ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28
Shadow

Author: Kodanki

அரசியலில்தான் இருக்கிறேன் ; ஆனா …! – சகாயம் ஐ ஏ எஸ் பேச்சு

அரசியலில்தான் இருக்கிறேன் ; ஆனா …! – சகாயம் ஐ ஏ எஸ் பேச்சு

NEWS, செய்திகள்
'ஊழலை எதிர்த்த அன்றிலிருந்தே அரசியலில்தான் இருக்கிறேன்.. நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தாலும் கூட ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளேன். எனினும், அரசியல் கட்சிகளோடு இணைந்து செயல்பட சாத்தியம் இல்லை என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறியுள்ளார். ‘மாறுவோம் மாற்றுவோம்; என்ற தலைப்பில் இயற்கை விவசாயப் புரட்சிக்கு வித்திட்ட தமிழர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று (மார்ச் 11) நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், இயக்குநர் அமீர், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஆரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், நடிகர் சிவகார்த்திகேயன், விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், இயக்குநர்கள் மோகன் ராஜா, அமீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய இயக்குநர் அமீர் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அரசியலுக்க...
ஞானவேல் ராஜாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ‘ரெட்’ !

ஞானவேல் ராஜாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ‘ரெட்’ !

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தடையை மீறி விழா நடத்தியதால், ஞானவேல் ராஜாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ‘ரெட்’ போட்டுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் மூலம் படங்களைத் தயாரித்து வருகிறார் கே.இ.ஞானவேல் ராஜா. இவர் தற்போது தயாரித்துவரும் படங்களில் ஒன்று ‘நோட்டா’. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்த விஜய் தேவரகொண்டா இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ ஹீரோயின் மெஹ்ரீன், விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ‘நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. பத்திரிகையாளர் சந்திப்பு, இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட எந்த சினிமா நிகழ்ச்சியையும் நடத்தக்கூடாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில்,  தடையை மீறி ‘நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதா...
போடி குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி 8 பேர் உயிரிழந்தாக தகவல்

போடி குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி 8 பேர் உயிரிழந்தாக தகவல்

HOME SLIDER, NEWS, செய்திகள்
குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர் பாக்யராஜ் கூறியதாகத் தகவல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர், ஈரோட்டைச் சேர்ந்த 12 பேர்,சென்னையை சேர்ந்த 24பேர் என மொத்தம் 36 பேர் கொண்ட குழு ஒன்று போடி அருகே குரங்கணி, கொலுக்கு மலைப்பகுதிக்கு மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றுள்ளனர். இந்த மலைக்குச் சூரியநல்லி வழியாகத்தான் செல்ல முடியும். ஆனால், இவர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வழியாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. இவர்களில் 8 ஆண்கள்,26 பெண்கள்,3 குழந்தைகள் அடங்குவர்.அதிகமானவர்கள் சென்னையைச் சேர்ந்த தனியார் மென்பொருள் ஐடி ஊழியர்கள். இவர்கள் மலைக்குச் சென்றிருந்த சமயத்தில் அங்கு காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. நேற்று காலை ஏற்பட்ட தீ, மாலையில் அதிவேகமாகப் பரவ தொடங்கியுள்ளது. இதனால் மலைக்குச் சென்றவர்கள் திரும்ப முடியாமல் தீய...
நம்ம திமுக & அதிமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் சொத்துப் பட்டியல்!!

நம்ம திமுக & அதிமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் சொத்துப் பட்டியல்!!

NEWS, செய்திகள்
எக்கச்சக்கமான  சொத்துக்கள் கொண்ட மாநிலக் கட்சிகளில் சமாஜ்வாதி முதலிடத்திலும் திமுக, அதிமுக ஆகியவை முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களையும் வகிப்பதாக ஏடிஆர் அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சிகளின் சொத்து மதிப்பு, வேட்பாளர்கள் மீது உள்ள வழக்குகள் தேர்தல் மற்றும் அரசியல் சம்பந்தமான புள்ளிவிவரங்களை டெல்லியைத் தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்( Association for Democratic Reforms (ADR) என்னும் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் மாநில கட்சிகளின் சொத்துகளின் வரவு செலவு கணக்குகள் குறித்த புள்ளிவிவரங்கள் குறித்த ஆய்வறிக்கையை ஏடிஆர் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது. ஆம் ஆத்மி, திமுக, அதிமுக, சமாஜ்வாதி, தேமுதிக, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, சிவ சேனா உள்ளிட்ட 22மாநிலக் கட்ச...
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டிய நாளின்று!

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டிய நாளின்று!

HOME SLIDER, செய்திகள்
தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 11) இரண்டாவதுகட்டமாக, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழ்நாடு 14ஆவது வருடமாகப் போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளதாகத் தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த மருந்து குழந்தைகளுக்கு ஏற்படும் போலியோ எனும் இளம்பிள்ளைவாத நோயை ஒழிக்க வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் இரண்டுகட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். தமிழக சுகாதாரத் துறை சார்பில் குழந்தைகளுக்கு முதல் தவணையாக கடந்த ஜனவரி 28ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இரண்டாவது தவணையாக இன்று காலை 7 மணி முதல் 5 மணி வரை மாநிலம் முழுவதும் போலியோ தடுப்பு சொட்டு ...
இலங்கைக் கலவரம் குறித்து விசாரணை நடத்த கமிஷன் : சிறிசேனா அறிவிப்பு

