வெள்ளிக்கிழமை, ஜூலை 17
Shadow

Author: Kodanki

தங்கம் விலை மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது !

தங்கம் விலை மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது !

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தங்கம் விலை கடந்த மாதம் ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. ஆனால் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாத இறுதியில் தங்கம் விலை பவுன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 1-ந்தேதி ஒரு பவுன் ரூ.38,360-க்கு விற்கப்பட்டது. மறுநாள் பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.38,560-க்கு விற்கப்பட்டது. கடந்த 4-ந்தேதி தங்கம் விலை திடீரென்று ரூ.38,920 ஆக அதிகரித்தது. 5-ந்தேதி சற்றே குறைந்து ரூ.38,760-க்கு விற்பனையானது. மறுநாளும் அதேவிலையில் நீடிக்கிறது. நேற்று பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.38,800 ஆக உயர்ந்தது. இதையும் படியுங்கள்: கும்மிடிப்பூண்டி அருகே திருட முயன்ற கொள்ளையனை அடித்து கொன்ற கிராம மக்கள் இந்த நிலையில் தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்து மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் இன்று பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.39,040-க்கு விற்கப்பட...
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்குகிறார்!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்குகிறார்!

HOME SLIDER, NEWS, politics, sports, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சென்னையை அடுத்த மாமல்லாபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜுலை 28-ந் தேதி மாலை நடைபெற்ற பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் பிரதமருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழர்களின் வரலாற்றை எடுத்து கூறும் வகையில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதைத் தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயின்ட்ஸ் ரிசார்ட்டில் செஸ் போட்டிகள் நடந்து வந்தது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடி வந்தனர். 12 நாட்களாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி சென்னை நேரு உள்வி...
காமன்வெல்த் போட்டி: சிகரம் தொட்ட இந்திய வீரர்கள்!

காமன்வெல்த் போட்டி: சிகரம் தொட்ட இந்திய வீரர்கள்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, வேல்ஸ், கென்யா, நைஜீரியா உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5054 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். இந்தியா சார்பில் 106 வீரர்கள், 104 வீராங்கனைகள் என மொத்தம் 210 பேர் 16 விளையாட்டுகளில் கலந்து கொண்டனர். போட்டியின் நிறைவில் இந்தியா பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து , கனடா 2-வது, 3-வது இடங்களில் உள்ளன. இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் உள்பட 61 பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளது. குறிப்பாக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ரவி குமார் தயா, வினேஷ் போகத், நவீன் ஆகியோர் தங்கம் வென்றனர். இதேபோல் சர்வதேச அரங்க...
தயாரிப்பாளராக மாறிய அமலாபாலின் “கடாவர்”

தயாரிப்பாளராக மாறிய அமலாபாலின் “கடாவர்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  *நீண்ட காத்திருப்பையும், கடின உழைப்பையும் கேட்ட 'கடாவர்'- அமலாபால்* அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து, முதன் முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் 'கடாவர்'. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் அனூப். எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''2016 ஆம் ஆண்டில் இந்த கதையினை கதாசிரியர் அபி...
வைரலாகும் யுவன் ஷங்கர் ராஜாவின் தியாகி பாய்ஸ் பாடல் !

வைரலாகும் யுவன் ஷங்கர் ராஜாவின் தியாகி பாய்ஸ் பாடல் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அரண்மனை 3 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் "தியாகி பாய்ஸ்" பாடலை யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைத்தளப்பக்கத...
சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா மந்தனா!

சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா மந்தனா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். தெலுங்கில் உருவாகி பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட புஷ்பா படம் ராஷ்மிகாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் சீதாராமம் படத்திலும் ராஷ்மிகா நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இந்தியில் சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அமிதாப்பச்சனுடன் குட்பை, ரன்பீர் கபூருடன் அனிமல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் படங்களில் நடிக்க தனது சம்பளத்தை ராஷ்மிகா உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே புஷ்பா படத்தில் நடிக்க ரூ.1 கோடி வாங்கிய அவர் தற்போது புஷ்பா 2-ம் பா...
சுதந்திர தின விழா- சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு !

சுதந்திர தின விழா- சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு !

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியாவின் 75-வது சுதந்திரதின விழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டிஉள்ளதாக, மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கிய ரெயில், பஸ் நிலையங்கள் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்திலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு நேற்று இரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை மோப்ப நாய் உதவியுடன் சோதனை, விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து தீவிரப்பட...
ஆகஸ்ட் 12ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் விருமன்

ஆகஸ்ட் 12ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் விருமன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் "விருமன்". முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி என பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் விருமன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ஜி.எம்.சுந்தர் பேசும்போது, முக்கியமான ஒரு விஷயத்தை நான் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். கார்த்தி சாரின் ஸ்மைல் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நடித்த படத்தில், ஷங்கர் சார் உதவி இயக்குனராக இருந்தார். அவருடைய பெண் கதாநாயகியாக நடிப்பதில் வாழ்த்துகள் என்றார். இயக்குனர் மற்றும் நடிகர் சிங்கம்புலி பேசும்போது, மதுரையிலேயே நன...
திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கடந்த சில நாட்களாக குலசேகரம், திற்பரப்பு, பெருஞ்சாணி பேச்சிபாறை, போன்ற பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணி களின் கூட்டம் அலை மோதுகிறது. இரண்டு நாள் விடுமுறை என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநில மான கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். நேற்று சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்து ஆனந்த மாக குளித்து மகிழ்ந்தனர். சிறுவர் பூங்காவில் சிறுவர் கள் விளையாடி மகிழ்ந்தனர். சிறுவர்கள் நீச்சல்குளத் தில் அதிக அளவில் குளித்து பொழுதை கழித்தார்கள். அவர்களுக்கு பாதுகாப்பாக குளிக்க காற்று நிரப்பிய கார் டியூப்புகளும் வைக்கப் பட்டு உள்ளன. பாதுகாப்பு போலீசாரும் நிறுத்தப்பட்டு உள்ளனர். தற்போது குளிப்பதற்கு ஏற்ற சீசன் தொடங்கப்பட்டு உள்ளது. திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துவிட்டு ஆசியாவிலே ம...
மேட்டூர் அணை நீர் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 95 சதவீதம் ஏரி, குளங்கள் நிரம்பின!

மேட்டூர் அணை நீர் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 95 சதவீதம் ஏரி, குளங்கள் நிரம்பின!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பொதுப்பணி துறைக்கு சொந்தமாக கல்லணை கால்வாய் பகுதியில் மட்டும் 694 ஏரி, குளங்கள் உள்ளன. இந்த ஏரி, குளங்கள் மேட்டூர் அணை தண்ணீரை கொண்டு நிரம்பக்கூடிய ஏரி, குளங்களாகும். அதன்படி முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும். தற்போது அணை நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும் அந்த தண்ணீரைக் கொண்டு ஏரி, குளங்களை நிரப்பும் பணி நடந்து வருகிறது. அதன்படி கல்லணைக் கால்வாயில் உள்ள 694 ஏரி, குளங்களில் 681 ஏரி, குளங்கள் 100 சதவீதம் நிரம்பி விட்டன. மீதமுள்ள 13 ஏரி, குளங்கள் மட்டும் நிரப்பும் பணி நடந்து வருகிறது. இதுதவிர டெல்டா மாவட்டங்களில் அந்தந்த உள்ளாட்சிக்கு சொந்தமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் மழைக்காலங்களில் மட்டும் நிரம்பக்கூடிய குளங்களாகும். அதாவது வடகிழக்கு பருவமழை காலங்களி...