திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17
Shadow

NEWS

இசைஞானியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு மண்டியிட்ட ஆங்கில  நாளிதழ்..!

இசைஞானியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு மண்டியிட்ட ஆங்கில நாளிதழ்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
இசைஞானி இளையராஜாவிற்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டதை சாதியை சேர்த்து தலைப்பிட்டு செய்தி பிரசுரித்திருந்தது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். இந்த செய்திக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில் இன்றைய நாளேட்டில் தங்களின் தவறுக்காக அந்த நாளிதழ் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது. இளையராஜாவிற்கு பத்ம விருது கொடுத்ததன் மூலமாக தலித்துகளை கவர்ந்து விட்டனர் என்று தலைப்பிட்டு செய்தியை பிரசுரித்திருந்தது.இந்த தலைப்பிற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் சாதிப் பெயரை குறிப்பிட்டு இளையராஜாவின் பத்ம விருது செய்தியை பிரசுரித்திருந்ததற்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மன்னிப்பு கேட்டுள்ளது. இளையராஜாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் எந்த நோக்குடனும் இந்த செய்தி வெளியிடப்படவில்லை என்றும் தலைப்பில் தவறான அர்த்தத்தில் செய்தி பிரசுரிக்கப்பட்டதற்கு பகிரங்கமான மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அந்த நா...
உடைந்த காதலின் நினைவுகளை சுமக்க தனி மியூசியம்..!

உடைந்த காதலின் நினைவுகளை சுமக்க தனி மியூசியம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
காதல் யாருக்குத்தான் பிடிக்காது. கண்டதும் காதல், காணாத காதல், வாட்சாப் காதல், பேஸ்புக் காதல், ராங் நம்பர் காதல், போல பல வகையான காதல்கள் இருந்தாலும், ஒரே ஒரு வகையான ப்ரேக் அப் தான். எவ்வளவு காதல் செய்தாலும், பிரிந்து விட்டால், எந்த ஒரு செயலுமே செய்ய முடியாமல் தனிமையில் ஆழ்ந்து மிகவும் வருந்துவோம். காதலே கொடுமை, அதிலும், பிரிந்தால், அதிலிருந்து மீள்வது அதனினும் கொடுமை. உங்களுக்கு ப்ரேக் அப் ஆன பிறகு, என்ன செய்வதென்று புரியாமல், அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களையும், அவர்கள் உங்களுக்குக் கொடுத்த பரிசுகளையும் வைத்து வைத்து பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் அளவிற்கு இந்த இடம் அமையும். உலகில் எங்கெல்லாம் ப்ரேக் அப் ஆகி இருக்கிறதோ அதன் நினைவாக, க்ரூஷியாவில் மீயுசியம் ஆஃப் ப்ரோக்கன் ரிலேஷன்ஷிப்ஸ் என்ற பெயரில் காதலில் தோல்வி அடைந்தவர்களுக்காக தனியே அருங்காட்சி ஒன்றை உருவாக்கியு...
இந்தியப் பெண் புகாரால் பாலியல் வழக்கில் சிக்கிய ஹாலிவுட் பட அதிபர் ஹார்வி..!

இந்தியப் பெண் புகாரால் பாலியல் வழக்கில் சிக்கிய ஹாலிவுட் பட அதிபர் ஹார்வி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
பிரபல ஹாலிவுட் பட அதிபர் ஹார்வி வெயின்ஸ்டீனின் (வயது 65) திரைமறைவு வாழ்க்கையின் மர்மங்கள் பற்றி ‘நியூயார்க் டைம்ஸ்’ ஏடு தொடர்ந்து செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பல பெண்கள், அவர் மீது பாலியல் புகார்களை அடுக்கினர். இந்த நிலையில் அவரிடம் அந்தரங்க உதவியாளராக பணியாற்றிய இந்திய வம்சாவளிப்பெண் சந்தீப் ரேஹலும் அவர் மீது பாலியல் புகார் எழுப்பி உள்ளார். 2013-15ம் ஆண்டுகளில் ஹார்வி வெயின்ஸ்டீனிடம் பணியாற்றிய இவர், நியூயார்க் தென்மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளார். 11 பக்கங்கள் கொண்ட புகார் மனுவில் அவர், வெயின்ஸ்டீனின் நிறுவனத்தில் தான் பணியாற்றியபோது கடுமையான பாலியல் தொல்லை சூழலில் பணிபுரிய வேண்டியது இருந்ததாகவும், முடிவில்லா பாலியல் தாக்குதல்களுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், வீட்டுப்பணியாளர்கள் தங்கள் வேலையை செய்ய வருவதற்கு முன்பாக வெயின...
செக்ஸ் குற்றச்சாட்டில் அமெரிக்கா குடியரசுக்கட்சியின் நிதித்தலைவர் ராஜினாமா