இலங்கைக் கலவரம் குறித்து விசாரணை நடத்த கமிஷன் : சிறிசேனா அறிவிப்பு

HOME SLIDER, செய்திகள்
இலங்கையில் கண்டி மாகாணத்தின் மத்திய பகுதி ஒன்றில், பெரும்பான்மை சிங்கள பெளத்த மக்களுக்கும், சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கும் இடையே எற்பட்ட மோதலை அடுத்து, மார்ச் மாதம் 6-ஆம் தேதி, அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. இதனை அங்குள்ள எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவும், கலவரத்தை சரியான முறையில் கையாள தவறிவிட்டனர் என்று எதிர்கட்சிகள் கடுமையாக தாக்கி உள்ளன. அதே சமயம் இலங்கைகண்டியில் முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், மசூதிகள் தாக்குதல்களுக்கு இரையாகின. கடந்த திங்கள் முதல் சனிக்கிழமை வரை நடந்த வன்முறை சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கமிஷன் ஒன்றை இலங்கை அதிபர் சிறிசேனா அமைத்துள்ளார். அந்த விசாரணை கமிஷனில் 3 ஓய்வு பெற்ற நீதிபதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள். அந்த ...
பத்திரிக்கையாளர் ஞானியை போன்ற ஒரு கேரக்டரில் சத்யராஜ் நடிக்கும் ‘நோட்டா’

பத்திரிக்கையாளர் ஞானியை போன்ற ஒரு கேரக்டரில் சத்யராஜ் நடிக்கும் ‘நோட்டா’

சினி நிகழ்வுகள்
ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் சாந்தா ரவி.கே. சந்திரன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், கலை இயக்குநர் கிரண், எடிட்டர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா, ஸ்டைலீட் ஷ்ராவ்யா சர்மா என படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும், தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ், முன்னணி இயக்குநர்கள் பா. இரஞ்சித், எஸ்எம்எஸ் ராஜேஷ், டீகே, ஷாந்தகுமார், விஜய் வரதராஜ், சந்தோஷ் பி. ஜெயக்குமார் ஆகியவர்களு...
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஈரோடு,கோபி டூர் ஸ்டார்ட்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஈரோடு,கோபி டூர் ஸ்டார்ட்!

HOME SLIDER, செய்திகள்
ஈரோடு, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தனது சுற்றுப்பயணத்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் இன்று தொடங்குகிறார். முன்னதாக கமல்ஹாசன் மதுரையில் கடந்த மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் அரசியல் நடவடிக்கைகளில் வேகமெடுத்த அவர், தினமும் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அடுத்த பொதுக்கூட்டத்தை ஏப்ரல் முதல் வாரத்தில் திருச்சியில் நடத்தவுள்ளதாக அவர் அறிவித்த நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம்(மார்ச் 8) சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மகளிர் தின விழாவை நடத்தினார். போக்குவரத்து சோதனையின்போது காவலர் தாக்கியதில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு ரூ. 7 லட்சம் அறிவித்துள்ள நிலையில், ரூ. 10 லட்சம் நிதியுதவ...
ஸ்ரீதேவி மரணத்தில்  மர்மா? – மத்திய அரசு மறுப்பு

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மா? – மத்திய அரசு மறுப்பு

சினி நிகழ்வுகள்
பிரபல நடிகை ஸ்ரீதேவி, துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்தபோது, கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி  திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரணத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்பதால், அதில் மர்மம் இருப்பதாகப் பரபரப்பாக பேசப்பட்டது. அதனால், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் உடல், துபாய் நகரில் உள்ள மருத்துவக் குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், அவர் தங்கியிருந்த ஹோட்டலின் குளியலறையில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்ததாக துபாய் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன் பிறகு, அவரது உடல், இந்தியாவுக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி தனி விமானம் மூலம் வரப்பட்டது. ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் உள்ள அவரது வீட்டிலும், பின்னர் வீட்டுக்கு அருகில் உள்ள மைதானத்தில...
நம்ம தமிழகத்தில்தான் காவலர்கள் தற்கொலை அதிகம்!

நம்ம தமிழகத்தில்தான் காவலர்கள் தற்கொலை அதிகம்!

HOME SLIDER
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 67 வயது எனும் நிலையில் தமிழகக் காவலர்களின் பலர் அற்பாயுளில் இறந்து விடுவது அதிகரித்து வருகிறது. 24 மணிநேரமும் ‘காவலர்'களாக மட்டுமே வாழும் பணிச் சூழல்தான் காவலர்களின் முதல் எதிரி. குடும்பத்துடன் நேரம் செலவிடுதல், நண்பர்களுடன் இணைந்திருத்தல், பொழுதுபோக்கு, சமூகக் கலப்பு என சராசரி குடிமக்கள் அனுபவிக்கும் உரிமைகள் காவலர்களுக்கு மறுக்கப் படுகிறது மனஅழுத்தம் அதிகம்: பெரும்பாலான காவலர்கள் படபடப்பு, புலம்பல், சந்தேகம், குழப்பம், தெளிவின்மை என எதிர்மறை உணர்ச்சிகளில் அவர்கள் உழல்கின்றனர். முக்கியமாக குடும்பத்துடன் நேரம் செலவிடவும் அன்பு செலுத்தவும் பணிச்சூழல் இடமளிக்க வில்லை. இதனால், ஏற்படும் மன அழுத்தம் தற்கொ லைக்கும் இளவயது மரணங்களுக்கும் காரணமாகிறது என்று கடந்த சில வருடங்களாகவே தகவல்கள் வெளி வந்த நிலையில் தற்போதும் காவலர்கள் தற்கொலை செய்துகொள்வதில் தமிழகம் முதலிடத்...