் பார்த்த பிரபுதேவாவை இந்த படத்தில் பார்க்கலாம். படத்தின் கதையை கேட்டதும், ஹன்சிகா நடிக்க சம்மதித்தார். படத்தில் அவர், ‘பப்’ டான்சராக வருகிறார். விவேக் மெர்வின் இசையமைத்து இர...
சிக்கிம் மாநில விளம்பர தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
சிக்கிம் மாநில விளம்பர தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
மாநில முதல்–அமைச்சர் பவன்குமார் சாம்லிங் தலைமையில் நடந்த இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார்.
விழா மேடையில் சிக்கிம் மாநிலத்தின் விளம்பர தூதராக ஏ.ஆர்.ரகுமானை நியமிப்பதற்கு முதல்–மந்திரி விருப்பம் தெரிவித்தார். இதை அவரும் ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பவன்குமார் சாம்லிங், ‘‘எனது பணிவான பரிந்துரையை ஏற்று சிக்கிம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக தனது பொன்னான நேரத்தை செலவிட ஒப்புக்கொண்ட ஏ.ஆர்.ரகுமானுக்கு நன்றி’’ என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.ரகுமான், ‘‘எனக்கு முக்கியத்துவம் தந்து கவுரவம் அளிக்கும் விதமாக மாநிலத்தின் விளம்பர தூதராக அறிவித்ததற்கு நன்றி. சிக்கிம் மாநிலம் சகிப்புத்தன்மை, அமைதி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை கொண்டு...
விளக்கமளிக்க மறுப்பு பேரவையிலிருந்து டி.டி.வி.தினகரன் வெளிநடப்பு
விளக்கமளிக்க மறுப்பு பேரவையிலிருந்து டி.டி.வி.தினகரன் வெளிநடப்பு
தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதிலளித்து வந்தனர்.
111 எம்.எல்.ஏக்களுடன் பெரும்பான்மை இல்லாமல் தமிழக அரசு உள்ளது என திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கூறினார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் பெரும்பான்மை குறித்த உண்மை விளங்கும். முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி நடந்து வருகிறது; மேலும் மூன்றரை ஆண்டு காலம் ஆட்சி நீடிக்கும் . என அமைச்சர் தங்கமணி பதில் அளித்தார்.
இந்தநிலையில், பேரவையிலிருந்து டி.டி.வி.தினகரன் வெளிநடப்பு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பெரும்பான்மை அரசு என அமைச்சர் தங்கமணி கூறிய கருத்துக்கு விளக்கமளிக்க மறுப்பு தெரிவித்ததால் வெளிநடப்பு செய்ததாக பேரவையிலிருந்து வெ...

