பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் பதில்… தவறினால், ரூ.25,000 அபராதம் – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த காலக்கெடுவை பின்பற்றத் தவறினால், ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முதல் பிரிவு அமர்வு, தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.
2014 ஆகஸ்ட் 1 அன்று, அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, பொதுமக்களின் மனுக்களை 30 நாட்களுக்குள் பரிசீலித்து, தெளிவான உத்தரவுகளுடன் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதற்கு இணங்க, 2015 செப்டம்பர் 21 அன்று, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ஒரு அரசாணை (G.O.) வெளியிட்டது.
இதில், மனு...









