அரசியலில்தான் இருக்கிறேன் ; ஆனா …! – சகாயம் ஐ ஏ எஸ் பேச்சு
'ஊழலை எதிர்த்த அன்றிலிருந்தே அரசியலில்தான் இருக்கிறேன்.. நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தாலும் கூட ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளேன். எனினும், அரசியல் கட்சிகளோடு இணைந்து செயல்பட சாத்தியம் இல்லை என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறியுள்ளார்.
‘மாறுவோம் மாற்றுவோம்; என்ற தலைப்பில் இயற்கை விவசாயப் புரட்சிக்கு வித்திட்ட தமிழர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று (மார்ச் 11) நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், இயக்குநர் அமீர், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஆரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், நடிகர் சிவகார்த்திகேயன், விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், இயக்குநர்கள் மோகன் ராஜா, அமீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய இயக்குநர் அமீர் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அரசியலுக்க...









