திங்கட்கிழமை, ஜூலை 6
Shadow

அரசியல்

பி.எஸ்.பி. கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமனம்!

பி.எஸ்.பி. கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமனம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் மறைவால், அடுத்த தலைவராக அவரது மனைவியை நியமிக்கலாம் என அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், பதவியை ஏற்க ஆம்ஸ்ட்ராங் மனைவி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் புதிய தலைவரை நியமிக்க தேசிய தலைமை மும்முரமாக ஆலோசித்தது. அதன்படி, உச்சநீதிமன்ற வழக்கறிஞராக இருக்கும் பி.ஆனந்தன் என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்....
இராயப்பேட்டை அரசு மருத்துவமனையுடன் இணைந்து வசந்த பவன் நடத்திய இரத்த தான முகாம்!

இராயப்பேட்டை அரசு மருத்துவமனையுடன் இணைந்து வசந்த பவன் நடத்திய இரத்த தான முகாம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  இராயப்பேட்டை அரசு மருத்துவமனையுடன் இணைந்து வசந்த பவன் நடத்திய இரத்த தான முகாம்! இராயப்பேட்டை அரசு மருத்துவமனை, இரத்ததான வங்கியுடன் இணைந்து தொடர்ச்சியாக மூன்றாவது வருடம் இரத்த தானம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது சென்னை, நம்ம வீடு வசந்த பவன். வசந்த பவன் ஊழியர்களோடு நடக்கும் இந்த ப்ளட் டொனேஷன் கேம்ப்பில் கடந்த இரண்டு வருடங்கள் 50-60 பேர் மட்டுமே இரத்த தானம் செய்திருக்கின்றனர். ஆனால், இந்த வருடம் 200 பேர் இரத்த தானம் செய்திருக்கின்றனர் என்ற விஷயம் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வை தலைமை தாங்கி தொடங்கி வைத்தது வசந்த பவன் உரிமையாளர் ரவி அவர்களின் மனைவி சொர்ணலதா. இதுபற்றி சொர்ணலதா பேசுகையில், “இரத்த தானம் நிகழ்ச்சியை தொடர்ந்து மூன்றாவது வருடம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையுடன் இணைந்து செய்து வருவது மகிழ்ச்சி. அரசு மருத்துவமனையில் இந்த நிகழ்வை நடத்தும்போது அதிக மக்களிடம் இது ச...
அம்பானி மகனின் திருமணத்தை முன்னிட்டு மும்பை போலீசாரின் அறிவிப்புக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

அம்பானி மகனின் திருமணத்தை முன்னிட்டு மும்பை போலீசாரின் அறிவிப்புக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
அம்பானி மகனின் திருமணத்தை முன்னிட்டு மும்பை நகரின் முக்கிய சாலைகள் மூடப்படவுள்ளது பொதுமக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சென்க்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் திருமணத்துக்கு முந்தைய விழா, குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடத்தப்பட்டது. இந்த விழாவுக்கு கிரிக்கெட் நட்சத்திரங்கள், திரை பிரபலங்கள், அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் போன்றோர் அழைக்கப்பட்டு இந்த விழாவில் கலந்துகொண்டனர். இந்த நிலையில், மும்பையின் முதன்மை வட்டாரத்தில் ஹோட்டல் அறைக் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. திருமணம் நடைபெறவுள்ள பந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸ் பகுதியில் உள்ள இரு பிரதான ஹோட்டல்களில் அறைகளுக்கான முன்பதிவு முடிந்துவிட்டதாக பயண, ஹோட்டல் இ...
திமுக அரசு மீது ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை சொல்லும் இயக்குனர் பா.ரஞ்சித் ஏன் ஆருத்ரா மோசடி, பாஜக அண்ணாமலை குறித்து வாய் திறக்கவில்லை – திமுக ஐடி விங் கேள்வி?

திமுக அரசு மீது ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை சொல்லும் இயக்குனர் பா.ரஞ்சித் ஏன் ஆருத்ரா மோசடி, பாஜக அண்ணாமலை குறித்து வாய் திறக்கவில்லை – திமுக ஐடி விங் கேள்வி?

