ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 7
Shadow

சினி நிகழ்வுகள்

முன்ஜாமீன் கேட்டு பைனான்சியர் அன்புசெழியன் ஐகோர்ட்டில் மனு

முன்ஜாமீன் கேட்டு பைனான்சியர் அன்புசெழியன் ஐகோர்ட்டில் மனு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
கந்துவட்டி கொடுமையால் திரைப்பட இணை தயாரிப்பாளரும், நடிகர் சசிக்குமாரின் நெருங்கிய உறவினருமான அசோக்குமார் கடந்த 21-ந்தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு சினிமா பைனான்சியர் ஜி.என்.அன்புசெழியன் தான் காரணம் எனக் குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலைக்குத் தூண்டியதாக மதுரை கீரைத்துரை மேலத்தோப்பைச் சேர்ந்த ஜி.என்.அன்புசெழியன்(வயது 50) மீது குற்றம் சாட்டி, அவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி ஐகோர்ட்டில் அன்புசெழியன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- இந்த வழக்கில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. பி.அசோக்குமாருக்கும் எனக்கும் எந்தவித நேரடி தொடர்போ, மறைமுக தொடர்போ இல்லை. சசிக்குமார் ந...
அதிக தொகைக்கு விலைபோன விஷாலின் `இரும்புத்திரை’

அதிக தொகைக்கு விலைபோன விஷாலின் `இரும்புத்திரை’

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
`துப்பறிவாளன்' படத்தை தொடர்ந்து விஷால் அடுத்ததாக, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை' படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்திலும் நடித்து வருகிறார். இதில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்துவரும் `இரும்புத்திரை' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆக்சன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன் மற்றும் டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் கேரள ரிலீஸ் உரிமை அதிக தொகைக்கு விலைபோயுள்ளதாகவும், அதனை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் கைப்பற்றி...
பைனான்சியர் அன்புச்செழியனை  ஏமாற்றினாரா சிவி.குமார்..?!

பைனான்சியர் அன்புச்செழியனை ஏமாற்றினாரா சிவி.குமார்..?!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  நம்பிக்கை நாணயம் அற்றுப்போனதா தமிழ் திரையுலகம்...! பைனான்சியர் அன்புச்செழியனை ஏமாற்றினாரா சிவி.குமார்..?! இரு கடன்... ஒரு செட்டில்மெண்ட்... தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நேர்மையான நடவடிக்கைகள் ஒழிந்துபோய் ஒருவரை ஒருவர் குற்றம்சுமத்தி குறை சொல்லி அடுத்தவர் பணத்தை ஏமாற்றி பிரபலம் என்ற போர்வையில் ஒளிந்து கொள்ளும் அவலம் அதிகரித்து வருகிறது. சினிமா தொழில் என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் நடந்து வந்த நிலை மாறி இப்போது நாக்கில் தேன் தடவி அந்த தேனில் விஷம் வைக்கும் அதிர்ச்சிகளும் அதிகரித்து வருகிறது. சரி விஷயத்துக்கு வருவோம்... பிரபல இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் சசிக்குமார் மதுரையை சேர்ந்த அன்புச்செழியன் என்ற பைனான்சியரிடம் வாங்கிய கடனை திருப்பி தராத நிலையில் ‘பைனான்சியர் அன்புச்செழியன் மிக மோசமாக என்னை மிரட்டியதால் நான் தற்கொலை செய்கிறேன்’ என்று சசிக்குமாரி...
மக்கள் மனசுல யாரு என்ற மாபெரும்  கருத்துக்கணிப்பின் முடிவுகள்

மக்கள் மனசுல யாரு என்ற மாபெரும்  கருத்துக்கணிப்பின் முடிவுகள்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
நியூஸ்7தமிழில் மக்கள் மனசுல யாரு என்ற மாபெரும்  கருத்துக்கணிப்பின் முடிவுகள் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது .ரஜினி, கமல், விஜய் மூவரில் திரையுலகிலிருந்து அரசியலுக்கு அடுத்து யார் வருவார்? வந்தால் மக்களின் ஆதரவு எப்படி இருக்கும்? என்பதை அறிந்துகொள்ளும் வகையில் மாபெரும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புள்ளியியல் வல்லுநர் குழுவின் வழிகாட்டுதலின்படி வயது, பாலினம், மதம், கல்வித்தகுதி மற்றும் தொழில் அல்லது பணி அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் இந்த கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. நியூஸ்7 தமிழ் மற்றும் குமுதம் குழுமம் இணைந்து நடத்தும் “மக்கள் மனசுல யாரு” மாபெரும் கருத்துக்கணிப்புக்கான முடிவுகள் இந்தவாரம் 27, 28, 29, 30 ​ மற்றும் டிசம்பர் 1​  ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு வெளியிடப்படுகிறது....
சுசிகணேசனின் திருட்டுப்பயலே 2 படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் நயனா

சுசிகணேசனின் திருட்டுப்பயலே 2 படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் நயனா

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உருவான திரைப்படம் "திருட்டுப்பயலே 2". இப்படத்தின் முன்னோட்டமும், பாடல்களும், டிரைலரும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில்  ‘திருட்டுப்பயலே 2’ படத்திற்காக அனைத்து ரசிகர்களும் ஆவலாய் காத்திருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு சேர்க்கும் விதமாக இயக்குநர் சுசிகணேசன் திருட்டுப்பயலே 2 படத்தில் நயனா எனும் புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தியுள்ளார்.  நயனா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். உலகமெங்கும் திருட்டுப்பயலே 2 திரைப்படம் நவம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது....
ஆர்யா நடிப்பில் ஸ்டுடியோகிரீன் தயாரிக்கும் ‘கஜினிகாந்த்’

ஆர்யா நடிப்பில் ஸ்டுடியோகிரீன் தயாரிக்கும் ‘கஜினிகாந்த்’

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோகிரீன் பட நிறுவனம் மெகா பெருட்செலவில் தயாரிக்கும் படம் ‘கஜினிகாந்த்’ இதில் ஆர்யா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சயிஷா நடிக்கிறார். சந்தோஷ் இயக்கும் இந்த படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது.  இப்படத்தை ஹர ஹர மஹா தேவகி, மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து    படங்களை இயக்கிய சந்தோஷ் P ஜெயக்குமார் இயக்குகிறார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக “வனமகன்” சயிஷா நடிக்கிறார். மேலும் பாலமுரளி பாலு  இசையமைக்க, பல்லு அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா G.K படத்தொகுப்பை  கவனிக்க, கோபி ஆனந்த் கலைஇயக்கத்துக்கு  பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது....
தனுஷ் வெளியிடும் சிம்பு பட பாடல்கள்..!

தனுஷ் வெளியிடும் சிம்பு பட பாடல்கள்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
கோலிவுட் திரையுலகில் சிம்புவும் தனுஷூம் நண்பர்கள் என்று கூறி கொண்டாலும் இருவரும் போட்டி நடிகர்களாகவே பார்க்கப்பட்டு வருகின்றனர். இருதரப்பு ரசிகர்களும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மோதி கொள்வதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள்தான்இந்த நிலையில் தொழில் அளவில் போட்டியாளர்களாக இருந்தாலும் தாங்கள் உண்மையான நண்பர்கள் என்பதை தற்போது நிரூபித்துள்ளனர். ஆம், சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகும் ‘சக்க போடு போடு ராஜா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.இந்த படத்தின் பாடல்களை வெளியிட நடிகர் தனுஷ் சம்மதித்துள்ளார். இந்த தகவலை இந்த படத்தின் ஹீரோ சந்தானம் தனது டுவிட்டரில் ஒரு வீடியோ செய்தி மூலம் உறுதி செய்துள்ளார்.ஒரே படத்தில் சிம்பு, தனுஷ் இணைவது கோலிவுட் திரையுலகில் ஆச்சரியத்தை வரவழைப்பது மட்டுமின்றி இருதரப்பு ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்...
டிசம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது சசிகுமாரின் ‘கொடி வீரன்’

டிசம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது சசிகுமாரின் ‘கொடி வீரன்’

CINI NEWS, HOME SLIDER, NEWS, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், முன்னோட்டம்
  சசிகுமார் நடித்துள்ள ‘கொடி வீரன்’ படம், 7ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் ‘கொடி வீரன்’. பூர்ணா, மகிமா நம்பியார், சனுஷா என மூன்று ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சசிகுமார், தன்னுடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.தீபாவளிக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம், போதுமான தியேட்டர்கள் கிடைக்காததால் வருகிற 30ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சசிகுமாரின் அத்தை மகனும், கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிர்வாகியுமான அசோக் குமார், கடந்த வாரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்புச்செழியனிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து , அன்புச்செழியன் தலை மறைவானார். அவர்  மீது வழக்குப்பதிவு செய...
வைரமுத்து – ஏ.ஆர்.ரகுமான் இருவரையும்  மலை உச்சியில் 5 நாட்கள் ஆனந்த சிறை வைத்த மணிரத்னம்

வைரமுத்து – ஏ.ஆர்.ரகுமான் இருவரையும் மலை உச்சியில் 5 நாட்கள் ஆனந்த சிறை வைத்த மணிரத்னம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  ஏ.ஆர்.ரகுமான்-வைரமுத்து கூட்டணியுடன் மணிரத்னம் தனது புதிய பட வேலையை தொடங்கி இருக்கிறார். கோவா அருகில் உள்ள மலை உச்சியில் பாடல் ‘கம்போசிங்’ நடந்தது. ‘காற்று வெளியிடை’ படத்தையடுத்து மணிரத்னம், ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, பகத்பாசில், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தனது படத்தில் பாட்டுக்கு தனிக்கவனம் செலுத்தும் மணிரத்னம், தனது வெற்றிக்கூட்டணியான கவிஞர் வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இருவரையும் பாடல் ‘கம்போசிங்’குக்காக ஒரு மலை உச்சிக்கு அழைத்து சென்று 5 நாட்கள் ஆனந்த சிறை வைத்துவிட்டார். கோவாவில் இருந்து 4 மணி நேரம் சாலை வழியே பயணித்தால், மராட்டிய மாநிலத்தின் மலைக்குன்றில் சென்று முடிகிறது. அதுதான் இந்தியாவின் மேற்கு எல்லை. அந...
கேபிள் டி.வி உரிமையாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் நேரடியாக இணைக்கப்பட உள்ளனர்- விஷால்

கேபிள் டி.வி உரிமையாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் நேரடியாக இணைக்கப்பட உள்ளனர்- விஷால்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  நெல்லை மாவட்டம் அம்பை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக விஷால் நடிக்கும் இரும்புத்திரை என்ற புதிய சினிமா படப்பிடிப்பு நடந்து வருகிறது. அம்பை ஆற்றுச்சாலை, தாமிரபரணி ஆறு, அம்பை தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக நடிகர் விஷால் நடித்து வருகிறார். இதற்காக அம்பை தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளியின் ஒரு பகுதி, ராணுவ பயிற்சி மையம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. நேற்று ராணுவ மையத்தில் இருந்து விஷால் வெளியே நடந்து வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதற்கிடையே அம்பை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த தனியார் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற முறையில் விஷால் கலந்துரையாடல் நடத்தினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– புதுப்படங்களின் ப...