புதன்கிழமை, ஜூலை 22
Shadow

politics

2 மாநில தேர்தல் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறதா பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி

2 மாநில தேர்தல் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறதா பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் மரணம் குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருந்த பிரதமர் மோடியை பிரகாஷ் ராஜ்  என்னை விட மோடி ஒரு சிறந்த நடிகர்" என விமர்சித்தார். அது முதல் தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் அரசுக்கு எதிராக பல்வேறு     கேள்விகளை எழுப்பி வருகிறார். இந்த நிலையில் பாரதீய ஜனதா குஜராத், மற்றும் இமாசலபிரதேசம்  ஆகிய 2 மாநிலங்களில் வெற்றி பெற்று உள்ளது.  இது குறித்து  நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் அன்புள்ள பிரதம மந்திரி, வெற்றிக்கு வாழ்த்துக்கள் ... ஆனால் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார். முன்னதாக பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் மரணம் குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருந்த பிரதமரை பிரகாஷ் ராஜ் என்னை விட மோடி ஒரு சிறந்த நடிகர் என விமர்சித்திருந்தார். பிரதமரின் நடவடிக்கைக்கு எதிராகவும், தமிழக அரசியலின் தற்போதையை ந...
குஜராத் தேர்தல் முடிவு… தம்பட்டம் அடித்த பா.ஜனதாவிற்கு மக்கள் அடித்த எச்சரிக்கை மணி – சிவசேனா விமர்சனம்

குஜராத் தேர்தல் முடிவு… தம்பட்டம் அடித்த பா.ஜனதாவிற்கு மக்கள் அடித்த எச்சரிக்கை மணி – சிவசேனா விமர்சனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
குஜராத்தில் பா.ஜனதா 99 தொகுதிகளை வென்று தொடர்ந்து 6-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. பா.ஜனதாவுக்கு கடும் சவால் அளித்த காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) ஒரு தொகுதியில் வென்றது.  பாரதீய பழங்குடியினர் கட்சிக்கு 2 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றனர். பாரதீய ஜனதா 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என நிர்ணயம் செய்து பணியாற்றியது, ஆனால் 100 தொகுதிகளை கூட எட்டமுடியவில்லை.  இவ்விவகாரம் தொடர்பாக பிற எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. மம்தா பானர்ஜி “இப்போதைய நேரத்தில் ஒரு சமமான தீர்ப்பை வழங்கிய குஜராத் மாநில மக்களுக்கு வாழ்த்துக்கள். இது தற்காலிகமான மற்றும் அவமானப்படாத வெற்றியாகும், இருப்பினும் பாரதீய ஜனதாவிற்கு இது தார்மீக ரீதியிலான தோல்விதான். பொதுமக்களுக்கு நேரிட்ட அட்டூழியங்கள், அதீத கவலை மற்றும...
வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதில் உலகிலேயே இந்தியர்கள் முதலிடம்: ஐ.நா அறிக்கை

வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதில் உலகிலேயே இந்தியர்கள் முதலிடம்: ஐ.நா அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
2017-ம் ஆண்டுக்கான சர்வதேச இடம்பெயர்வோர் அறிக்கையை ஐ.நா வெளியிட்டுள்ளது. இதில் 1.65 கோடி பேருடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதில் சரிபாதி இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் உள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டை ஒப்பிடும் போது வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. வளைகுடா நாடான ஐக்கிய அமீரகத்தில் மட்டும் சுமார் 33 லட்சம் இந்தியர்கள் இருக்கின்றனர். இது கடந்த 2000-ம் ஆண்டில் 9.7 லட்சமாக இருந்தது. அமெரிக்காவில் 10 லட்சமாக இருந்த எண்ணிக்கை தற்போது 23 லட்சமாக உயர்ந்துள்ளது. சவூதி அரேபியாவில் 22 லட்சம் பேரும், ஓமனில் 12 லட்சம் பேரும், குவைத்தில் 11 லட்சம் பேர் என வளைகுடா நாடுகளில் மட்டும் மொத்தம் 89 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் 13 லட்சம் இந்தியர்களும், கனடாவில் 6 ல...
ஜெ.,வின் வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை: விவேக் ஜெயராமன்