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைசெய்யப்பட்டது குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் ஒரு பதிவை தனது x பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இது ஆம்ஸ்ராங் மீதான அவரது அன்போ, அல்லது அவரது கொலைக்கு காரணங்களை அறியவேண்டும் என்கிற நோக்கமோ இல்லை. மாறாக ஆளும் திமுக அரசை பழிசொல்ல வேண்டும் என்கிற ஒற்றை நோக்கம் மட்டுமே உள்ளது. தனது பதிவில் ஆதாரமில்லாத பல குற்றச்சாட்டுகளை அடுக்கும் ரஞ்சித்திற்கு சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம் என திமுக ஐடி விங் கேள்வி? *ஆம்ஸ்ராங் கொலையில் குற்றவாளிகள் சண்டைந்ததும், அவர்கள் சொல்லும் காரணங்கள் சரியாக பொருந்திவருவதும் உங்களுக்குப் புலப்படவில்லையா..? அதை மறுத்து வேறு குற்றவாளிகளை ஏன் தேடுகிறீர்கள்…? *அப்படி உங்களுக்கு உண்மையான குற்றவாளிகள் என்று யாரையாவது தெரியும் எனில் அவர்களை, போலீசிடமோ, அல்லுத பொதுவெளியிலோ சொல்லாமல். பொத்தாம் பொது...
நடிகர் விஷால் நடத்தும் தேவி அறக்கட்டளை மூலம் 2024ஆம் ஆண்டு கல்லூரி படிப்பிற்கான கலந்தாய்வு கூட்டத்தில் தேர்வான ஏழை மாணவ, மாணவியர்!

நடிகர் விஷால் நடத்தும் தேவி அறக்கட்டளை மூலம் 2024ஆம் ஆண்டு கல்லூரி படிப்பிற்கான கலந்தாய்வு கூட்டத்தில் தேர்வான ஏழை மாணவ, மாணவியர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் விஷால் நடத்தும் தேவி அறக்கட்டளை மூலம் 2024ஆம் ஆண்டு கல்லூரி படிப்பிற்கான கலந்தாய்வு கூட்டத்தில் தேர்வான ஏழை மாணவ, மாணவியர்! நடிகர் விஷால் தனது அம்மா அவர்களின் பெயரில் 'தேவி அறக்கட்டளை' மூலம் பலவருடங்களாக ஏழை எளியோர்க்கு உதவி செய்வதுடன், வருடம் தோறும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் மேற்க்கொண்டு படிக்க முடியாத மாணவர்கள் குறிப்பாக பெண் பிள்ளைகளை கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கவைத்து வருகிறார். அதே போன்று இந்த வருடம் 2024ஆம் ஆண்டு கல்லூரி படிப்பிற்கான சேர்க்கையில் விவசாய குடும்பங்கள், முதல்நிலை பட்டதாரிகள் மற்றும் தாய் தந்தை இல்லாத வறுமை கோட்டிற் கீழ் உள்ள ஏழை எளிய மாணவ, மாணவியர்கள் சேர்க்கை பதிவும் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்று அதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்கள் கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படிப்பிற்கு உதவி செய்துள்ளா...
“பல பெண்களுடன் உல்லாசம்; 4 மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை செய்த பிரஜ்வல்” எஸ்ஐடி விசாரணையில் பரபரப்பு தகவல்!

“பல பெண்களுடன் உல்லாசம்; 4 மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை செய்த பிரஜ்வல்” எஸ்ஐடி விசாரணையில் பரபரப்பு தகவல்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  *பல பெண்களுடன் உல்லாசம்; 4 மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை செய்த பிரஜ்வல்: எஸ்ஐடி விசாரணையில் பரபரப்பு தகவல்* பெங்களூரு: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை செய்து வந்தது எஸ்ஐடி நடத்திய விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.மாநிலத்தின் ஹாசன் தொகுதி முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் புகார் வெளியாகியது. நூற்றுக்கணக்கான பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக பென்டிரைவ் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையில் பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் கொடுத்த புகார் அடிப்படையில் சிஐடி போலீசாரால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை படையினர் விசாரணை நடத்திய பின் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார்.இந்நிலையில் இப்புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணை படை அதிகாரிகள், பிரஜ்வல் ரேவண்ணாவ...
கடலூர் மாவட்டத்துல பிறந்தது அவமானமா இருக்கு… உங்களுக்கெல்லாம் எதுக்கு ஓட்டு? – தோல்வி விரக்தியில் வாக்காளர்களை திட்டிய தங்கர்பச்சான்!?

கடலூர் மாவட்டத்துல பிறந்தது அவமானமா இருக்கு… உங்களுக்கெல்லாம் எதுக்கு ஓட்டு? – தோல்வி விரக்தியில் வாக்காளர்களை திட்டிய தங்கர்பச்சான்!?

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  தமிழ்நாட்டில் நடந்து முடிந்த பார்லிமெண்ட் தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் கடலூர் தொகுதி பாமக.,வுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் பாமக சார்பில் நிஜ திரைப்பட டைரக்டர் தங்கர் பச்சான் போட்டியிட்டார். ஜூன் 4ல் வெளியான தேர்தல் முடிவுகளில் அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 1.85 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். தேமுதிக.,வின் சிவகொழுந்து 2வது இடத்தையும், பாமக.,வின் தங்கர்பச்சான் 3வது இடத்தையும் பிடித்தனர். தங்கர்பச்சான் வாங்கிய ஓட்டுகள் 2,05,244 (19.9 சதவீதம்). தேர்தலில் தோல்வியடைந்தாலும், தனக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க கடலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிக்கு தங்கர் பச்சான் சென்றுள்ளார். அப்போது திறந்தவேனில் நின்று அவர் பேசியதாவது: என்னை பார்ப்பவர்கள் நீங்கள் எப்படிப்பட்ட படங்களை எடுப்பவர், தயவு செய்து உங்களுக்கு அரசியல் வேண்டாம் என்ற...
“ஹமாரே பாராஹ்” என்ற ஹிந்திப் படத்தை வெளியிடுவதற்கு சுப்ரீம் கோர்ட் தடை! 

“ஹமாரே பாராஹ்” என்ற ஹிந்திப் படத்தை வெளியிடுவதற்கு சுப்ரீம் கோர்ட் தடை! 

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, அரசியல், செய்திகள், திரைப்படங்கள்
    முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள், வசனங்கள் இருப்பதாக, ஹமாரே பாராஹ் என்ற ஹிந்திப் படத்தை வெளியிடுவதற்கு சுப்ரீம் கோர்ட் தடை பிரபல பாலிவுட் நடிகர் அன்னுர கபூர் உள்ளிட்டோர் நடிக்கும், ஹமாரே பாராஹ் படத்தின் முன்னோட்டக் காட்சிகள் சமீபத்தில் வெளியாயின. இதில், முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள், வசனங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்தப் படத்துக்கு தடை விதிக்கக் கோரி, மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் இந்தப் படத்தை ஜூன், 14ம் தேதி வரை வெளியிடுவதற்கு தடை விதித்திருந்தது. மேலும், இந்தப் படத்தை பார்த்து கருத்து தெரிவிக்கும்படி, திரைப்பட தணிக்கை குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் திரைப்பட தணிக்கைக் குழு கூடுதல் அவகாசம் கேட்டுச்சு. அதை ஏற்காத ஐகோர்ட் படத்தை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. அதே நேரத்தில் படத்தில் இருந்து சர...
ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகள் 7 பேர் ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு அவசர கடிதம்!

ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகள் 7 பேர் ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு அவசர கடிதம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  தற்போதைய ஆளும் ஆட்சி வெற்றி வாய்ப்பை இழக்குமானால் அதிகார மாற்றம் சுமுகமாக இருக்காது என்றும், அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படலாம் என்றும் ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகள் 7 பேர் ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோருக்கு, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஜி.எம்.அக்பர் அலி, அருணா ஜெகதீசன், டி.ஹரிபரந்தாமன், பி.ஆர்.சிவக்குமார், சி.டி.செல்வம், எஸ்.விமலா, பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். அதில் அவர்கள், "பெரும்பான்மையான மக்களின் மனதில் 'உண்மையான அச்சங்கள்' உள்ளன. மக்களின் இந்த அச்சத்தை சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புகளும் ஆர்வ...
பா.ஜ.க.வில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் சொல்கிறேன்… உங்களுடைய ஆணவம்தான் பா.ஜ.க.வை வீழ்த்தப் போகிறது- முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்

பா.ஜ.க.வில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் சொல்கிறேன்… உங்களுடைய ஆணவம்தான் பா.ஜ.க.வை வீழ்த்தப் போகிறது- முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
இந்தியாவைக் காக்கும் வெற்றிப் பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறேன்! திருச்சிப் பாதை – வெற்றிப் பாதை! தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை. கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று (22-03-2024) திருச்சியில் நடைபெற்ற ’திருச்சி, பெரம்பலூர்’ மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு ஆற்றிய எழுச்சியுரையின் விவரம் வருமாறு: டெல்லி செங்கோட்டையை யார் கைப்பற்ற வேண்டும் என்று தீர்மானிக்க இந்த மலைக்கோட்டை மாநகரில் கடல்போல் திரண்டிருக்கும் தமிழ்ச் சொந்தங்களே! திருச்சி என்றாலே திருப்புமுனை! இப்போது இந்தியாவுக்கே திருப்புமுனை ஏற்படுத்த நாம் திரண்டிருக்கிறோம்! பல திருப்புமுனைகளை தமிழ்நாட்டுக்கு கொடுத்து, தமிழினத்தின் முன்னேற்றத்துக்காக தன்னுடைய வாழ்நாளெல்லாம் உழைத்த தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டுப் பரிசாக, ஒரு மகத்தா...