செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

சினி நிகழ்வுகள்

எஸ்.எஸ்.ஆர் பேரன் அறிமுகமாகும் “கருத்துக்களை பதிவு செய்”..!

எஸ்.எஸ்.ஆர் பேரன் அறிமுகமாகும் “கருத்துக்களை பதிவு செய்”..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
திரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக காலூன்ற வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கையை பட தயாரிப்பிலும் வினியோகத்துறையிலும் அழுத்தமாக பதிய வைத்த நிறுவனம்RPM cinemas. ஜித்தன் 2 , 1 AM படங்களை தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் களத்தூர் கிராமம், 143 ஆகிய வெளியார் படங்களை சொன்ன தேதியில் வெளியிட்டு உள்ளது. இந்த நிறுவனம் அடுத்ததாக ஒரு குறுகிய கால தயாரிப்பாக    “ கருத்துக்களை பதிவு செய் ” என்ற படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின்  பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. கதை திரைக்கதை வசனத்தை எழுதி இருப்பவர் ராஜசேகர்.   இவர் மிர்ச்சி சிவா நடித்து வெளியான யா யா படத்த...
ஹிச்சி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப்படுத்தும் ராணி முகர்ஜி..!

ஹிச்சி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப்படுத்தும் ராணி முகர்ஜி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள், வீடியோ
ராணி முகர்ஜி தனது ஹிச்சி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப் படுத்த உள்ளார். ராணி ஹிச்சி திரைப்படத்தின் மூலம் சமூகத்திற்க்கு மிகமுக்கிய கருத்தினை தெரிவிக்க உள்ளார்.இப்படத்தின் விளம்பரம் மற்றும் ரிலீஸை 5 மொழிகளில் செய்யது இப்படத்தினை அதிகமாக மக்களிடையே கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். https://youtu.be/nLSaCFlXn-g ராணி முடிந்தவரை ஹிச்சி திரைப்டத்தை அதிக மக்களிடையே கொண்டு செல்ல மராத்தி,பெங்காலி,பஞ்சாபி,ஹிந்தி மற்றும் போஜ்புரி போன்ற 5 வித்யாசமான மொழிகளில் படத்தினை ரிலீஸ் செய்யவுள்ளார்.மேலும் தொலைக்காட்சி மூலமும் விளம்பரத்தை தொடங்கி இப்படத்தினை மக்களிடையே கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். "தனக்கு ஹிச்சி திரைப்படத்தின் கதை ஒரு நடிகையாகவும் மற்றும் பொதுமக்கள் நிலையிலும் வைத்து பார்க்கும்போது மிகவும் விரும்ப வைத்துள்ளது.முடிந்தவரை இப்படத்தினை மக்களிடையே கொண்டு செல்ல முயற்ச்சிப்பேன் " ராணி கூறி...
தில் ஆக சமூகத்துக்கு தீர்வு சொல்லும் வீரத்தேவன் – விமர்சனம்

தில் ஆக சமூகத்துக்கு தீர்வு சொல்லும் வீரத்தேவன் – விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, சினி நிகழ்வுகள்
ஒத்த வார்த்தை உசுர அறுக்கும்ணு ஊர்ல ஒரு பழமொழி இருக்கு... அப்படி அப்பா சொன்ன ஒரு வார்த்தையால ஒரு உசுரு போக காரணமான நண்பனின் வலி மிகுந்த கதைதான் வீரத்தேவன். இதுக்கெல்லாம் ஒரு தில்லு வேணும்னு சொல்லுவாங்களே அந்த தில் முதல் படத்துலயே அறிமுக ஹீரோ கவுஷிக் கோபாலனுக்கும், வில்லனா நடித்திருக்கும் ஹீரோவின் நிஜ அப்பா கோபாலனுக்கும் ரொம்பவே இருக்கு. பையன் அறிமுகம் ஆகும் முத படத்துல முத சீனே ஹீரோவ உசுரா பழகின நண்பனே கரகரன்னு கழுத்தறுத்து கொன்னா... நெனச்சி பாக்கவே அடிவயிரு பகீர்னு இருக்கில்ல... இப்படித்தான் தொடங்குது வீரத்தேவன்... படத்தோட பேருக்கேத்த மாதிரியே பட ஆரம்பமே தேவர் ஜெயந்தியில போடுற ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மாதிரி ஒரு பாட்டு வச்சி அங்கிட்டு இங்கிட்டு நகர விடாம சீட்ல உக்கார வைக்கும் இயக்குனர். முதல் படம்னு எந்த டென்ஷனும் இல்லாம அடிச்சி ஆடுற ஹீரோ கவுஷிக் கோபாலன். நல்லவனா வில்லனான...
இந்தியாவில் எடுக்கப்பட்ட விளையாட்டு தொடர்பான படங்களுக்கு ஈரானில் விருதுகள்..!