ஜெ.,வின் வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை: விவேக் ஜெயராமன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இளவரசியின் மகனும் ஜெயா தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் அவருடைய மகள் என்றும், அதைச் செய்தோம் இதைச் செய்தோம் என்றும் சிலர் அவதூறுகளை பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் ஆனபிறகும் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் சிலர் தங்கள்  விருப்பத்திற்கு கதை கற்பனைகளை கிளப்பிவிட்டு ஒரு மாபெரும் தலைவியின் புகழுக்கு களங்கம் கற்பிப்பது கொஞ்சமும் சகிக்க முடியாத மனசாட்சியற்ற செயல். வெற்று வார்த்தைகளாக சிலர் பேசும் இத்தகைய அவதூறுகளை ஊடக தர்மத்துடன் நிறைய ஊடகங்கள் வெளியிடாமல் தவிர்த்து வந்தாலும் சில ஊடகங்கள் பரபரப்புக்காக இதனை வெளியிடுவது வேதனை அளிக்கிறது. அவருக்கென்று யார் இருந்திருந்தாலும் அவர் மறைத்திருக்க வாய்ப்பே இல்லை. எவ்வித ஒளிவு மறைவு...
புயல்-மழை நிவாரணம்: பிரதமர் மோடியிடம் முதல்வர் அளித்த கோரிக்கை மனு

புயல்-மழை நிவாரணம்: பிரதமர் மோடியிடம் முதல்வர் அளித்த கோரிக்கை மனு

HOME SLIDER, NEWS, politics
ஒக்கி புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம், புயல் மற்றும் பருவ மழையினால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கீழ்க்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை சமர்ப்பித்தார்: 1. தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 747 கோடி உடனடியாக விடுவிக்க வேண்டும்; 2. தற்போது பேரிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரண தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும். குறிப்பாக, உயிரிழப்பிற்கு ரூபாய் 4 லட்சத்திலிருந்து ரூபாய் 10 லட்சமாகவும், ஊனமடைந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சத்திலிருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தவும், வாழை மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 13,500/-லிருந்து ரூபாய் 1,25,000/- ஆகவும், ரப்பர் மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18,000/-லிருந்து ரூபாய் 2,50,000/- ஆகவும் உயர்த்தப்பட வேண்டும்; 3. புயல், காற்று மற்றும் மழையி...
முன்னாள் நீதிபதி கர்ணன் விடுதலை ஆகிறார்

முன்னாள் நீதிபதி கர்ணன் விடுதலை ஆகிறார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க போலீசுக்கும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக நீதிபதி கர்ணன் தலைமறைவாக இருந்தார். இந்த காலத்தில் அவரது பதவிக்காலமும் முடிவடைந்தது. 40 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த அவர் கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி கோவையில் கைது செய்யப்பட்டார். அவரை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரியும், அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத ஜெயில் தண்டனையை ரத்து செய்யக்கோரியும் அவரது வக்கீல் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து கொல்கத்தா நகரில் உள்ள பிரசிடென்சி சிறைச்சாலையில் நிதிபதி கர்ணன் அடைக்கப்பட்டார். இ...
ஆர்.கே. நகர் தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் வாக்குப்பதிவு

ஆர்.கே. நகர் தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் வாக்குப்பதிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு நாளை மறுநாள் (21-ந் தேதி) இடைத்தேர்தல் நடக்கிறது. மதுசூதனன் (அ.தி.மு.க.), மருதுகணேஷ் (தி.மு.க. ), கரு.நாகராஜன் (பா.ஜனதா), தினகரன் (சசிகலா அணி), கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) மற்றும் சுயேட்சைகள் உள்பட 59 பேர் களத்தில் உள்ளனர். வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கடந்த சில நாட்களாக பிரசாரம் செய்தனர். அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.-எம்.எல்.ஏ.க் கள் தீவிர பிரசாரம் செய்தனர். தொகுதி முழுக்க வீதி வீதியாக சென்று அவர்கள் வாக்கு சேகரித்தனர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லியும், அவர் அறிவித்த திட்டங்களை ஆர்.கே. நகர் தொகுதியில் நிறைவேற்றிடவும் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர். தி.மு.க. வேட்பாளர்...
குஜராத் தேர்தலில் நோட்டாவுக்கு 5.5 லட்சம் வாக்குகள்… ஆளும் பாஜக அதிர்ச்சி