செக்ஸ் குற்றச்சாட்டில் அமெரிக்கா குடியரசுக்கட்சியின் நிதித்தலைவர் ராஜினாமா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அமெரிக்காவில் ஆளும் குடியரசுக்கட்சியின் தேசிய கமிட்டி நிதித்தலைவராக இருப்பவர் ஸ்டீவ் வின். கோடீஸ்வர தொழிலதிபரான வின் மீது சில நாட்களுக்கு முன்னர் செக்ஸ் குற்றச்சாட்டு எழுந்தது. தனது அலுவலக பெண் பணியாளரை கட்டாயப்படுத்தி தனது உறவுக்கு பயன்படுத்தினார் மற்றும் மசாஜ் செய்யும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து, ஸ்டீவ் வின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்தது. ஆனால், மேற்கண்ட குற்றச்சாட்டுகளை ஸ்டீவ் வின் மறுத்தார். தனது முன்னாள் மனைவியே இந்த பொய் செய்திகளுக்கு காரணம் என அவர் தெரிவித்தார். எதிர்ப்புகள் வலுத்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஸ்டீவின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக குடியரசு கட்சி தேசிய கமிட்டி தலைவர் மெக் டேனியல் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்...
யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை தரவேண்டும்: ஓபிஎஸ்

யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை தரவேண்டும்: ஓபிஎஸ்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை தரவேண்டியது தனி மனித கடமை என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்த விஜயேந்திரர் சர்ச்சையில் அனைத்து கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த சர்ச்சையில் உங்கள் கருத்து என்ன என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கேட்ட செய்தியாளர்களுக்கு...   ”யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை தருவது ஒரு தனிமனிதனின் கடமை என்று தெரிவித்துக்கொள்கிறேன்” என்று சொன்னார் ஓ.பி.எஸ்....
ஜைன சந்நியாசியாக மாறிய பட்டதாரி பெண்..!

ஜைன சந்நியாசியாக மாறிய பட்டதாரி பெண்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜைன துறவியான பட்டதாரி பெண் சென்னையைச் சேர்ந்த மம்தா கட்டாரியா என்ற எம் பி ஏ படித்த பட்டதாரி இல்லற வாழ்க்கையை துறந்து, ஸந்நியாசம் வாங்கிக் கொண்டிருக்கிறர் .  இது குறித்த சென்னை அயனாவரத்தில் உள்ள டாடிபாடி ஜைன  ஆலயத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.. ‘ ஜைன மதத்தின் தத்துவங்களை எடுத்துரைப்பதற்காகவும், அதனை பரப்புரை செய்வதற்காக ஜைன துறவிகள் சுற்றுபயணம் மேற்கொள்வதுண்டு. அது போன்ற தருணங்களில் யாரேனும் துறவற வாழ்க்கையை வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தால், அவர்களுக்கு தீக்ஷா வழங்கப்படும். அதனை மூன்று நாள் வைபவமாகக் கொண்டாடுவார்கள். அது போன்றதொரு விழா தான் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை தி நகரில் வசித்து வரும் மம்தா கட்டாரியா என்ற 29 வயது எம் பி ஏ படித்த பட்டதாரி பெண் சாதாரண லௌகீக வாழ்க்கையை புறந்தள்ளி துறவியாக வாழ உறுதி கொண்டிருக்கிறார். அவருக்கு இங்...
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது மரபல்ல  மட (த்தனமான) விளக்கம்..!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது மரபல்ல மட (த்தனமான) விளக்கம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பாஜக ராஜாவையும் சர்ர்ச்சைகளையும் பிரிக்கவே முடியாது போல... ஒன்னு அவர் பேசியது சிக்கலை ஏற்படுத்தும் அல்லது சிக்கல் வர்றமாதிரி அவர் பேசுவார்... இந்த முறை அவர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சங்கர மடத்தின் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்து சிக்கலை ஏர்படுத்திக் கொண்டார். ஆண்டாள் குறித்து தினமணி நாளிதழில் வைரமுத்து தவறாக எழுதியதாக சர்ச்சை கிளம்பியதையடுத்து வைரமுத்துவும் தினமணி ஆசிரியர் வைத்தியநாதனும் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதியில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கடந்த சில நாட்கலாக பலத்த சர்ச்சைகளும், விவாதங்களும் நடந்து வந்த நிலையில் ,  வைத்தியநாதன் ஆண்டாள் சன்னதியில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டார். அதே சமயம் , இவ்விவகாரத்தில் வைரமுத்து  ‘வருத்தம்’ மட்டும் தெரிவித்த  செயலை மறக்கடிக்கும் விதமாக புது விவகாரம் கிடைத்துள்ளது. சென்னையில் பா...
‘தமிழக அரசியலில் கால் பதிக்கும் எண்ணம் இல்லை’ நடிகை விஜயசாந்தி

‘தமிழக அரசியலில் கால் பதிக்கும் எண்ணம் இல்லை’ நடிகை விஜயசாந்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
 நடிகையும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான விஜயசாந்தி   கூறியதாவது:– நான் தமிழக அரசியலில் ஈடுபடப்போவதாக வதந்திகள் உலா வருகின்றன. அதில் உண்மையில்லை. தமிழக அரசியலில் கால் பதிக்கும் எண்ணம் இல்லை. ஆந்திர அரசியலிலேயே தீவிரமாக ஈடுபடுவேன். காங்கிரஸ் கட்சி எந்த பொறுப்பை கொடுத்தாலும் ஏற்றுக்கொண்டு பணியாற்றுவேன். சந்திரசேகரராவ் ஆட்சி மீது தெலுங்கானா மக்கள் அதிருப்தியில் உள்ளனர். 2019–ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. ஆனால் ராகுல்காந்தி போட்டியிட சொன்னால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட தயார். விரைவில் தென் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கொண்டுவர பிரசாரம் செய்வேன்....
இந்தியா வந்துள்ள ஆசியான் நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

இந்தியா வந்துள்ள ஆசியான் நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இந்திய குடியரசு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் சிறப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த விழாவில் ஆசியான் கூட்டமைப்பை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். மேலும் ஆசியான் அமைப்பில் இந்தியா இணைந்ததன் 25-ம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் நடைபெறும் சிறப்பு மாநாட்டிலும் அவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக இந்தோனேஷியா, சிங்கப்பூர், வியட்நாம், மலேசியா, தாய்லாந்து, மியான்மர், பிலிப்பைன்ஸ், புரூனே, லாவோஸ் மற்றும் கம்போடியா நாட்டு தலைவர்கள் இந்தியா வந்துள்ளனர். டெல்லி வந்திருக்கும் இந்த தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் மியான்மர் தலைவர் ஆங்சான் சூகி, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே மற்றும் வியட்நாம் பிரதமர் ஜுவான் பக் ஆகியோருடன் நேற்று முன்தினம் தனித் தனியே பேச்சுவார்த...
விருது அறிவித்திருப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை: இளையராஜா

விருது அறிவித்திருப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை: இளையராஜா

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டள்ளது. இளையராஜாவிற்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு நடிகர்கள் ரஜினி, கமல், விஷால் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விருது பெறுவது பெற்றி இளையராஜா கூறும்போது, ‘பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் மத்திய அரசு என்னை கௌரவித்ததாக கருதவில்லை என்றும் தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்ததாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்....