இந்தியாவில் எடுக்கப்பட்ட விளையாட்டு தொடர்பான படங்களுக்கு ஈரானில் விருதுகள்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஈரான் தலைநகர் தெஹ்ரானில், விளையாட்டை மையமாக கொண்ட சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்றது. இதில் விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கும் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சல்மான்கான்- அனுஷ்கா சர்மா நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி, வசூல் சாதனை படைத்த ‘சுல்தான்’ படத்துக்கு 3 விருதுகள் அளிக்கப்பட்டன. அதுபோல், கிரிக்கெட் வீரர் சச்சினின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்திருக்கிறது. சிறந்த இயக்குனருக்காக ஹெல்மர் ஜேம்ஸ் எர்ஸ்கினும், சிறந்த படத்திற்காக ரவி பக்ச்சாண்ட்காவும் பெற்றிருக்கிறார்கள். இது குறித்து இயக்குனர் கூறும்போது, ‘இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் பற்றிய கதையில் என்னுடைய பணி உலகளவில் பாராட்டப்பட்டதற்கு பெருமை படுகிறேன். இந்த படத்தின் ஸ்கிரிப்டுக்கு சச்சின், அவரது குடும்பத்தினர் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் உதவி புரிந்தார...
நான் ஒரு ரஜினி ரசிகை பக்கா பட விழாவில் நிக்கிகல்ராணி அறிவிப்பு..!

நான் ஒரு ரஜினி ரசிகை பக்கா பட விழாவில் நிக்கிகல்ராணி அறிவிப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அறிமுக இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பிந்து மாதவி, சூரி, ரவி மரியா, சதீஷ், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, இமான் அண்ணாச்சி, வையாபுரி முதலானோர் நடிக்கும் படம் ‘பக்கா’. சத்யா இசை அமைக்கும் இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ‘பக்கா’ படம் குறித்து இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா பேசும்போது, ‘‘இதுவரை வெளிவந்த படங்களில் ஒரு காட்சியிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ தான் திருவிழாவை பார்த்திருப்பீர்கள். ஆனால் ‘பக்கா’ படத்தை முழுக்க முழுக்க திருவிழா பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. ‘பக்கா’ ஜாலியான ஒரு காமெடி படமாக இருக்கும்! இந்த கதையை படமாக்க நான் சந்திக்காத தயாரிப்பாளர்களே இல்லை! ஆனால் நான் தேடி சென்று சந்திக்காத ஒரு தயாரிப்பாளரான சிவகுமார் சார் என்னை கூப்பிட்டு இந்த கதையை படமாக்க முன் வந்தார். அவருக்கு என் வாழ்நாள் முழுக்க நன்றி கடன் பட்டுள்ளேன்...
ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்ட இயக்குனர் களஞ்சியத்தின் முந்திரிக்காடு பட முதல் போஸ்டர்..!

ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்ட இயக்குனர் களஞ்சியத்தின் முந்திரிக்காடு பட முதல் போஸ்டர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
முந்திரிக்காடு “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஆதி திரைக்களம் சார்பில் தயாரிக்கப்படும் முந்திரிக்காடு படத்தை மு.களஞ்சியம் இயக்குகிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான C.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன் , பாவாலட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள். முந்திரிக்காட்டு மக்களின் வாழ்கை யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலையுயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதை இதில் பதிவு செய்கிறோம். என்கிறார் இயக்குனர் களஞ்சியம். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளிய...
காலா பட டப்பிங் தொடங்கினார் ரஜினிகாந்த்..!

காலா பட டப்பிங் தொடங்கினார் ரஜினிகாந்த்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ரஞ்சித் இயக்கத்தில் மிக பிரமாண்டமான செலவில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் காலா படப்பிடிப்பு முடிந்து அடுத்தகட்ட பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக டப்பிங் பணிகளில் ரஜினிகாந்த் பிசியாகியிருக்கிறார். இதற்காக டப்பிக் தியேட்டருக்கு வந்த ரஜினியை டப்பிங் தியேட்டர் நிர்வாகி கல்யாணம் வரவேற்றார். அவரோடு காலா இயக்குனர் ரஞ்சித் உடனிருந்தார்....
“எனக்கு கிடைக்கும் ஹீரோக்களை ரஜினி- கமலாக பார்க்கிறேன்” – இயக்குனர் பூபதி பாண்டியன்!

“எனக்கு கிடைக்கும் ஹீரோக்களை ரஜினி- கமலாக பார்க்கிறேன்” – இயக்குனர் பூபதி பாண்டியன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கமர்ஷியல் படங்களை நூறு சதவீதம் நகைச்சுவை கியாரண்டியுடன் தரக்கூடியவர் தான் இயக்குனர் பூபதி பாண்டியன். இவர் வசனங்கள் எழுதிய வின்னர், கிரி ஆகிய படங்களின் காமெடி காட்சிகள் தான் இப்போதும் டாப் டென் காமெடிகளில் இடம்பிடித்திருக்கின்றன. அதேபோல இவர் இயக்கிய தேவதையையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை உள்ளிட்ட படங்களில் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் நகைச்சுவைக்கும் சரிவிகித முக்கியத்துவம் கொடுத்திருந்தார். அப்படிப்பட்டவரின் இயக்கத்தில் விமல் - ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ படம், வரும் ஜன - 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ சங்கர், சாந்தினி, கார்த்திக் குமார், வம்சி கிருஷ்ணா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திர பட்டாளத்துடன் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப்படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குனர் பூபதி பா...
சென்சாரில் ‘யு/ஏ’: பிப்.9-ம் தேதி வெளியாகிறது ‘கலகலப்பு 2’

சென்சாரில் ‘யு/ஏ’: பிப்.9-ம் தேதி வெளியாகிறது ‘கலகலப்பு 2’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
'கலகலப்பு 2' படத்துக்கு சென்சாரில்  யு/ஏ சான்றிதழ் கிடைத்ததை தொடர்ந்து, பிப்ரவரி 9-ம் தேதி படம்  வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. டிசம்பரில் 'சங்கமித்ரா' படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக, அக்டோபரில் 'கலகலப்பு 2' படப்பிடிப்பைத் தொடங்கினார் சுந்தர்.சி. அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு தயாரித்து வந்தார். பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டது படக்குழு. ஆனால், பல்வேறு படங்கள் வெளியானதால் பொறுமை காத்தது. இறுதிக்கட்டப் பணிகள் அனைத்துமே முடிவடைந்ததைத் தொடர்ந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். 'யு/ஏ' சான்றிதழ் கிடைக்கவே, பிப்ரவரி 9-ம் தேதி 'கலகலப்பு 2' வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. காரைக்குடி, காசி மற்றும் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் ஜீவா, ஜெய், கத்ரீன் தெரசா மற்றும...
நையாண்டி, நக்கல் விவகாரத்தில் சூர்யாவிடம் தனியார் டிவி மன்னிப்பு கேட்டது..!

நையாண்டி, நக்கல் விவகாரத்தில் சூர்யாவிடம் தனியார் டிவி மன்னிப்பு கேட்டது..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமித்ப் பச்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமிதாப்புடன் சூர்யா நடிக்க உள்ளதை கிண்டல் அடித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இரு தொகுப்பாளினிகள் பேசினர். சூர்யாவின் உயரத்தை கேலி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. இது சூர்யா ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த தொகுப்பாளினிகளை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி, நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. என்று சூர்யா கூறியிருக்கிறார். இந்நிலையில...