குஜராத் தேர்தலில் நோட்டாவுக்கு 5.5 லட்சம் வாக்குகள்… ஆளும் பாஜக அதிர்ச்சி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
குஜராத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 49.1 சதவீத வாக்குகள் விழுந்துள்ளன. எந்த வேட்பாளரையும் ஆதரிக்காத 5.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்து உள்ளனர். இது ஆளும் பாஜகவை கடும் அதிர்ச்சியாக்கி உள்ளது.   குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. 99 தொகுதிகளில் வெற்றி பெற்று 6-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளைப் பிடித்து வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், பாரதிய பழங்குடியினர் கட்சி 2 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகளில் பா.ஜ.க. 49.1 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பா.ஜ.க. பெற்ற வாக்குகள் 14724427. அடுத்து காங்கிரஸ் கட்சி 41.4 சதவீதம...
மோடி பிறந்த ஊரில் பா.ஜ.க.வை வீழ்த்திய காங்கிரஸ் பெண் வேட்பாளர்

மோடி பிறந்த ஊரில் பா.ஜ.க.வை வீழ்த்திய காங்கிரஸ் பெண் வேட்பாளர்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 17-9-1950 அன்று (அந்நாள் பம்பாய் மாகாணம்) குஜராத் மாநிலம், பிறந்த மெஹ்சானா மாவட்டத்துக்குட்பட்ட வட்நகர் என்ற ஊரில் பிறந்தார். இந்த ஊர் தற்போது உன்ஜா சட்டமன்ற தொகுதிக்குள் அடங்கியுள்ளது. நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் உன்ஜா சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக நாராயண் பட்டேல்(74) நிறுத்தப்பட்டார். அதே தொகுதி எம்.எல்.ஏ.வாக கடந்த 2012-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 19 ஆயிரத்து 529 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட பெண் வேட்பாளர் ஆஷா பட்டேல்(40) என்பவரிடம் தோல்வி அடைந்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் நாராயண் பட்டேலை எதிர்த்து போட்டியிட்ட ஆஷா பட்டேல் அப்போது தோல்வி அடைந்தார். அந்த நஷ்டக் கணக்கை தற்போதையை வெற்றியின் மூலம் லாபக் கணக்காக ஆஷா பட்டேல் மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
ஆர்.கே.நகர் தொகுதியை பேசாமல் ஏலம் விடுங்கள்..!  100 கோடியை தாண்டி பண வினியோகம் வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்..!

ஆர்.கே.நகர் தொகுதியை பேசாமல் ஏலம் விடுங்கள்..! 100 கோடியை தாண்டி பண வினியோகம் வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே.நகர் தொகுதியை பேசாமல் ஏலம் விடுங்கள்..! 100 கோடியை தாண்டி பண வினியோகம் வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்..! தமிழகத்தில் இனி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் பேசாமல் அரசியல் கட்சிகளுக்கு ஏலத்தில் விட்டு விடலாம். எந்த கட்சியோ அல்லது எந்த வேட்பாளரோ அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கிறார்களோ அந்த தொகையை கொண்டு அந்த தொகுதிக்கு தேவையான சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் உட்பட தொகுதியின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரலாம். இந்த முறையை தேர்தல் ஆணையம் கையாண்டால் பணம் பதுக்கல்... வெட்டு குத்து கலாட்டாக்கள்... கள்ள ஓட்டு புகார்... தேவையற்ற அலைச்சல்கள்... எதுவும் நடக்காது. அரசு பணமும் வீணாகாது. தமிழகத்தில் மட்டும் எப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அங்கே ஓட்டுக்கு பணமழை கொட்டுவது சமீபத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே பண மழை புகார் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில...